Skip to main content

Posts

Showing posts from February, 2023

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் !

 சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் ! ஜோ பைடன் தலைக்கு மேல் பறந்த சீன பலூனை கொஞ்சம் நாள் வேடிக்கை பார்த்துவிட்டுச் சுட்டு வீழ்த்திய காணொளியைப் பார்த்திருப்பீர்கள். கடலில் விழுந்த பலூனின் பாகங்களை ஆய்வு செய்கிறார்கள் என்று படித்த போது ஒரு ’பக்’ ஏற்பட்டது. காரணம் சிறுவயதில் நாங்கள் விட்ட அந்த ஸ்பெஷல் பலூனாக இருக்குமோ சந்தேகம். ஏழாவது என்று நினைக்கிறேன், எட்டாவது கூட இருக்கலாம், அது முக்கியமில்லை நான் அரைக்கால் டவுசர் போட்ட காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஆரம்பச் சுகாதார நிலையம் ஒன்று ஹிந்தி தமிழ் எழுத்துக்களுடன் தற்காலிகமாக முளைத்தது. அதற்குள் நுழைவதற்கு முன் பலூனை கொஞ்சம் ஊதலாம். பத்துப் பைசாவிற்கு இரண்டு பலூன் கிடைத்த காலம். போச்சம்பள்ளி சேலை போல மஞ்சள் சிகப்பு, நீலம், பிரவுன், சிகப்பு, பச்சை என்று இரண்டு நிறமாகவோ , புள்ளிகள் நிறைந்த சுங்குடி போலவோ விதவிதமாகக் கிடைக்கும். பலூன் காரர் மூங்கில் குச்சியில் பூனை, பறவை போன்று பலூன் சிற்பங்களுடன் அழுக்கான ஒரு பிளாஸ்டிக் பையில் பிஜிலி வெடி போலப் பல பலூன்களுடன் கையில் ஒரு வெள்ளரிப் பிஞ்சு அளவுக்கு பலூன் ஒன்றை ஜபமாலை போல உராய்ந்து பலூனுள் இர

கூரத்தாழ்வான் என்ற பெரியார்

 கூரத்தாழ்வான் என்ற பெரியார்  என் அம்மாவுடன் ஒரு நாள் கூரத்தாழ்வானைச் சேவிக்க கூரம் சென்றிருந்தேன், போகும் வழியில் இரண்டு ஸ்ரீ வைஷ்ணவத் தம்பதிகள் கூரம் நோக்கி வெய்யிலில் நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். காரை நிறுத்தி அவர்களையும் ஏற்றிக்கொண்டேன். பிறகு திரும்ப வரும் போது அவர்களை ‘ஹைவேயில்’ இறக்கிவிட்டுக் கிளம்பினேன். கொஞ்சம் தூரம் சென்ற பிறகு என் அம்மா “நல்ல வெயில்… அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் தண்ணீர் பாட்டில் ஒன்றைக் கொடுத்திருக்கலாம்” என்றார். வண்டியை யூ டர்ன் அடித்து அவர்களை நோக்கிச் சென்று தண்ணீர் பாட்டிலை அவர்களுக்குக் கொடுத்தேன். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் எங்கள் மனதில் பிரதிபலித்தது. யூ-டர்ன் அடித்ததற்குக் காரணம் அந்தத் தம்பதிகள் கூரத்து ஆழ்வானும், கூரத்து ஆண்டாளுமாகக் கூட இருக்கலாம் என்று அடியேனுக்குத் தோன்றியது. இந்தச் சம்பவத்தைப் பாருங்கள்.  கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல வெயில், பசி, சரி ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம் என்று தேடும்போது ஒரு வீட்டு வாசலில் திருமண்

திருமழிசையாழ்வார்

 திருமழிசையாழ்வார் அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது “உங்க அம்மாவிற்கு மருந்து இல்லை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று டாக்டர் சொன்னது திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டு இருந்தது. எல்லாம் பெருமாள் விருப்பம் என்று உபன்யாசத்தில் கேட்டிருந்தாலும் ”அம்மா... உயிருடன் இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் எழாமல் இல்லை. அம்மா என்ன ஆசைப்பட்டார் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது... “திருமழிசை இங்கேயே இருக்கு ஆனா போனதில்லை” என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மறுநாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு திருமழிசைக்குச் சென்றேன். ”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள். மாமாயன் என்றால் மாயனுக்கு எல்லாம் மாயன் என்று சொல்லலாம். மாயனை define செய்ய திருமழிசை ஆழ்வார் பாடல் ஒன்று போது. ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே? கஜேந்திரனைக் காத்த நீ குவலயாபீட