Skip to main content

Posts

Showing posts from November, 2009

பெங்களூர் to பெங்களூரு

சென்னையிலிருந்து பெங்களூர் வந்து ஐந்து வருடம் இரண்டு மாசம் ஆகிவிட்டது. வந்த புதிதில் “இது என்ன ஊரு?” என்று அலுத்துக்கொண்ட காரணத்தாலோ என்னவோ உடனே அதை பெங்களூரு என்று பெயர் மாற்றம் செய்திவிட்டார்கள். வெல்லம் போட்ட சாம்பார் மாதிரி பல விஷயங்கள் ஐந்து வருஷத்தில் பழகிவிட்டன. தவித்த வாய்க்கு காவிரி தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ ஹோட்டல்களில் சாம்பார், சட்னி தாராளமாக கொடுக்கிறார்கள். போன முறை சென்னை சென்ற போது ‘இன்னும் கொஞ்சம் வெங்காய சட்னி’ என்று கேட்டதற்கு வீட்டுக்கு வந்துவிட்டு போகும் விருந்தினருக்கு குங்குமம் தருவது போல சின்ன கிண்ணியில் தந்தார்கள். இந்த விலைவாசி ஏற்றத்திலும் எம்.ஜி.ரோடு பிருந்தாவன் ஹோட்டலில் எவ்வளவு அப்பளம் கேட்டாலும் சிரித்துக்கொண்டே போடுகிறார்கள். கோரமங்களா கிருஷ்ணா கபே சொந்தக்காரர் தென்னந்தோப்பு வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தயிர், மோரைத் தவிர எல்லாவற்றிலும் எப்படி அவ்வளவு தேங்காய் போட முடிகிறது? ‘நல்லவர்களிடம் உணவருந்துங்கள்’ என்ற வாசகத்துடன் அன்னபூர்ணி ஹோட்டலில் துளசி அடை செய்து கொடுக்கிறார்கள். ‘ரோட்டி மீல்ஸ்’ல் விதவிதமான ரோட்டியும் அதற்கு கருப்பாக எள்ளுப்பொடி

சென்னையில் அட(டை) மழை!

போன வாரம் சென்னைக்கு சென்ற போது “இந்த மழையில் எதுக்கு வந்தீங்க?” என்று அதிர்ச்சியாக கேட்டார்கள். சென்னை சென்ட்ரல் காலை ஏழு மணிக்கு இருட்டிக்கொண்டு மாலை ஏழு மணி போல இருந்தது. அந்த மழையிலும் பிளாட்பாரத்தில் இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் சரவண பவனில் காப்பிக்கு க்யூ. மழை எதிர்த்த வீட்டு ஜிம்மி போல் குலைத்துக்கொண்டு இருந்தது. “மழையை பார்த்தீங்கல்ல 180க்கு வருதுனா வாங்க” என்ற ஆட்டோவிடம் பேரம் பேசாமல் ஏறி சில தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது வெளியே 30 செ.மீட்டர் மழை என்றால் ஆட்டோவுக்குள் 60 செ.மீட்டர் என்று. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு பழகும் புது பெண்ணை போல எனக்கு மழையுடன் பழக அரை மணி நேரம் ஆனது. முழுக்க நனைந்த பிறகு வீடு வந்து சேர்ந்த பின், கொஞ்ச நேரம் ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். பிறகு பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து பர்முடா மாதிரி ஆக்கிக்கொண்டு வெளியே கிளம்பினேன். தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே பலாப்பழம், வேகவைத்த வேர்கடலை, கர்சீப் எல்லாம் பாலித்தின் உதவியுடன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். இருபது அடிக்கு ஒரு க

ராக்கெட் வண்டுகள்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?” (குறுந்தொகை -2) இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துளை போடுகிற