Skip to main content

Posts

Showing posts from June, 2010

கலர்க் கனவுகள்

இரண்டு நாளைக்கு முன்பு அலுவகத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், எப்போதும் போல அமுதன் ஓடி வந்து என் மீது ஏறிக்கொண்டான். கையில் தந்தையர் தின வாழ்த்து அட்டை . நர்சரி ஸ்கூலில் அவன் கை அச்சை கொண்டு செய்தது. என் வாழ்நாள் பொக்கிஷம். - 0 - 0 - நான் வரைந்த படங்களைப் பார்ப்பவர்கள், எப்படி வரையக் கற்றுக்கொண்டேன் என்ற கேள்வியை தவறாமல் கேட்பார்கள். எங்கள் குடும்பமே கலைக்குடும்பம் என்றோ, சின்ன வயதிலிருந்தே எனக்கு நிறைய கலை ஆர்வம் என்றெல்லாம் படம் போடாமல் சிரித்து மழுப்புவேன். எல்லோரையும் போல், கிரிக்கெட், காமிக்ஸ், குச்சி ஐஸ், சினிமா போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு. அம்மா மார்கழி மாதம் விடியற்காலையில் கோலம் போடும்போது, இழுத்த இழுப்புக்கு அப்பாவைப் போல கோலமும் வருவதை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டு இருப்பேன். கோலம் போட்டு முடித்தபின் அதற்கு கலர்கொடுக்கும் பொறுப்பு என்னுடையது. என்ன வண்ணம் என்பதைத் தேர்ந்தெடுத்து கோலத்தில் கலர் கொடுப்பேன். “என்ன அழகா கலர் கொடுத்திருக்கான் பாருங்களேன்,” என்று அம்மா அப்பாவைக் கூப்பிட்டு காண்பிப்பாள். “பொம்மனாட்டி மாதிரி என்னடாது இது வேலை?” என்று அப்பா கண்டிக்காதது நான் செய்த அதிர

மகிழ்ச்சிக்கான கோட்பாடு!

படம்: தேசிகன் என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில் ராமமூர்த்தி நகர் தாண்டிய பின், சாலைகளின் இருபுறமும் மயிற்கொன்றை மலர்களை மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் பார்க்கிறேன். இந்தச் செடி புதர் அல்லது குற்றுமரம் (Shrub) வகையைச் சார்ந்தது. ஆறு அடிக்கு மேல் வளராது. குல்முஹர் மலர் போலக் கட்சி அளித்தாலும் உற்று கவனித்தால் வித்தியாசங்களைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் Peacock Flower என்கிறார்கள். பூவைப் பார்ப்பதற்கு மயிலின் கொண்டை போல இருப்பதால் இந்தப் பெயர்க் காரணம் என்று நினைக்கிறேன். என் பையனை பள்ளிக்குக் கொண்டுவிடும் போது ஒரு வீட்டில் ஸ்டிராபெரி வண்ணத்தில் இந்த மலரைப் பார்த்தேன். ஒரே வகை மலர்களில் பல விதமான வண்ணங்களை நாம் பார்த்திருக்கலாம். ரோஜா, செம்பருத்தி, போகன்வில்லா போன்ற மலர்கள் உதாரணம். மிருகங்களுக்கும், பூக்களுக்கும் இயற்கை பலவித வண்ணங்கள் தந்திருக்கிறது. மிருகங்கள் தங்களைக் காத்துக்கொள்ள இயற்கையோடு ஒளிந்துக்கொள்ள இந்த வண்ணங்கள் உபயோகப்படுகிறது. ஆனால் பூக்கள் மற்றவர்களை கவர்ந்து மகரந்தச் சேர்க்கைக்கு உபயோகப்படுத்துகின்றன. மலர்களில் இந்த நிறத்துக்குக் காரணம் மூலக்கூ

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

“கொல்லைக்குப் போயிட்டு வரேன்!” “போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!” என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும்  “ரெஸ்ட் ரூம்” சமாசாரம். வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன. பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒதுங்கினால், டிரைவர் ஹார்ன் அடித்து, இன்ச் இன்சாக பஸ்ஸை நகர்த்தி பூச்சாண்டி காமிப்பார்.  “ஆனது ஆச்சு, இதோ வந்திடுவார்,” என்று பதறும் உங்களுக்கு வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். பதினைந்து வருடங்கள் முன் அமெரிக்கா சென்றபோது டாய்லட் பேப்பர் அறிமுகம் கிடைத்தது. காலில் நியூஸ் பேப்பர் பட்டாலே சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளும் நமக்கு, பேப்பரில் துடைத்துப் போட உடனே மனம் இடம்கொடுக்காது. ஆனாலும், ச

எலுமிச்சைச் சாறு கசக்கும்!

'கோர்ட் பிள்ளையார்' என்று அழைக்கப்படும் திருச்சி கோர்ட் பஸ்டாப்பில் இருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் போது அங்கே ஒரு வித வாசனை வரும். சுற்றி முற்றும் பார்த்தால் சைடில் கழுத்தளவு காந்தித் தாத்தா நேற்று தான் சுதந்திரம் வாங்கியது போல சிரித்துக்கொண்டு இருப்பார். சரி அங்கிருந்து தான் வாசனை வருகிறது என்று பக்கம் போனால் அந்த வித்தியாசமான மரத்தைப் பார்க்கலாம். மரத்தைச் சுற்றி இருபது அடிக்கு வாசனையாக இருக்கும். என்ன மாதிரி வாசனை என்று விவரிக்க முடியாது. மரத்தின் அடிப்பாகம் முழுவதும் மத்தாப்பு கொள்ளுத்திய பின் வளைந்த கம்பிகள் போல இருக்கும் காம்புகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்திருக்கும். மேலே பார்த்தால் பச்சை இலைகளுக்கு இடையில் அதே மத்தாப்பு கம்பி - நாகலிங்கப்பூ. பூவைப் பாதி பிரித்து பார்த்தால் சின்ன லிங்கம் மாதிரியும் அதற்கு மேலே நாகம் மாதிரியும் இருப்பதே இந்தப் பூவின் பெயர்க் காரணம். ரொம்ப பிரித்தால் நாகம் கையோடு வந்துவிடும். ஆங்கிலத்தில் இந்த மரத்தின் பெயர் கேனன் பால் (Cannon Ball). மரத்தின் காய்கள் உருண்டையாக பீரங்கிக் குண்டுகள் போல இருப்பதால் இந்த பெயர். இந்த குண்டு பழ