(3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல் இன்று நினைத்தால் காலை புறப்பட்டு திருமலைக்குச் சென்று பெருமாளைச் சேவித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடலாம். ஸ்ரீராமானுஜர் தன் வாழ்ந்த 120 வருடங்களில் திருமலைக்கு மொத்தம் மூன்று முறை தான் சென்றிருக்கிறார்! ஸ்ரீராமானுஜரின் திருமலை யாத்திரையால் தான் இன்று நாம் கோவிந்தா கோஷத்துடன் திருவேங்கடவனை க்யூவில் சேவிக்க முடிகிறது! உடையவரின் முதல் யாத்திரையிலிருந்து தொடங்கலாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உடையவர் திருவாய்மொழி காலட்சேபம் சாதித்துக்கொண்டு இருக்கிறார். “சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்ற பாசுர வரிகளைப் படிக்கும் போது, அவர் கண்களில் நீர் வழிகிறது. சீடர்களுக்குப் புரியவில்லை. அதில் ஒருவர் “ஏன் கண்களில் கண்ணீர் ?” என்று கேட்க அதற்கு உடையவர் “வேங்கடத்து எழில்கொள் சோதி” என்று ஆழ்வார் பாடிய இந்தத் திவ்வியதேசத்தில் நித்தியப் புஷ்பக் கைங்கரியம் செய்ய இப்போது யாரும் இல்லையே! என்று வருத்தமாக இருக்கிறது.. உங்களில் யாரேனுமுண்டோ ?” என்று கேட்க அங்கே ஓர் அமைதி நிலவியது. அனந்தாழ்வான் எழுந்து ”அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றா...