Skip to main content

பூக்குட்டி !

[%image(20051124-pookutti_cover.jpg|407|300|பூக்குட்டி அட்டைபடம்)%]


அக்டோபர் மாதம் கற்றது பெற்றதுமில் சுஜாதா எழுதியது. ... 


'தமிழில் குழந்தைகளுக்காக ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்புத் தரத்தில் புத்தகங்கள் இல்லை' என்று குறை சொல்வதைப் பலரிடம் அடிக்கடி கேட்டபின், குழந்தைகளுக்காக அவ்வகையில் ஒரு புத்தகம் நானே சொந்தமாகப் போடு வது என்று தீர்மானித்தேன்.


சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு கொண்டாடினார்களே... அப்போது 'பூக்குட்டி' என்ற தொடர்கதை விகடனில் வந்தது. அதற்கு மணியம் செல்வன் அழகழகான சித்திரங்கள் வரைந்திருந்தார்.


ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை விட்டு டைட்டில் எழுதச் சொல்லி, அந்தக் குழந்தையின் பெயரையும் போட்டு, அட்டகாசமாக வெளியிட்டார்கள். பிறகு, அது புத்தக வடிவிலும் வந்தது. ஆனால், உலகத் தரத்தில் அல்ல!


தற்போது புத்தக வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் காகிதத் தரத்திலும் தமிழகத்தில் மேல்நாட்டுத் தரத்தை எட்டிவிட்டார்கள். பதிப்புத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், 'லேடி பேர்ட்' புத்தகங்களைப் போல ஒல்லியாக, கெட்டி அட்டையுடன், நல்ல காகிதத்தில் பெரிதாக அச்சிட்டு, 'பூக்குட்டி'யைச் சற்று சுருக்கி, எளிமைப்படுத்தி வெளியிடத் தீர்மானித்தேன். மணியம் செல்வனைக் கேட்டதில், நல்லவேளை... அவர் தன் பழைய சித்திரங்களைப் பத்திரமாக வைத்திருந்தார்.


விமமு வேலாயி, நாய்க்குட்டி, பூக்குட்டி மூவரும் மறுபடி பளிச்சென்று இம்மாதம் வெளிவருகிறார்கள். இதற்காக என் கைக்காசை செலவழிப்பதில் எனக்குத் தயக்கமே இல்லை... சந்தோஷம்தான்!


'பூக்குட்டி பதிப்பக'த்தில் மேலும் சில புத்தகங்கள்... பறவைகள், மிருகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், குட்டிக் கதைகள், பக்கத்துக்குப் பக்கம் சித்திரம், பெரிய எழுத்து, எளிய நடையில் கொண்டு வர ஆசை.


நேற்று சுஜாதா அவர்களிடம் பேசிய போது, புத்தகம் அடுத்த வாரம் வந்துவிடும் என்று சொன்னார். புத்தகம் வாங்க விரும்புவோர் எனக்கு [ desikann@gmail.com ] ஒரு தனிமடலில் உங்கள் பெயர், விலாசம் ஆகியவற்றை அனுப்பலாம்.


என் வலைப்பதிவின் மூலம் புத்தகம் வாங்குவோருக்கு சுஜாதா அவர்கள் கையெழுத்திட்ட புத்தகம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன். ( விலை 90/= )
[ குழந்தைகள் இருந்தால் அவர்களின் பெயரையும் தெரிவியுங்கள், அவர்கள் பெயர் போட்டு கையெழுத்திட்டு வாங்கி தர முயற்ச்சிக்கிறேன்]


பின்னட்டையில்...


  குழந்தைகளுக்காக தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்ற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.  
சுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராக சொல்லும் கதை.


[ Update 9th Feb 2006 ]


புத்தகங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு Anyindian.com வழியக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.  கேள்விகள்/மேல் விபரங்களுக்கு customerservice [at] anyindian.com க்கு தொடர்பு கொள்ளுங்கள். புத்தகம் வாங்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்


இதை பற்றி பி.கே.சிவகுமார் பதிவு

Comments