Skip to main content

Posts

Showing posts from 2025

புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ்

 புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ் புதிய தலைமுறை என்ற சேனல் அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது செய்தி. இதில என்ன சார் ஆச்சரியம், இதே போல் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது என்று பரவலாக பேசப்படுகிறது. ஏன் இப்படி நடந்தது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், எந்த பிரதான ஊடகமும் இதை தைரியமாக சொல்லப் போவதில்லை. சொன்னால் அவர்கள் சேனல் எங்கோ தொலைந்துவிடும்.  தமிழக மொத்த மீடியாவும் இன்று ஜெயா / சன் டிவி என்ற குழுமங்களுக்குள் ஏதோ ஒன்றில் அடங்கிவிடும். அதனால் புதிய தலைமுறை குறித்து எனக்கு வருத்தம் இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கலாம். இந்தப் பதிவு இன்றைய இந்தியப் புதிய தலைமுறை குறித்து.   ‘அரசு’ கேபிள் நிறுவனம், பெயருக்கு ஏற்றார் போல அரசு நடத்துகிறது. அதனால் மீடியாவின் சிகை அவர்கள் கையில். முடக்கவோ, தொலைந்து போக செய்யவோ முடியும். இதே போல தான் ஆண்டராய்ட், ஆப்பிள், கூகுள், ஜீ.மேயில், வாட்ஸ்-ஆப் போன்ற இன்ன பிற வஸ்துக்களும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் எல்லாம் வெளிநாட்டு அரசு கேபிள் நிறுவனம் போன்றவை. நாளை காலை, கூகுள், ஜீமெயில் இல்லை என்றால் உங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்...

பகுதி - 9 - ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும்

9. ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் நாதமுனிகள் சென்ற அவ்வேளையில், கோயிலின் அமைதி அவரைத் தழுவிக்கொண்டது. அந்த அமைதியை ஆரம்ப ஜாமத்தின்‌ மணியோசை கலைத்தது. பல ஆண்டுகாலம் பிரிந்திருந்த தோழர்கள் சந்தித்ததுபோல், கோயில் புறாக்கள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. கோயிலின் நறுமணப் புகையுடன், பெருமாளின் மீது சாத்தப்பட்ட மகிழம் பூவின் நறுமணமும் கலந்து ஒரு வைகுண்ட சூழலை சிருஷ்டித்துக்கொண்டிருந்தது. கோயிலை ஒட்டிய தாமிரபரணி ஆற்று நீர் வழக்கத்துக்கு மாறாகச் சப்தம் இல்லாமல், மெதுவாக கோயிலை தடவிக் கொடுத்துச் சென்றது. மெல்லிய அலைகள் அங்கிருந்த பாறைகளில் பட்டு, ‘ஏன் இவ்விதம் ஜடமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்பதுபோல இருந்தது. பளிங்கு போன்ற ஆற்றின் நீரில் மீன்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. சில மீன்கள் நீருக்கு மேல் நாதமுனிகளைப் பார்க்க முடியுமா என்ற ஆவலில் துள்ளிக் குதித்து எட்டிப் பார்த்தன. அந்த மீன்களைப் போல, நாதமுனிகளின் மனமும் குருகூர் நம்பியை எப்போது காணப் போகிறோம், அவர் அருளிய இன்தமிழ் ஆராவமுதத்தை எப்போது பருகப்போகிறோம் என்று துள்ளிக் குதித்தவண்ணம் இ...

தமிழன் என்று சொல்லடா

தமிழன் என்று சொல்லடா ’Her Mother's Killer’ என்ற ஸ்பானிஷ் தொடர் ஒன்றை முன்பு பார்த்திருக்கிறேன். அதில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கேவலமான விஷயங்களைச் செய்வார்கள் என்று காட்டியிருப்பார்கள். அதனால் இன்று தமிழக அரசியலில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. திராவிடக் கட்சிகள் சினிமாவைத் தங்கள் பிரச்சாரக் கருவியாகச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்தது. ‘முன்னேற்றக் கழகம்’ என்ற வார்த்தை கட்சிகளை மட்டும் முன்னேற்றப் பயன்பட்டது. மக்கள் முன்னேறினார்களா ? சமீபத்திய உதாரணம் – அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள் என்று விழா எடுத்தார்கள். அதை வியப்புடன் சினிமாப் பிரபலங்கள் பார்த்துக் கைதட்டினார்கள். வெளிநாடுகளில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது என்பது கனவு. இங்கே அப்படி இல்லை. இன்றும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலையை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அங்கே வாக்களிக்கும் போது பார்க்கலாம்.  வாக்களிக்கும் ஒவ்வொருவரும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலை...

பகுதி - 8 - திறவுகோல்

8. திறவுகோல் [சென்ற வாரம் கடைசிப் பகுதி - பராங்குசதாஸர் உள்ளம் உகந்து கண்ணி நுண் சிறுத்தாம்பை உபதேசிக்க ஆயத்தமானார். நாதமுனிகள் தலை தாழ்த்தி தியானித்து, வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண்[1] என்று மதுரகவிகளை சிந்தனையில் வணங்கி விநயமுடன் உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார்.] “நாதமுனிகளே! ‘வேறொன்றும் நான் அறியேன்’ என்று நீங்கள் கூறியது, மதுரகவிகளை மேலும் நினைவுபடுத்துகிறது! மதுரகவிகள் தம் குருவான குருகூர் சடகோபனுக்கு முன்னரே சூரியோதயத்தை அறிவிக்கும் அருணோதயம் போலத் தோன்றியவர். தம் குருவிடமிருந்து பெற்ற ஞானத்தை மக்களிடம் நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற பரமகாருணிகரான மதுரகவிகள், தம்மை அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். குருவைத் தவிர தான் வேறு தெய்வமும் வேண்டேன் என்ற மனநிலையுடன், இரவும் பகலும் அவரது திருத்தொண்டிலேயே ஈடுபட்டுத் தன் வாழ்நாளைக் கழித்தவர்,” என்று கூறிய பராங்குச தாஸர், “எங்கள் பரம்பரையில் மதுரகவிகள் குறித்து ஒரு சம்பவத்தை நினைவுகூறுவார்கள்” என்றார். நாதமுனிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிரு...

நேற்றைய கட்டுரை இன்றைய விளக்கம்

 நேற்றைய கட்டுரை இன்றைய விளக்கம் நேற்று எழுதிய ‘1,00,000 டாலர் வீசா - புலம்பெயரும் இந்தியர்களின் புலம்பல்’ என்ற கட்டுரை பலரை பாதித்துள்ளது. கமெண்ட்ஸ் பல வந்திருந்தன. எழுதிய முக்கியமான விஷயத்தை சிலர் மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். ‘சமீபத்திய செய்திகளை படிக்க மாட்டீர்களா?’ வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கைக்கு வியாக்கியானம் அருளியுள்ளார்கள். அவர்களுக்கு வெள்ளை மாளிகை சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். டிரம்ப் வரி விதிப்பையோ, இந்த விசா குறித்த குழப்பமான அறிவிப்பு பற்றியோ என் கருத்து ஒன்றுமில்லை. அவர்கள் நாடு, அவர்கள் பாடு. அவர் எத்தனை கண்டிஷன் போட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்தியா இவற்றை அனுகிய விதம், நாம் இந்தியர்களாகப் பெருமைப்பட வேண்டும். இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. உங்களுக்கு அமெரிக்கா சென்றவர்களைப் பார்த்துப் பொறாமை, வக்கிரம், காழ்ப்புணர்ச்சி; இங்கே இடஒதிக்கீடு, ஊழல், அரசியல் அதனால் அங்கே போகிறோம் இதில் என்ன தப்பு என்று கோபமாக பலர் கேட்டுள்ளார்கள். ’இந்தியா பொருளாதாரம் ஒரு செத்த பொருளாதாரம் (Dead Economy)’ ...

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல்

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக (சுமார் 88 லட்சம் ரூபாய்) உயர்த்தி புதிய மகாளய அமாவாசை அன்று முதல் இது அமலுக்கு வரும் என்ற உத்தரவை வெளியிட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை. சமீப காலங்களில் மோடியின் ‘நண்பர்’ டிரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோக் குடிக்க, டாஸ்மாக் போலக் கூடுதலாக 10$ கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் நம்பக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டேன். பையன் அனுப்பிய ‘சிஸ்கோ’ முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு, மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமன் க்யூவில் என் பையன் ‘சான் ஹோசே’வில் இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அப்பாக்களின் நிலை என்னவாகுமோ என்று தெரியவில்லை.  இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கொடுக்கும் ‘கேரட்’தான் இந்த H1B விசா. இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றங்களுக்கு இடையில் இந்த யதார்த்தத்தை இனி எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை. H1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பெற்றோர் ஐசியூவில் இருந்தாலும் (இருக...

பகுதி 7 - மாறன்

 7. மாறன்  நாதமுனிகள் பராங்குசதாச பிள்ளையிடம், “என்ன ஆச்சரியம்! என் பெயர் உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது! அப்படியானால் அமுதத் தமிழில் குருகூர் சடகோபன் அருளிய அந்த ஆயிரம் பாசுரங்களையும் நீங்கள் அறிவீர்களா?” என்று வியப்புடன் கேட்டார். “ஐயனே! ஆயிரத்தில் ஒன்றும் நாங்கள் கற்றறிந்ததில்லை. அந்த ஓலைச் சுவடிகளும் நாங்கள் கண்டதில்லை. ஆனால், எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் எனப் பரம்பரையாக 'நாதமுனிகள்' என்ற திருநாமம் எங்களுக்கு மிகப் பரிச்சயம். இந்தப் திருநாமத்தைக் கொண்ட ஒரு யோகி என்றாவது ஒருநாள் எங்கள் குருகூர் சடகோபன் அருளிய பாசுரத்தை மீட்டெடுக்க விஜயம் செய்யப் போகிறார் என்று எங்கள் குலமே பல நூறு வருடங்களாகக் காத்து இருந்தார்கள். எங்கள் முன்னோர் வாக்கு பொய்க்கவில்லை! இன்று தாங்கள் அந்தப் பாசுரங்களைப் பற்றிக் கேட்டவுடன் நீங்கள் தான் அந்த நாதமுனிகளாக இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டது!” என்றார். இதைக் கேட்ட நாதமுனிகளுக்குப் பட்டமரம் தழைப்பது போன்ற நம்பிக்கை தழைக்கத் தொடங்கியது. மலையிலுள்ள பாம்புக்கூட்டங்களின் பிரகாசமான மாணிக்கங்கள் எல்லாம் ஒன்று திரண்டு அருவியாக கொட்டியது...

பகுதி 6 - வைத்தமாநிதி

6. வைத்தமாநிதி   திருக்குருகூருக்குள் நாதமுனிகள் நுழைந்தபோது, கதிரவன் மெதுவாக எட்டிப்பார்த்தான். முன் இரவின் புயலுடன் கூடிய மழையின் சுவடுகள் எங்கும் காணப்பட்டன. தாமிரபரணி ஆற்றிலிருந்து வழிந்தோடிய நீர், வழி நெடுகிலும் சிறு வாய்க்கால் போல ஓடிக்கொண்டு இருந்தது. சிறு மீன்கள் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் துள்ளிக்கொண்டு நீர் அழைத்துச் சென்ற பாதையில் காய்ந்த சுள்ளிகளும் இலைகளுடன் சென்றன. சிறு குன்றுகள் குளித்தது போல மாட மாளிகைகள் காட்சி அளித்தன. மரங்களின் கிளைகள் ஈரத்தின் எடை காரணமாகத் தாழ்ந்திருந்தன. அதனால் அவற்றிலிருக்கும் பழங்களைச் சிறுவர்கள் கைக்கெட்டும் தூரத்தில் பறிக்க முடிந்தது. வாழை மரங்களும், கரும்புகளைப் போன்று ஓங்கி வளர்ந்த நெற்பயிர்களும் தங்கள் தலையைக் குனிந்து நாதமுனிகளை வணங்குவது போலக் காட்சி அளித்தன. மூங்கில் இலைகளின் நுனியில் நீர்த்துளியின் மீது இளஞ்சூரியனின் ஒளிபட்டு, அவை வைரங்கள் பூத்துக் குலுங்கும் மரம்போலக் காட்சி அளித்தன. மின்னிய அக்காட்சியைக் கண்டு நாதமுனிகள் வியந்து பார்த்த அதே சமயம், பறவைகள் அம்மரத்தின் மீது கூட்டமாக வந்து அமர்ந்தன. அப்போது, வைரத்துளிகள் மொ...

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌…

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌… ஸ்ரீராமரைக்‌ குறித்து சிலர் பேசிய காணொளிகளைப்‌ பார்க்க‌ நேர்ந்தது. ஒன்று நான்‌ பெரும்‌ மதிப்பு வைத்திருக்கும்‌ திரு. தமிழருவி மணியன்‌ அவர்களின்‌ பேச்சு. அவர்‌ ஓர்‌ ஆத்திகர்‌. பொது வாழ்வில்‌ காமராஜர்‌ போல்‌ எளிமையையும்‌, நேர்மையையும்‌ கடைப்பிடிப்பவர்‌.  ஸ்ரீராமர்‌ சீதையைத்‌ தேடிக்கொண்டு செல்லும்‌ போது சுக்ரீவனைச்‌ சந்தித்து உதவி கேட்கிறார்‌. சுக்ரீவனைச்‌ சந்திக்கும்‌ இடத்தை வால்மீகி எப்படி அமைத்திருக்கிறார்‌? கம்பன் எப்படி கூறியிருக்கிறார் என்பதை விவரிக்கிறார். அவர்‌ கூறியதைச்‌ சுருக்கமாக‌ இங்கே தருகிறேன்‌. ராமனும்‌ லக்ஷ்மணனும்‌ சுக்ரீவனைத்‌ தேடிக்கொண்டு செல்கையில்‌, அனுமனைச்‌ சந்திக்கிறார்கள்‌. அனுமனைச்‌ சந்தித்த‌ போது லக்ஷ்மணன்‌ நடந்த‌ கதையை எல்லாம்‌ சொல்கிறான்‌. இதைக்‌ கேட்ட‌ அனுமன்‌ ராம லக்ஷ்மணர்களைத்‌ தன்‌ முதுகில் ஏற்றிக்கொண்டு சுக்ரீவன்‌ இருக்கும்‌ இடத்தை அடைகிறார்‌. இதே காட்சியைக் கம்பன் இதை மாற்றி அமைத்திருக்கிறார்‌. அனுமனுடன் சந்திப்பு நிகழ்ந்த‌ பின்‌, "நீ போய்‌ சுக்ரீவனை அழைத்துக்‌ கொண்டு வா" என்று கூற‌, அனுமன்‌ ஓடிச்‌ சென்று சுக்ரீவனை அழை...

பகுதி 5 - மதுரகவி

5. மதுரகவி மதுரைச் சங்கத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, சங்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னே, வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரந்து விரிந்த தமிழ் தேசத்தில், தென்திசையான பாண்டி நாட்டில், அகத்திய குறுமுனிவர் தம்முடைய சீடர்களுடன் ஒரு சங்கம் அமைத்துத் தமிழ்ப் பயிரைப் பொதிய மலையிலே[1]  வளர்த்தார். அதனால் இம்மலை அகத்தியமலை என்றும் பெயர் பெற்றது. ஆனால் இம்மலைக்குச் செல்வது ஆபத்து என்று ஒரு கதை உண்டு[2].. சீதையைத் தேடப் புறப்படும் வானர வீரர்களை நோக்கிச் சுக்ரீவன் வழி விவரிக்கையில், “அகத்திய மலையில் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது” என்கிறான். தமிழ் முனிவரும், தமிழ் சங்கமும் இருக்கும் இடத்தில் என்ன ஆபத்து நிகழப்போகிறது என்று அனைவரும் யோசிக்க, சுக்ரீவன் சொல்கிறான், “பொதிய மலையைத் தூரத்திலிருந்து கண்டதும், ‘என்ன அழகான மலை! அங்கே அகத்திய குறுமுனிவரை வணங்கிவிட்டுச் செல்லலாம்’ என்று தோன்றும். அதுவே ஆபத்து! அங்கே எப்போதும் தமிழ்ப் பாடல், தமிழிசை, தமிழ்க் கூத்து என முக்கனிகள் போல மூவகைத் தமிழ் விருந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். அத்தகைய விருந்தை விட்டுப் போக யாருக்குத்தான் மனம் வரும்? அங்கே சென்றால...