Skip to main content

Posts

(3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல்

 (3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல் இன்று நினைத்தால் காலை புறப்பட்டு திருமலைக்குச் சென்று பெருமாளைச் சேவித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடலாம்.  ஸ்ரீராமானுஜர் தன் வாழ்ந்த 120 வருடங்களில் திருமலைக்கு மொத்தம் மூன்று முறை தான் சென்றிருக்கிறார்!  ஸ்ரீராமானுஜரின்  திருமலை யாத்திரையால் தான் இன்று நாம் கோவிந்தா கோஷத்துடன் திருவேங்கடவனை க்யூவில் சேவிக்க முடிகிறது!  உடையவரின் முதல் யாத்திரையிலிருந்து தொடங்கலாம்.  ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உடையவர் திருவாய்மொழி காலட்சேபம் சாதித்துக்கொண்டு இருக்கிறார். “சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்ற பாசுர வரிகளைப் படிக்கும் போது, அவர் கண்களில் நீர் வழிகிறது. சீடர்களுக்குப் புரியவில்லை. அதில் ஒருவர் “ஏன் கண்களில் கண்ணீர் ?” என்று கேட்க அதற்கு உடையவர் “வேங்கடத்து எழில்கொள் சோதி” என்று ஆழ்வார் பாடிய இந்தத் திவ்வியதேசத்தில் நித்தியப் புஷ்பக் கைங்கரியம் செய்ய இப்போது யாரும் இல்லையே! என்று வருத்தமாக இருக்கிறது.. உங்களில் யாரேனுமுண்டோ ?” என்று கேட்க அங்கே ஓர் அமைதி நிலவியது. அனந்தாழ்வான் எழுந்து ”அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றா...

சித்திர ராமானுஜர் - அறிவிப்பு

சித்திர ராமானுஜர் - அறிவிப்பு 2017ல் மேல்கோட்டை சென்றிருந்த போது ‘Academy of Sanskrit Researchல் பல ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் ஸ்ரீராமானுஜரின் வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அழுக்கு படிந்து அடுத்த மழைக்கு நாசமாகிவிடும் போல இருந்தது. அங்கே இருப்பவர்களிடம் மொத்தச் சரித்திரமும் இருக்கிறதா என்று கேட்டேன். சில படங்கள் தான் இருக்கிறது என்றார்கள்.  இது யாருடையது, எங்கே கிடைக்கும் என்று தேடி ஓய்ந்துவிட்டேன். பிறகு சமீபத்தில் அந்தப் படங்கள் கருப்பு வெள்ளையில் கிடைத்தது. ராமானுஜருடைய வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 108 படங்கள்.  இந்தப் படங்களை ‘ராமானுஜர் தேசிக முனிகள்’ அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜரின் 1008வது திருநட்சத்திரம் அன்று தோன்றியது. இதன் வேலைகளை இன்று முதல் எம்பெருமானாரின் ஆசிகளுடன் ஆரம்பிக்க இருக்கிறேன்.  புத்தகம் குறித்து மேலும் விவரங்களை அவ்வப்போது சொல்லுகிறேன்.  உடையவர் திருவடிகளே சரணம்  -சுஜாதா தேசிகன் சுஜாதாவின் 90வது பிறந்த தினம் 

(2) தேவராஜனும், யதிராஜனும்

(2) தேவராஜனும், யதிராஜனும்  இளையாழ்வாரின் 16-ஆவது வயதிலேயே தன் தந்தை பரமபதமடைய, அவர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தன் தாயார் மனைவியுடன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் தேவப்பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகில் குடிபுகுந்தார். அக்காலத்தில் திருபுட்குழியில் பிரபலமான அத்வைதச் சன்னியான யாதவபிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார்.  இக்காலத்தில் இளையாழ்வார் திருக்கச்சி நம்பி என்ற பாகவதரின் நட்பு கிடைத்தது. நம்பி ஆளவந்தாரின் சிஷ்யர். அவர் பேரருளாளனிடம் பிரேமை கொண்டு ஆலவட்டக் கைங்கரியம் செய்துகொண்டு பெருமாளிடம் அந்தரங்கமாகத் தினமும் பேசிக்கொண்டு இருந்தார். இவரிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக இளையாழ்வாருக்கும் தேவப் பெருமாளிடம் அன்பும் பக்தியும் வளர்ந்தது.  இளையாழ்வார் யாதவ பிரகாசரிடம் வேதாந்தப் பாடம் கற்கும் போது வைணவக் கொள்கைக்கு ஏற்காமல் சில வாக்கியங்களால் பிணக்கு ஏற்பட்டு, யாதவப்பிரகாசர் இளையாழ்வாரை கங்கையில் மூழ்கடிக்கச் சூழ்ச்சி செய்ய, அதிலிருந்து இரவோடு இரவாகத் தப்பிக்க, தேவப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் வேடுவனாகவும், வேடுவச்சியாகவும் வந்த காப்பாற்றினார்கள். தாயாராக ...

(1) தேரோட்டிய யதுபதியும், வழிகாட்டிய யதிபதியும்

 (1) தேரோட்டிய யதுபதியும், வழிகாட்டிய யதிபதியும் ஸ்ரீராமானுஜருடைய தந்தை ஆசூரிகேசவ சோமயாஜி தம்பதிக்கு வெகு காலமாகப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒரு சமயம் அவர் திருவல்லிக்கேணிக்கு பெருமாளை சேவிக்க சென்றிருந்தார். அப்போது அங்கே ஸ்ரீ பார்த்தசாரதியை வணங்கி தனக்குப் பின் கைங்கரியத்துக்கு ஒரு புத்திரனை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றைச் செய்தார். பெருமாள் அவர் கனவில் தோன்றி “நாமே உமக்குப் புத்திரனாகப் பிறக்கிறோம்” என்பதை பிள்ளைலோகம் ஜீயர் ராமானுஜரின் சரித்திரத்தில் எடுத்துரைக்கிறார்.  பத்ம புராணத்தில் “இன்னும் நீண்ட காலத்திற்குப் பின்பு பகவானே உலகத்தில் ஒரு திரிதண்டி சந்நியாசியாக அவதாரம் செய்து தர்மத்தை நிலைநிறுத்துவான். அந்தத் திரிதண்டி சந்நியாச அவதாரம் செய்பவர் பாதராயணாருடைய உபதேசங்களையும், கீதார்த்தங்களையும் உபதேசிக்கும் அந்தத் தெய்வப் புருஷர் வியாச சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி உலகத்தைப் புரட்டு வாதங்களிலிருந்து மீட்டு உண்மைப் பாதைக்குத் திருப்புவார்” என்கிறது.  இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானத்தில் “அனந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மநச்ச ததா: பரம் பலபத்ரஸ் த்ருத்யஸ...

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும்

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா? வளர்க்குமா? என்ற பட்டிமன்றத் தலைப்பு உரையாடலைப் பார்க்க நேர்ந்தது. 'வாசிப்பு’ என்ற வார்த்தையை முதலில் பார்த்துவிடலாம். வாசிப்பது, படிப்பது என்று இரண்டு வகையானது.  ரயிலில் பாக்கெட் நாவலை வாசித்தேன் என்பதற்கும் ‘பகவத்கீதையை’ படித்தேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று casual reading இன்னொன்று serious reading. முதல் வகைப் பொழுதுபோக்கிற்காகப் படிப்பது. (இன்றைய பல தமிழ்ப் புத்தகங்கள் இந்த வகையைச் சார்ந்தது) அடுத்து ஆழ்ந்த வாசிப்பு வகையைச் சார்ந்தது. ’கம்பனும் ஆழ்வார்களும்’ (ம.பெ.சீனிவாசன்) போன்ற புத்தகங்கள் இதற்கு உதாரணம். இது போன்ற ஆ.வா புத்தகங்களைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து அதன் உட்பொருளை நம் அறிவாற்றல் மூலம் அறிவது மற்றுமல்லாது, அறிவைப் பெறுவதற்கான வழியும் கூட. இது மனிதனுக்கே மட்டும் உரித்தான செயல். செயற்கை நுண்ணறிவினால் இதைச் செய்ய முடியாது, அல்லது அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆழ்வார் பாடல்களுக்கு உரைகள் பல இருக்க, பலர் என்னிடம் கேட்கும் கேள்...

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்)

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்  ( தமிழில் சுஜாதா தேசிகன்)  ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.  ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.  ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...

ஆபாச சகிப்புத்தன்மை

ஆபாச சகிப்புத்தன்மை  முன்பு எப்போதோ படித்த நகைச்சுவை இது.  ஒருவர் கருப்பாக ஏதோ குடித்துக்கொண்டு இருக்க, பையன் ஓடி வந்து, "அப்பா, வீட்டுத் தண்ணீரில் சாக்கடை கலந்துவிட்டது குடிக்காதே! வயிற்றுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது!" என்று பதற, அப்பா கூலாக, “அப்படியா எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! நல்லா தானே இருக்கு!” என்பார். பையன் முழிக்க, அப்பா, “உங்க அம்மா போட்ட காபி என்று நினைத்தேன்” என்பார்.  இந்த அப்பாவைப் போலத் தான் இன்று தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். நம் மீது சாக்கடையை வாரி அடித்தாலும் அதைத் துடைத்துக்கொள்ளக் கூட தயங்குகிறோம். சமீபத்தில் தமிழக ‘உயர்’ கல்வித்துரை அமைச்சர் சைவம், வைணவம் குறியீடுகளைப் பாலியல் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தம் படுத்திப் பேசியுள்ளார்கள். பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய பூமியில் பயிருக்குப் பதில் களைகள்‌ பூத்துக்குலுங்குகிறது. அமைச்சர் பேசியதற்குப் பெண்கள் குறித்து அமைச்சர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது போன்ற பொத்தாம் பொதுவான கண்டனங்களைச் சொல்லி கடந்துச்செல்கிறார்கள். சைவம், வைணவம் குறித்து இப்படிப் பேச...

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான்.   ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது   இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து  மாழை மான் மட நோக்கி உன் தோழி   உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற    சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட  ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்...

பிச்சை - S, M, L, XL

பிச்சை - S, M, L, XL  ஸ்மால்  பொதுவாக நாம் காரில் செல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே பிச்சை கேட்பவர்கள் கையை உள்ளே நீட்ட அனுமதிப்பதில்லை. கண்ணாடியைக் கண் சிமிட்டுவது போல இறக்கி இரங்கிப் பிச்சைப் போடுவோம். காசுக்காக அவர்கள் நம் காரை துடைப்பதைக் கூட அருவருப்பு காரணமாக நிராகரிக்கிறோம். .  அதே போல் கோயிலில் பல பிச்சைக் காரர்கள் இருக்கும் போது ஒருவருக்குப் போட்டால் மொத்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்துகொண்டு பிச்சைக் கேட்பார்கள். அதைப் பல முறை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.  மீடியம்  சமீபத்திய  ஒரு YTபர் வீடியோ பண்டிகை பரிசாகத் துணிமணிகளை இலவசமாகக் கொடுக்க கூட்டம் எனக்கு உனக்கு என்று கையை வாகனத்துக்குள் நீட்டி வாங்குகிறார்கள். பொறுமையாக வாங்குங்கள், கையை உள்ளே நீட்டாதீர்கள் என்று அவர் சொல்ல இலவசத்தை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் முண்டியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க’ என அவர் தன் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.   லார்ஜ் இலவச நோட்டீஸ் கொடுத்தாலே கையை நீட்டும் தமிழக மக்கள், ஒவ்வொரு தேர்தல் ...

சில விஷயங்கள்

சில விஷயங்கள்  ராஜாஜி நான் பிறப்பதற்கு முன் எழுதிய தலையங்கங்களை அவ்வப்பொது படிப்பது உண்டு. அப்படிப் படிக்கும்(உண்மைகள் உறங்குவதில்லை) போது அந்தப் புத்தகத்தின் முன்னுரையை (வானதி ராமநாதன்) மீண்டும் ஒருமுறை படித்தேன்.  ”என்னுடைய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற இரண்டு நூல்களையும் 'இராமாயணம்', 'மகாபாரதம்' என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் என்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிடுகிறார்கள்.' - சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி' என்று 26-8-72 தேதியிட்டு ஓர் அறிவிப்பைக் 'கல்கி' வார இதழ் வெளியிட்டது. அப்போது என் தந்தையாருக்கு ராஜாஜி அவர்கள் ஆசீர்வாதம் செய்து இரண்டு பழங்களையும் எடுத்துத் தந்தார். "நான் கவர்னர் ஜெனரலா இருந்தது வெறும் ரெகார்டுலதான் இருக்கும். ஆனா இந்த மகாபாரதமும் இராமாயணமும் எழுதினேன் பாரு, அது இரண்டுமே இரண்டு கனிகள். கற்பகக் கனிகள். அதை இல்லை என்று சொல்லாமல் எப்பவும் மக்களுக்குக் கிடைக்கும்படியா மலிவான விலையிலே புத்தகமாப் போட்டுத் தந்து கொண்டே இருக்கணும். அதை நீ கட்டாயம் செய்வாய். அதற்கு அச்சாரம்தான் இந்தக் கனி" என்று அப்போது தி...

மழையில் அனுமான் சாலீசா

 மழையில் அனுமான் சாலீசா  சிறுவயதில் காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதாவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது!  அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வரைந்தேன்.  “அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சந்நிதியில் வெச்சுடு,” என்று பாட்டி அங்கீகரித்தாள் அனுமார் படத்துக்கு பார்டர் எல்லாம் போட்டுக் கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் சந்நிதியில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலை கோத்துச் சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணெய்யை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆ...

மெட்ராஸ் விஜயம்

மெட்ராஸ் விஜயம்  இரண்டு நாள் சென்னை விஜயம். எல்லா இடங்களிலும் 40₹ குறைந்து காபி இல்லை. கீதம் ஹோட்டலில் 38ரூ ( மினி காபி). காபி நன்றாக இருக்கிறது. கொடுத்தவுடன் சூடாக்க கைக்கு அடக்கமாக ஓர் அடுப்பு எடுத்துக்கொண்டு செல்வது உத்தமம். ஊர் முழுக்க காபி மாமா, மெட்ராஸ் காபி கடைகள் முளைத்திருக்கிறது. அதே போல் ஊர் முழுக்க ‘சாய்’ கடைகள்.  பல நாள் ஆசையான ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் சூரியன் வருவதற்கு முன் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். கீழே பார்த்த போது மூடி இருந்த திருப்பதி தேவஸ்தானம் தாயார் சன்னதியும் அருகில் திறந்திருந்த  'Tea Nagar Coffee' கடையும் கண்ணில் பட்டது. நடேசன் பூங்காவில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு இருந்த எழுத்தாளர் இரா. முருகனை பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். குத்து மதிப்பாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். ராமேஸ்வரம் சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவர்களைப் பார்க்கும் போது சர்க்கஸ் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் முதல்வர் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டும். ரங்கன் தெரு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு குப்பை தொட்டிக்கு பதில் இரண்டு வந்திருக்...