Skip to main content

Posts

Showing posts from September, 2021

பக்தியினால் தமிழ் அர்ச்சனை

பக்தியினால் தமிழ் அர்ச்சனை  சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலை திருக்குடந்தை ஆராவமுதன் சந்நிதியில் சேவித்துக்கொண்டு இருந்த போது திடீர் என்று சுனாமி போல் ஒரு கூட்டம் வந்து, சில நிமிடங்களில் முழு சந்நிதியையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.  முக ஜாடை நேபாளம் என்று காட்டிக்கொடுத்தது.  கோயிலில் இருந்தவர்கள் “பேசாமல் இருங்க” “அங்கே தள்ளி போங்க” ”இப்படி வாங்க” போன்ற எதையும் சட்டை செய்யாமல் மனம் உருகி பெருமாளைச் சேவிப்பதே தங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தார்கள்.  அந்தக் குழுவில் நடக்க கூட முடியாத வயதான சில முதியவர்களும், மூதாட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்கு பெருமாளைக் கண்டதில் பரவசத்தைக் கண முடிந்தது. கோயிலுக்கு வெளியே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன் ”நாங்கள் நேபாளத்திலிருந்து வருகிறோம். ஸ்ரீவைஷ்ணவ திவ்ய தேசங்கள் சேவிக்க வந்துள்ளோம்” என்றார்கள். ”சக்கரபாணி கோயில் எப்படிப் போக வேண்டும்?”  என்று கேட்டுவிட்டு காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்து சென்றார்கள்.  இந்த மாதிரி கூட்ட அலையைப் பார்க்கும் போது நாம் பொதுவாக ‘கோவிந்தா’ கூட்டம் என்று எண்ணவும், எழுதவும் செய்கிறோம். பக்தியில் அவர்கள் சற்று தாழ

வயலழகிய சிங்கர்

வயலழகிய சிங்கர்  பெருமாள் பல அவதாரங்கள் செய்கிறார். ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்கு ஏதாவது தொல்லைகள் நேர்கிறது. கண்ணனுக்கு கம்சன்; ராமருக்கு இராவணன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கொஞ்சம் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் நாம் ஊட்டி கொடைக்கானல் செல்வது போல, பெருமாள் தேர்ந்தெடுக்கும் இடம் பெரியாழ்வாரின் மனம். அங்கே அவன் கவலை இல்லாமல் பத்திரமாக இருக்கலாம். ஆழ்வார் யசோதை போல பார்த்துக்கொள்வார். அதனால் தான் ஆழ்வாருக்கு ’விட்டு சித்தன்’ என்றே திருநாமம்.  அர்ச்சையில் பெருமாள், தங்களுக்கு விருப்பமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே கூடாரம் அமைத்து முகாமிட்டுத் தங்கிவிடுவார். ஆழ்வார்களின் தமிழ் பாசுரங்களின் மங்களாசாசனத்தால் தான் அக்கூடாரங்கள் திவ்ய தேசங்களாக மாறுகிறது.  சக்கரவர்த்தி திருமகனின் பட்டாபிஷேகத்தின் போது தான் ஆராதித்த பெருமாளையும் விமானத்தையும் விபீஷணனுக்குப் பரிசாகக் கொடுத்தார். விபீஷணன் தலையில் சுமந்துகொண்டு, இலங்கைக்கு செல்லும் வழியில் திருவரங்கத்தின் அழகில் மயங்கி கீழே இறங்கி, காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்து, விபீஷணனுக்காக ‘தென்திசை இலங்கை நோக்கி’ தன் திருப்பாதங்க

28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம்

28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம் திருவரங்கத்தில் மாலை சூரியன் அன்று வேகமாக கீழே இறங்கியது. ஆளவந்தார் உறக்கம் கலைந்து எழுந்துகொள்வது போலப் பரபரப்பாக காணப்பட்டார். காரணம் பெருமாள் புறப்பாட்டுக்கு நேரமாகிவிட்டது.  “அடடா! காலட்சேபத்தில் நேரம் போனதே தெரியவில்லை நமக்காக அழகியமணவாளன் காத்துக்கொண்டு இருக்க மாட்டானே!” என்று ஆளவந்தார் அவசரமாக நடக்க தொடங்கினார்.  வீதியில் எதிர்கொண்டு வந்தவர் ஒருவர் அவரை சேவித்துவிட்டு  “பெருமாள் வீதி புறப்பட்டை ஆரம்பித்துவிட்டார்!” என்று கூற நடை ஓட்டமாக மாறியது.  சிலர் ”அழகியமணவாளன் சாத்துப்படி காண கண் கோடி வேண்டும்!” என்று அரங்கனை காண ஓடினார்கள்.  மாடமாளிகை வீதியில் வாசலில் பெண்கள் வெள்ளை அரிசி  மாவில் கோலமிட்டு காத்துக்கொண்டு இருந்தார்கள். சிறுவர்கள் தத்தம் தந்தையின் தோள் மீது ஏறிக்கொண்டு நம்பெருமாளைத் தரிசிக்க ஆவலுடன்  காத்துக்கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். எல்லோர் வீட்டிலும் வெள்ளித் தட்டில் வெற்றிலையுடன், வாசனையான மல்லிகை, திருத்துழாயுடன், தோட்டத்துப் பழங்களை நம்பெருமாளுக்கு சம்பர்பிக்க கையில் ஏந்தியிரு

கண்ணன் கதைகள் - 12

கண்ணன் கதைகள் - 12 கண்ணன் காலடி பட்ட இடங்களுக்குச் செல்லும் போது மிகப் பெரிய பிரச்சனை அங்கே கிடைக்கும் பாலும் தயிரும் தான். நமக்கே இப்படி என்றால் கண்ணனுக்குப் பாவம் எப்படி இருந்திருக்கும் ? ஏன் என்று சொல்லுகிறேன்.  காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?  என்று திருப்பாவையில் வந்த அந்த கலகலப்பு ஓசை வந்த இடம் இது தான் என்று யசோதை தயிர் கடைந்த இடத்தைக் காண்பித்தார்கள். எட்டிப் பார்த்தால் Black hole மாதிரி இருந்தது. எதற்கு வம்பு என்று கண்ணனைச் சேவித்துவிட்டு வரலாம்  கோயில் வாசல் வரை வந்துவிட்டேன். அங்கே ஒரு பிரச்சனை.  பெரிய செட்டியில் பாலை காய்ச்சிக்கொண்டு இருந்தார்கள். பிரச்சனை இது இல்லை, பிரச்சனை பால் வாசனை தான். கண்ணனிடம் ’வெயிட்டீஸ்’ சொல்லிவிட்டு வாசனை வந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அருகில் சென்ற போது சூடாக இருந்தாலும் பரவாயில்லை அள்ளி சாப்பிடலாம் போல இருந்தது. கடைக்காரர் என் ஆர்வத்தைப் பார்த்து “பையா உள்ளே சேவித்துவிட்டு வா அதற்குள் பால் பாசுந்தியாகியிருக்கும்” என்றார்  ”இதோ வந்துவிட்டேன் கண்ணா!” என்று உடனே கிருஷ்ணனைச

கண்ணன் கதைகள் - 11

கண்ணன் கதைகள் - 11 ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாசுரங்களில் கண்ணன் எங்கும் வியாபித்திருப்பதைக் காணலாம். உன்னிப்பாக கவனித்தால் ஆண்டாளுக்கு வடக்கே கொஞ்சம் 'ஃசாப்ட் கார்ணர்’ இருப்பதைக் சுலபமாக கண்டுபிடிக்கலாம். “சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!” என்று திருப்பாவை முதல் பாட்டில் ஆரம்பிக்கிறார். பின்பு ”மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” என்கிறாள் பிறகு நாச்சியார் திருமொழியில் கவனித்தால் அங்கேயும் ஆயர்பாடி, மதுரைப்பதி என்று அவள் உள்ளம் வடக்கை இருக்கும் கண்ணனை நோக்கி தான். அதே போல் நாச்சியார் திருமொழியில் என் கண்ணனை கண்டீரே ? கண்டீரே ? என்று கேட்டுவிட்டு ‘விருந்தாவனத்தே கண்டோமே’ என்று முடிப்பதைப் பார்த்திருக்கலாம். அவளுக்கு கண்ணன் என்றால்  விருந்தாவனத்தில் தான் இருக்கிறான்! நம்மூர் கண்ணன் எல்லாம் ஆண்டாளுக்கு டூப்ளிகேட் விருந்தாவனத்தில் ’தூய பெருநீர் யமுனைத் துறைவன்’ தான் ஒரிஜினல் கண்ணன்!. விருந்தாவனம் என்றால் துளசி நிறைந்த வனம் ஒன்று ஒரு பொருள் இருக்கிறது. யமுனை கரையில் அழகு கொஞ்சும் இடத்தில் கூட்டம் கூட்டமாகப் பசுமாடுகளை இன்றும் பார்க்கலாம். ப்ருந்தா என்றால் கூட்டம் என

கண்ணன் கதைகள் - 10

கண்ணன் கதைகள் - 10  30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் உபன்யாசம் ஒன்றில் பண்டரீபுரத்தில் பாண்டுரங்கனாக அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கும் விட்டலனை விவரிக்க விவரிக்க கண்களில் கண்ணீர் வர, உடனே பண்டரீபூருக்கு உடனே செல்ல வேண்டும் என்று தோன்றியது.  உடனே போக முடியாவிட்டாலும், பதினைந்து வருடங்களுக்கு பிறகு சென்றேன்.  விட்டலனை ‘தொட்டு’ சேவிக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகமாகியது. காரில் சென்ற போது, மாலை ஏழு மணிவரை சூரியன் பிரகாசித்து வழி காண்பித்தது. எட்டு மணிக்கு பண்டரீபுரம் வந்தடைந்த போது  வெளிச்சம்  சித்ரா பௌர்ணமி உபயத்தால் “கதிர் மதியம்” போலத் தொடர்ந்தது.  இரவு ஒன்பது மணிக்கு கியூவில் சென்று நின்றுகொண்டோம்.  பண்டரீபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டும், உட்காரத் திண்ணையும் உண்டு.  இன்ஸ்டண்ட் எனர்ஜிக்கு ஐந்து ரூபாய்க்கு ஆரஞ்சு கலர் புளிப்பு மிட்டாய், கூடவே பக்தர்கள் பாடும் அபங்கங்களும் போதும்.  ஸ்ரீ ஏகநாதர் அவர்கள் அபங்கம் ஒன்றின் பொருள் இது:  “அணுவிலிருந்து பிரபஞ்சம் வரை நிறை

கண்ணன் கதைகள் - 9

 கண்ணன் கதைகள் - 9 கண்ணன் பற்றி கூறிவிட்டு மாடுகள் பற்றி கூறவில்லை என்றால் ? இதோ சில மாடு கதைகள்.  நந்திகிராம் போகும் வழியில் ஒடும் பஸ்ஸிலிருந்து ஒரு படம் எடுத்தேன்.  கயிற்றில் கட்டப்பட்ட சின்ன பிளஸ்டிக் கார்  இன்னொரு கையில் மாட்டை இணைக்கும் கயிறு.  என்ன ஒரு சிம்பிள் வாழ்க்கை !  இந்த வயதில் மாடு மேய்க்கப் போக வேண்டிய நிலை என்று நமக்கு தோன்றும் ஆனால் யோகா, தியானம் என்று செலவு செய்யாமல் அவன் முகத்தில் உள்ள சந்தோஷம் இன்று நம் பிள்ளைகளிடம் இல்லை.  பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சந்து பொந்து எல்லா இடங்களிலும் அவை நம்மைப் போல உலாவுகின்றன. கடைக்கு முன் நின்று சப்பாத்தி வாங்கிச் சாப்பிடுகிறது. சாலைக் குறுக்கே சென்று டிராபிக் ஜாம் செய்தால் அவற்றை ‘ஹார்ன்’ அடித்து யாரும் விரட்டுவதில்லை. சாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர்  தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள். உஜ்ஜைனில் ஸ்ரீராமான

கண்ணன் கதைகள் - 8

கண்ணன் கதைகள் - 8  பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாக போற்றப்படுகிறது.. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.  புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.  மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் - ’ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்  உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பது தான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.  விரகு, மண் சட்டி பானைகள், எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது ! கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள்.முழுவதும் ஈக்கோ ஃபிரண்டிலி! மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.  சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள். இதைத் தவிர . காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உ

கண்ணன் கதைகள் - 7

 கண்ணன் கதைகள் - 7  ’வியாக்கியான சக்ரவர்த்தி’ ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தனது உரையில் “அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே” என்று நகைச்சுவையான பதத்தை உபயோகித்துள்ளார்.  இதில் என்ன நகைச்சுவை என்று யோசிக்கலாம்.  பொதுவாகக் கோயிலில் கோஷ்டி முடிந்த பிறகு தீர்த்த பிரசாதம் கொடுப்பார்கள். அப்போது முதல் தீர்த்தம் இரண்டாம் தீர்த்தம்.. கடைசியில் பெண்களுக்கு என்ற வரிசையில் இருக்கும். விசேஷ காலங்களில் கோயிலில் கூட்டம் அதிகம் என்றால் அர்ச்சகர் சிலருக்கு கொடுத்துவிட்டு ‘சட்’ என்று முடிந்துவிட்டது என்று உள்ளே சென்றுவிடுவார். இதனால் பலருக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் தீர்த்தவாரி போது ’கூடியிருந்து குளிர்ந்தேலோர்’ என்பது போல பெருமாளின் தீர்த்த பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்கும்.  பெருமாளின் அவதார காலத்தில் ஸ்ரீராமாவதாரத்தில், சக்கரவர்த்தி திருமகனை சிலர் தான் பார்த்து அனுபவித்தார்கள். உதாரணம் ஸ்ரீஹனுமான், விபீஷணாழ்வார், ஏன் சூர்ப்பணகை கூடப் அதில் சேர்த்துக்கொள்ளலாம் ! ஆனால் நமக்கு அந்த கொடுப்பினை இல்லை.  ஆனால் அர்ச்சாவதாரத்தில் இந்தப் பிரச்சனையே இல்லை தெருக்கோடியில் இருக்கும் பாலாஜியையோ, அல்லது மலைக்கோட்ட

கண்ணன் கதைகள் - 6

கண்ணன் கதைகள் - 6  புரி கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்‌ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போது என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். ’மிஷன் இம்பாசிபிள்’ படம் எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். கீழே இறங்கி வரும் போது நேற்றைய கொடியை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். பல கொடிகள் விதவித அளவில் இருக்கும். நான் சின்னதாக ஒன்றை வாங்கினேன். விலை 100/=  திரும்பிக் கொண்டு ஏறுகிறார்கள் “இதை வைத்துக்கொண்டு என்ன செய்வீங்க? வாட் இஸ் தி யூஸ் ?” என்றார் பக்கத்தில் இருந்தவர் ”அமெரிக்கா, பாரிஸ் போகும் அங்கே மொமொண்டோ என்று ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து எல்லோரிடமும் அந்தப் பொம்மையைப் பெருமையாக காண்பிக்கிறோம். இது துணி ஆனால் இதன் பின் கதை இருக்கிறது, ஜகந்நாத பெருமாள்

கண்ணன் கதைகள் - 5

கண்ணன் கதைகள் - 5  துவாரகை முழுவதும் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். காரணம் எல்லோர் இடத்திலும் இருக்கும் கிருஷ்ணப் பக்தி.  தொலைப்பேசி வந்தால் ஹலோ என்று சொல்லாமல் "ஜெய் துவாரகாதீஷ்" என்கிறார்கள்.  கோயிலில் இருக்கும் காவல்துறையினர் எல்லோரும் பக்தியுடன் தங்கள் கடமையைச் செய்கிறார்கள். எங்களுடன் வந்த ஒருவர் வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார் அதை ஒரு காவல்துறை அதிகாரி சுட்டிக்காட்டினார். கண்ணனுக்கு மரியாதை! எல்லோருக்கும் ஒரே க்யூ தான். ஆதிஷேசன் மாதிரி வளைந்து நெளிந்து போகிறது. . 250, 100, 50 என்ற சிறப்புப் பக்தி இங்கே இல்லை. சாதாரண க்யூ, அசாதாரணமான பக்தி.  எங்களுடன் ஒரு காவல்துறை உயர் அதிகாரி கூட வரிசையில் தான் வந்தார் ! ஏந்த சீட்டும் இல்லாமல் நேற்று 3000 பேருக்கு மேல் குறையில்லாமல் எல்லோருக்கும் சேவை சாதித்தார் துவரகாதீஷ். ஒரு முறை இல்லை பல முறை!  என்ன காரணம் என்று யோசித்தால் ஆட்சி செய்பவர்களுக்குத் தெய்வப் பக்தி இருக்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு கொள்கை கட்சி அங்கே இல்லை.  கிருஷ்ணர் சாரி கண்ணன் காலை 5 மணிக்குச் சின்ன துண்டுடன் டிரஸ் போட ஆரம்பித்தார் 8

கண்ணன் கதைகள் - 4

கண்ணன் கதைகள் - 4  யமுனையில் குளிக்க படகில் சென்ற போது பள்ளி சீருடையில் இந்தச் சிறுமி என் கவனத்தை ஈர்த்தாள்.  பத்து ரூபாய்க்கு மீன்களுக்குச் சின்ன சின்ன உருண்டை வங்கிக்கோ என்றாள்.  "தஸ் ரூப்பா" "வேண்டாம்" வாங்கிக்கோ என்றாள். அவளின் சிரிப்பில் மயங்கி பத்து ரூபாய் கொடுத்தவுடன் வாய் எல்லாம் பல் -  பேச்சுக் கொடுத்தேன் "என்ன கிளாஸ்?" "ஃபர்ஸ்ட்" "ஸ்கூல் யூனிஃபார்ம்" "சுட்டி, சண்டே"  படகில்  இறங்கும் போது ”உன் பேர் என்ன?” என்றேன் "ராஜகுமாரி" - சுஜாதா தேசிகன் 31-08-2021 ஸ்ரீஜெயந்தி

கண்ணன் கதைகள் - 3

கண்ணன் கதைகள் - 3  ஆயர்பாடி மதுராவிற்கு யாத்திரையாக சென்றிருந்தேன்.  கண்ணன் பிறந்த இடமான மதுராவுக்கு ஒரு காலை சென்றேன். கண்ணன் பிறந்த அந்த சிறைச்சாலையில்  "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை " மற்றும் பல்லாண்டு இரண்டையும் போலீஸ் வந்து விரட்டும் வரை பல முறை சேவித்துக்கொண்டு இருந்தேன்.  பிறகு ஆயர்பாடிக்கு சென்றேன்.  ஆயர்பாடியில் நந்தகோபருக்கு நிறையப் பசுக்கள் இருந்தன. கண்ணன் இங்கே தான் மேய்த்தார், விளையாடினார் எல்லாம் செய்தார்.சுருக்கமாக கிருஷ்ணர் காலடி பட்ட இடம். எங்கும் ஆட்டோ, ரிக்‌ஷாவிற்கு  ‘ராதே ராதே’ தான் ஹார்ன். கடைகளிலும் வணக்கத்துக்குப் பதில் ‘ராதே கிருஷ்ணா’ தான்.  ஊர் தலைவரான நந்தகோபர் மரத்தடியில் உட்கார்ந்து பஞ்சாயத்துச் சொல்லும் இடத்துக்குப் பக்கம்  குழந்தைகளைப்  பார்க்க கார்டூன் குழந்தைகள் மாதிரியே இருக்கிறார்கள்.  கண்களில் அவ்வளவு innocence. உற்றுப் பார்த்தால் அன்று கண்ணனுடன் விளையாடிய குழந்தைகள் போலவே இருந்தார்கள். சந்தேகம் இருந்தால் நான் எடுத்த படங்களை பார்க்கவும்  - சுஜாதா தேசிகன் 31-08-2021 ஸ்ரீஜெயந்தி

கண்ணன் கதைகள் - 2

கண்ணன் கதைகள் - 2  ஈட்டில் "மிளகாழ்வான் வார்த்தை" என்று வருகின்றது. அரசன் ஊர்மக்களுக்கு நிலங்களை தானம் செய்வதாக மிளகாழ்வான் கேள்விப் படுகின்றார். அவரும் தானம் பெறச் செல்லுகின்றார்.  அவரைப் பார்த்த அரசன் “உமக்கு தானம் கொடுப்பதில்லை' என்று அரசன் சொல்ல, அது கேட்ட மிளகாழ்வான், "பிரபுவே, எனக்கு மாத்திரம் கொடுக்க முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? வேதமோ சாத்திரமோ எதில் தேர்வு வைத்தாலும் நான் தேர்வு கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்” என்கிறார்.  இதற்கு அரசன் ”உமக்கு அந்த யோக்கியதைகள் இல்லை என்று நான் சொல்ல வில்லையே!”  உடனே மிளகாழ்வான் “அப்படி என்றால் ஏன் தானம் கொடுக்க மறுக்கிறீர்?” என்று கேட்க, அரசன் "நீர் ஸ்ரீவைஷ்ணவராகையாலே உமக்குக் கொடுக்க நான் விரும்பவில்லை "என்று மறுமொழி தருகின்றான்.  உடனே மிளகாழ்வான் பரமானந்தம் அடைந்து கூத்தாடுகின்றார்.  மேல்கோட்டையில் மிளகாழ்வான் இருக்கும் தூணைக் கண்டுபிடித்துச் சேவித்தபொழுது....பெயருக்கு ஏற்றமாதிரி மிளகு அளவில் தான் இருக்கிறார் ! ஸ்ரீரங்கம் வேணுகோபாலன் சன்னதியில் இதே போல மிளகாழ்வான் அளவுக்குக் கண்ணன் சிற்பம் ஒன்று இருக்கிறது.

கண்ணன் கதைகள் - 1

கண்ணன் காலடிப் பட்ட இடங்களுக்கு சென்ற போது எனக்குக் கிடைத்த அனுவங்களை கூறும் கதைகள்.  கண்ணன் கதைகள்  - 1  தொட்டமளூர் ஒரு நாள் திடீர் என்று தொட்டமளூர் கிளம்பினேன்.  மூலவர் ”அப்ரமேயர்” (‘எல்லையில்லாதவன்’ என்று பொருள்.) தாயார் அரவிந்தவல்லி. இங்கே இருக்கும் நவநீதகிருஷ்ணன் - குழந்தைக் கண்ணன், சுருட்டைத் தலை மயிர், கழுத்தில் முத்துமாலை; அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வங்கி, வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு என ஏராளமான நகைகள், டிரஸ் மட்டும் தான் இல்லை. கையில் வெண்ணெய் உருண்டையுடன் தவழ்ந்து வருகிறான். கூப்பிட்டால் வீட்டுக்கே வந்துவிடுவான் என்று தோன்றுகிறது. எங்கள் காரை ஒரு சின்னப் பையன் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான். பார்ப்பதற்கு மனநலம் சரியில்லாதவன் போல் இருந்தான். சதா வாயில் எச்சில் ஒழுக, மிட்டாயைக் கடித்துக்கொண்டு, கையில் பிசுக்காக எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருக்கும் கடையில் சென்று 'Good Day' பிஸ்கெட் பாக்கெட் ஒன்று வாங்கி அவனிடம் தந்தேன், ஆனால் அதை மறுத்துவிட்டு அங்கே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு ரூபாய் பந்துதான் தனக்கு வேண்டும் என