Skip to main content

Posts

Showing posts from 2025

5. மதுரகவி

5. மதுரகவி மதுரைச் சங்கத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, சங்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னே, வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரந்து விரிந்த தமிழ் தேசத்தில், தென்திசையான பாண்டி நாட்டில், அகத்திய குறுமுனிவர் தம்முடைய சீடர்களுடன் ஒரு சங்கம் அமைத்துத் தமிழ்ப் பயிரைப் பொதிய மலையிலே[1]  வளர்த்தார். அதனால் இம்மலை அகத்தியமலை என்றும் பெயர் பெற்றது. ஆனால் இம்மலைக்குச் செல்வது ஆபத்து என்று ஒரு கதை உண்டு[2].. சீதையைத் தேடப் புறப்படும் வானர வீரர்களை நோக்கிச் சுக்ரீவன் வழி விவரிக்கையில், “அகத்திய மலையில் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது” என்கிறான். தமிழ் முனிவரும், தமிழ் சங்கமும் இருக்கும் இடத்தில் என்ன ஆபத்து நிகழப்போகிறது என்று அனைவரும் யோசிக்க, சுக்ரீவன் சொல்கிறான், “பொதிய மலையைத் தூரத்திலிருந்து கண்டதும், ‘என்ன அழகான மலை! அங்கே அகத்திய குறுமுனிவரை வணங்கிவிட்டுச் செல்லலாம்’ என்று தோன்றும். அதுவே ஆபத்து! அங்கே எப்போதும் தமிழ்ப் பாடல், தமிழிசை, தமிழ்க் கூத்து என முக்கனிகள் போல மூவகைத் தமிழ் விருந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். அத்தகைய விருந்தை விட்டுப் போக யாருக்குத்தான் மனம் வரும்? அங்கே சென்றால...

குழப்பிக் கொட்டின கூழ்

குழப்பிக் கொட்டின கூழ் இது ஒரு அரிய சமையல் குறிப்பு. முதலில் இதை செய்ய தேவையான பொருட்கள் என்ன என்று பார்த்துவிடலாம். சென்னை ஃபில்டர்‌ காபி – தலையில் நுறையுடன், சுண்டி இழுக்கும்‌ நறுமணத்துடன்‌ ஒரு பழைய பாத்திரம்‌ நிறைய‌. ஹைதராபாத்‌ பிரியாணி – தேவையான‌ அளவு‌, அசைவப்‌ பிரியர்களைக்‌ கவரும்‌ வீரியத்துடன்‌ (ரத்தம் சொட்ட சொட்ட) மலபார்‌ பரோட்டா – சில‌ மெல்லிய‌ அடுக்குகளாக‌, சில‌ சமயம்‌ பிரிந்து செல்லும்‌ தன்மையுடன்‌ மைசூர்‌ பாக்‌ – இனிப்புச்‌ சுவைக்கு ஏற்றவாறு‌, கனமான‌ கட்டியாக ஒன்று. வடா பாவ்‌ – ஒரு அசாதாரண‌ தனித்துவமான‌ சுவைக்கு சமையல்‌ கருவிகள்‌: பெரிய‌ அகலமான‌ பாத்திரம்‌(கதிரவன் ஸ்டோர்ஸ்). அனைத்தையும்‌ கலக்க‌ ஒரு பெரிய‌ கரண்டி(LCU பிரண்ட்). மின்சார இண்டக்‌ஷன் அடுப்பு. ஒரு தங்க வாட்ச் ( டைம் பார்க்க). ஒரு பெரிய நாற்காலி (சமையல் முடிந்த உடன் உட்கார ). முழு சமையல் நேரம் - சுமார் 2.50 நிமிடம். செய்முறை. ஃபில்டர் காபியை சற்றே பெரிய பழைய பாத்திரத்தில் ஊற்றவும். நம் சமையலுக்கு ஒரு கிளாசிக்‌ துவக்கத்தைக்‌ கொடுத்து, 'ஆஹா' போட‌ வைக்கும்‌. அடுப்பை மிதமான‌ தீயில்‌ வைத்து, சுமார்‌ 30 நிமி...

பகுதி 4 - தமிழ்க்கோயில்

4. தமிழ்க்கோயில் திருவரங்கத்திலிருந்து குடந்தையை நோக்கிக் காவேரி ஓடும் வழியே புறப்பட்டார் நாதமுனிகள். குழந்தையுடன் துணைக்கு வரும் தாய் போல காவிரி காட்சி அளித்தது. ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த இடங்களில், நீரின் சலசலப்பு நாதமுனிகளைச் 'சீக்கிரம், சீக்கிரம்' என்று கூறுவது போல இருந்தது. ஒருபுறம் காவிரியும், மறுபுறம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் காண்பவர் மனதை ஈர்க்கும் விதமாக இருந்தன. பசும் பயிர் வயல்களும், கரும்பு, வாழைத் தோட்டங்களும், தென்னை மரங்களும் மாறி மாறி வந்தன. நடுவே வாய்க்கால்களும், ஓடைகளும், அதைச் சுற்றிப் பல வண்ணப் பூக்களும் மனதைக் கொள்ளையடித்தன. குளங்களில் செந்தாமரையும், அல்லிப்பூவும் மலர்ந்திருந்தன. அவற்றின் இலைகள் தண்ணீரைக் கவசம் போல மூடியிருந்தன. வயல்களில் கூட்டம் கூட்டமாக நீண்ட கழுத்தையுடைய வெண்ணிறக் கொக்குகள் பறந்துகொண்டிருந்தன. குளங்களில் செங்கால் நாரைகள் முனிவர்களைப் போல் தியானத்தில் இருந்தன. மரப் பொந்துகளில் கிளிகள் எட்டிப்பார்த்தன. ஆண் தூக்கணாங்குருவிகள் அழகாக நெய்த கூட்டைப் பெண் குருவிகள் நோட்டமிட, ஆண் குருவியோ தான் கட்டிய கூடு பெண் குருவியைக் கவரவேண்டுமே ...

பகுதி 3 - லோகசாரங்க மாமுனிவர்

3.லோகசாரங்க மாமுனிவர் நாதமுனிகளும் யாத்திரிகர்களும் கோயிலை வலமாகச் சுற்றிவந்து வாசலை அடைந்தபோது, அங்கே இரு பக்த சிரேஷ்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அழகில் மயங்கி, இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தனர். அவர்களின் முகச்சாயல் நாதமுனிகளின் வம்சத்தவர் என்பதை உணர்த்தியது. அவ்விருவரும் நாதமுனிகளையும், யாத்திரிகர்களையும் வணங்கினர். ’இவர்கள் யாராக இருக்கும்?’ என்று பாகவதர்கள் கேட்க நினைக்கும் முன்னரே, நாதமுனிகள், “இவர்கள் இருவரும் என் மருமக்கள், வரதாசாரியார் மற்றும் கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார். “ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்கு இவர்கள் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இவர்கள், [1]காளம், வலம்புரி என முழங்குவார்கள்[2] என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர். “உங்கள் நல்வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள். அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால், இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் எனப் போற்றப்பட்டு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை இசை வடிவி...

பகுதி 2 - விதை நெல்

 2.விதை நெல் ஒரு மரத்தின் கிளை காலப்போக்கில் ஒவ்வொன்றாய் உதிர்ந்து போவது போல, ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய அருளிச் செயல்களாம் நாலாயிர திவ்யப் பிரபந்தம், அவர்கள் காலத்திற்குப் பின் ஓதுவிப்பார் இன்றி மறையத் தொடங்கின. அவ்வேளையில், பௌத்த, சமண சமயங்கள் பரவித் தழைத்து, மறைபொருளின் உண்மைத் தன்மை திரிக்கப்பட்டு, மாறுபட்ட கொள்கைகள் தலைதூக்கின. அப்போதைய அரசர்களும் தாங்கள் தழுவிய சமயங்களால் மக்களிடையே பல பிரிவினைகள் தோன்றி, அதனால் ஏற்பட்ட பூசல்களால் தெளிவற்ற சூழல் நிலவியது. குடிமக்களும் ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் பண்டைத் தமிழ்ப் பண்பாடாகிய நாராயணனே முழுமுதற் கடவுள் என்னும் நிலை குலைந்து, ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் காலவெள்ளத்தில் உருத்தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டன. அதுமட்டுமன்றி, ‘வைகுந்தம் புகுவார்’ என்னும் ஆழ்வார் பாசுரங்களை ஓதினால் மேன்மை மிக்க முக்தியடைவர் எனப் பொருள் கொள்வதற்குப் பதிலாக, அவை ‘கொல்லும் பாட்டு’ என்று தவறான முத்திரை குத்தப்பட்டு, அவற்றைத் தாங்கிய ஓலைகள் தீக்கிரையாக்கப்பட்டன. ஆயினும், ஆங்காங்கே தமிழ்ப்பண்பில் ஊறித் திளைத்...

பகுதி 1 - வீரநாராயணபுரம்

 1. வீரநாராயணபுரம் அமுதமிகு, உத்தமமான, மாபெரும் காவிரிக்கு 'பொன்னி' எனும் அழகிய பெயரும் உண்டு. மழைத்துளிகளையே உணவாகக் கொண்டு முகிலைப் பாடும் வானம்பாடிப் பறவை வருந்துமாறு மழை பொய்த்துவிட்டாலும், பொன்னி நதி ஒருபோதும் பொய்க்காது[1]. அவள் பாயும் இடமெல்லாம் பொன்னைப் பொழிவது போல, நிறைந்த விளைச்சலை வாரி வழங்கி, மக்களைச் செல்வச் செழிப்பில் ஆழ்த்துவதால் அப்பெயர் பெற்றாள் என்பர். இப் பூவுலகில் வாழும் பல்லுயிர்களை நாள்தோறும் வளர்த்து, அவை உய்யும் வண்ணம் தன் அருளமுதை ஒரு தாயைப் போல ஊட்டுகிறாள். ஆதலால், அவளைக் காவிரித் தாய் என்றும் அன்புடன் அழைப்பர். குடகுமலையின் சாரலில் உள்ள பிரம்மகிரிப் பருவதத்திலிருந்து தலைக்காவிரியாய் உருண்டு, நீர்வீழ்ச்சிகளில் விழுந்து, புரண்டு, வேகமாகச் செல்லும் தன் போக்கில் ஆழமான வழியை அறுத்துக்கொண்டு விரைந்தோடிவரும் காவிரி, தன் அகன்ற ஆசைகளையெல்லாம் கொள்ள இடமில்லாமல், வட திருக்காவிரி, தென் திருக்காவிரி என இரண்டாகப் பிரிகிறாள். பின் தன் ஓட்டத்தில் நிதானம் கொண்டு, எப்போதும் தென் திசையில் இருக்கும் கோதையைத் தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் அரங்கனுக்கு மாலையாகி,...

Sri Maran’s Dog Swami மற்றும் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் ஸ்வாமி

Sri Maran’s Dog Swami மற்றும் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் ஸ்வாமி  இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்.  (1) சுமார் 20 வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட ஸ்ரீ வைஷ்ணவக் கிரந்தங்கள் முழுவதும் ஒரு மகானுபாவர் டிஜிட்டல் முறையில் பதிவேற்றி ஒரு புரட்சியைச் செய்தார். தான் நம்மாழ்வார் என்ற மாறனின் அடிபணிந்த நாய் என்று பெயருடன் உலாவி வந்தார். மொத்த ஸ்ரீ வைஷ்ணவக் கிரந்தங்களையும் ஸ்ரீரங்கத்திலோ வேறு எங்கோ விலைக்கு வாங்கி கப்பலில் அனுப்பி, இரவு பகல் பாராது ஸ்கேன் செய்து காபிரைட் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அதைப் பதிவேற்றிக்கொண்டு இருந்தார். அவர் ஸ்கேன் செய்த புத்தகத்தில் ”Released by Maran’s Dog ,Toronto, Canada” என்று இருக்கும் அதனால் அவர் கனடா நாட்டிலிருந்து செயல்பட்டார் என்று தெரிந்தது. அவர் யார் என்ன செய்கிறார் அவருடைய உண்மையான பெயர் என்று எதுவும் தெரியாது. சில காலம் கழித்து அவர் நடத்திய maransdog.com மறைந்து போனது.  அவர் எங்கே என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். பிறகு மறந்து போனோம். சுஜாதா ஒருமுறை டிஜிட்டல் புத்தகங்களுக்குத் தீர்க்காயுசு என்று எழுதினார். இன்று ...

வந்தே குரு பரம்பராம்

வந்தே குரு பரம்பராம் கூரத்தாழ்வான் அருளிய தனியன் இது.  லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் இந்தத் தனியன் வட மொழியிலிருந்தாலும், அர்த்தம் சலபமாகப் புரியும்.   திருமகள், திருமால் முதற்கொண்டு நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு வழிவழி வந்த குருக்கள் இன்றளவும் அத்தனை ஆசார்யர்களையும் வணங்குகிறேன் கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன் மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது. எவ்வளவு நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம்.  அஹோபில மடத்தின் ஜீயர்களை பெருமாளே காட்டிக்கொடுக்கிறான் என்பதற்கு மடத்தின் குருபரம்பரையைப் படித்தாலே புரிந்துவிடும். அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் சமாஸ்ரயணமும் பரண்யாசமும் செய்து வைத்து ராமானுஜ சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.  ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரியனை முன்னிட்டு தான் திருமகளுடன் கூடிய பெருமாளை அணுகுவார்கள். அது தான் முறை. ஆசாரியன் என்பவர் நம் குரு, அந்த ஆசாரியனை நமக்குக் காட்டுபவர்களும்...

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம்.

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம். ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ‘ராமாயணத்தில் ரகசியங்கள்’ (Secrets of Ramayana) என்று தொடர் சொற்பொழிவை பெங்களூருவில் பல பகுதிகளில் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று கடைசி சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தேன். ராமாயணத்தில் சரணாகதி என்ற தலைப்பில் சரணாகதிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு சென்ற போது பத்துக்கு மேல் எண்ணுவதை விட்டுவிட்டு கடைசியில் விபீஷண சரணாகதியில் முடித்தார். வைணவத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பு உள்ளது. அதைப் படிப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர் ஆன/ஆகப் போகிறவர்கள். இன்றைய 'பைத்தான்’ இளைஞர்கள், பரமாத்மா பக்கம் வருவார்களா என்ற சந்தேகம் (கலந்த கவலை ) என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கலாம். ஆனால் நேற்று துஷ்யந்த அவர்களின் உபயனாசத்தை கேட்ட போது அவரை சுற்றி கல்லூரி படிக்கும் இளைஞர் பட்டாளம் கையில் பேப்பரும் பேனாவுமாக அவரை சுற்றிக் குழுமியிருந்தது, உற்சாகமாக ரசித்துக் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் சோர்வில்லாமல் அனுபவித்தார்கள். நிச்சயம் நம் இளைய சமுதாயம் வருவார்கள் என்று நம்பிக்கை துள...

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்!

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்! உற்சவத்தின் போது நாயந்தே என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. அதை கடைசியில் சொல்லுகிறேன். இப்போது பெரியாழ்வாரை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லலாம். ஆழ்வார் பெரிய ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றால், கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சியளிக்கிறார். பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? பல்லாண்டு, ஆண்டாளின் தகப்பனார், விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல். இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம். ஒரு அன்பர், “சரணாகதியில் பெரிய பெருமாள் திருவடிகளைப் பற்றுகிற மாதிரி திருவேங்கடமுடையான் திருவடிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உண்மைதான். “அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று திருவேங்கடமுடையான் திருவடிகளைத்தான் ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரே சொல்லியிருக்கிறார். அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி...