Skip to main content

Posts

Showing posts from August, 2023

ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா

 ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா பத்து வயது இருக்கலாம். சென்னை ஐஸ் அவுஸ் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பா அழைத்துச் சென்றார். நல்ல கூட்டம். கதவு பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். சுவாரசியமாக எதுவும் இல்லாமல் ஸ்ரீ பக்த மீரா கதையைக் கேட்க ஆரம்பித்தேன். என்னையும் அறியாமல் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. ஒரு விதையை மண்ணில் விதைத்தால் முளைக்காது. முளைவிடத் தண்ணீர் சூரிய ஒளி இரண்டும் தேவை. அது போலத் தான் பக்தியும். நாம் விதைகளாக இந்த உலகில் புதைந்து கிடக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்ற தண்ணீரும், சூரியன் போன்ற பெருமாள் கருணையும் சேர்ந்தால் தான் பக்தி முளைவிடும். கிருஷ்ணப் பக்தி உண்டாவதற்குக் கோடி ஜன்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பக்தி என்பதற்கு definition கோகுலத்துக் கோபிகைகள். இதைப் படிக்கும் போது இன்னும் ஒரு கோடி ஜன்மம் எடுத்து புண்ணியம் செய்ய வேண்டுமே என்று தோன்றும். சுலபமான வழி எதுவும் கிடையாதா ? இருக்கிறது. அது ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்றவர்களின் உபன்யாசத்தைக் கேட்பது. கிருஷ்ணப் பக்தியை என் போன்று பலருக்கு

ராக்கெட்ரி சமாசாரம்

ராக்கெட்ரி சமாசாரம்  2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. இந்தப் படத்தை குறித்து கல்கி கடைசிப் பக்கத்தில் 2022ல் எழுதியது.  நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தை நானும் என் பையனும் சென்றோம். எப்படிப் பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன் வெளியே வருவது மாதிரிப் படத்தின் முதல் பகுதி ‘ஒரே டெக்னிக்கல்’ விஷயம் என்று பலரும் விமர்சித்துவிட்டார்கள்.  படத்தின் முதல் பகுதியில் ராக்கெட் என்ஜின் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஐஐடி மாணவர் போல  நடிகர் மாதவன் பொறியாளர் வகுப்பு எடுத்துவிட்டார். இடைவெளியின் போது டெஸ்ட் வைத்து அதில் பாஸ் செய்தால் தான் அடுத்த பகுதி படம் பார்க்கலாம் என்று சொல்லிவிடுவாரோ என்று பலரும் பாப்கார்ன் கூடச் சாப்பிடாமல் இருந்தார்கள்.  எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் படத்தில் தன் பங்களிப்பைக் கொடுத்து கடினமான விஷயத்தைச் சாதாரண சோளப்பொரி ரசிகரும் புரிந்துகொள்ளும் விதமாக சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.  ராக்கெட்ரி படத்தை இன்னும் பார்க்கவில்லை (அ)

சந்திரயான் - கோல் முதல் கோள் வரை..

சந்திரயான் - கோல் முதல் கோள் வரை.. ’ஃபஸ்ட் சிங்கிள்’ போன்ற மிகைப்படுத்தல் எதுவும் இல்லாமல் சந்திரயான் பிரபலமாகிவிட்டது. மென்மையான தரையிறக்கம் (ஃசாப்ட் லேண்டிங்) செய்யும் அந்த தருணத்தை நேற்று இந்தியா முழுவதும் கடைசி பந்து சிக்ஸர் போன்று பார்த்து பரவசப் பட்டார்கள். இதுவே ஒரு சாதனையாக சொல்லலாம். சந்திரயான்  ஏதோ ‘ராக்கெட்’ சமாசாரம் என்று பலர் நினைக்கலாம் ஆனால் அதற்கும் மேலே.   இன்னும் இரண்டே கிமீ தூரம் இருக்க சந்திரயான்-2  ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்ய முடியாமல் தொப் என்று கீழே விழுந்த போது பையன் நல்லா தான் படிச்சான், பரீட்சையில் மார்க் வாங்கவில்லை போன்ற மனோநிலைக்குச் சென்றோம். ஆனாலும், விண்வெளியை நாசா போன்ற பணக்கார நாடுகள் குத்தகைக்கு எடுத்துள்ளது என்பதை அந்த ஒரே இரவில் இந்தியா மாற்றியது.  சில அடிப்படையைப் புரிந்துகொண்டால் சந்திரயானை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே.    விண்வெளி என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றும் பரவசமூட்டும் ஒரு சொல்லாக இருக்கிறது. புவி தனது அச்சிலே சுற்றிக்கொண்டு கதிரவனையும் சுற்றும் ஒரு கோளம் என்று ஆர்யபட்டா பொயு-499ல் கூறினார். இணை கோடுகளின் ப

துறவியின் காலில் விழுந்த கதை

 துறவியின் காலில் விழுந்த கதை கங்கைகொண்ட சோழபுரத்தில் உடையார் ஸுப்ரஹ்மண்ய பட்டர் என்பவர் சோழசக்கரவர்த்தியின் ராஜசபையில் அமைச்சராகவும், புரோகிதராகவும் பணியாற்றினார். சாஸ்திரங்களில் வல்லவராகச் சக்கரவர்த்தியின் அபிமானத்துடன் உயர் பதவியிலிருந்தார். ஒரு சமயம் ஏதோ ராஜாங்க வேலையாகத் திருவரங்கம் வந்தார். அன்று நம்பெருமாள் உற்சவம். தீர்த்தவாரி கண்டருளுவதற்காக திருப்புன்னை மரத்துக்குக் கீழ் நம்பெருமாள் எழுந்தருளியிருந்தார். சுற்றும் அடியவர்களின் கோஷ்க்கு நடுநாயகமாக ஸ்வாமி எம்பெருமானார் திரிதண்டத்துடன் நின்றுகொண்டிருந்தார். அங்கே ஸுப்ரஹ்மண்ய பட்டர் இந்த காட்சியைக் கண்டார். கோயிலுக்கு வந்துகொண்டு இருந்த பக்தர்கள் கூட்டம் நேராக துறவியான எம்பெருமானார் திருவடிகளைத் தண்டனிட்டுக்கொண்டு இருந்தார்கள்(சேவித்துக்கொண்டு இருந்தார்கள்). அப்படித் தண்டனிட்டவர்களை எம்பெருமானார் ஒன்றும் சொல்லவில்லை. (கோயிலில் ஜீயரைத் தண்டனிட்டால் உடனே அவர்கள் இங்கே அப்படிச் சேவிக்கக் கூடாது என்று தடுத்துவிடுவார்கள். அதை இன்றும் நாம் பார்க்கலாம்). அவர்கள் தண்டனிடுகிறார்கள் ஆனால் சன்னியாசியான ஸ்ரீ ராமானுஜர் அதைத் தடுக்காமல் அங

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள்

 வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் ஏழு வருடங்கள் முன் கார் ஓட்டிக்கொண்டு பெங்களூரிலிருந்து வயநாடு வழியாகக் கேரளாவுக்குச் சென்றேன். போகும் வழியில் பந்திப்பூர் காட்டைக் கடந்து வரும் வழியில் சாலை குறுக்கே ஒரு பெரிய யானை கடக்க கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். சத்தியமங்கலம் வந்தபோது செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினார்கள். எங்கே போகிறேன் போன்ற விசாரிப்புகளுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பக்கத்திலிருந்தவர் “சார் இங்கேதான் ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிக்கொண்டு இருந்தான்” என்றார். அந்த அடர்ந்த காட்டை மீண்டும் பார்த்தபோது அதன் நிசப்தம் ஒரு வித பீதியைக் கிளப்பியது. யானை கடந்து போன பந்திப்பூரில்தான் 1994ம் வருடம் க்ருபாகர் சேனனி (Krupakar Senani) என்று இரண்டு பிரபல வனவிலங்குப் புகைப்படக்காரர்களை ‘பெரிய அதிகாரிகள்’ என்று நினைத்து வீரப்பன் கடத்தினான். பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவித்தான். (இருவரும் Birds, Beasts and Bandits - வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.) பந்திப்பூர் யானையும், நாங்களும் அன்று பயம் இல்லாமல் காட்டைக் கடந்து சென்றதற்கு வீர