Skip to main content

Posts

ஆண்டாளும் தோழிகளும் - நாயகனாய் - 16

ஆண்டாளும் தோழிகளும் - நாயகனாய் - 16 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா, பூர்ணா, சுகபாஷிணி) ஆயர்பாடியில் உள்ள சிறுமியர்கள் எல்லோரையும் எழுப்பிவிட்டார்கள். யாரையெல்லாம் எழுப்ப வேண்டும் என்ற பட்டியல் அவர்கள் கையில் இருக்கிறது. இப்போது எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நந்தகோபனுடைய திருமாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கே முதலில் அரண்மனையைக் காப்பவனையும், பிறகு வாசல் காப்பவனையும் எழுப்பி அனுமதி பெறச் செல்கிறார்கள்.) (காட்சி: நந்தகோபன் இல்லம் அருகே வெளிச்சம் குறைவாக, பனி படர்ந்து இருக்கிறது. ஆண்டாளும் தோழிகளும், சற்றுத் தூரத்தில் கொடிகளுடன் கம்பீரமாகக் காணப்படும் அரண்மனையை நோக்கிப் போகிறார்கள். அரண்மனை வாசலில் ஒரு காவலாளியும், உள்ளே தோரணம் கட்டிய வாசலில் ஒரு காவலாளியும் கையில் வேலுடன் காவல் காக்கிறார்கள்.) சுகபாஷிணி: "கோதை! நாம் கண்ணனைத் தானே எழுப்பப் போகிறோம்? அதற்கு முன் ஏன் இந்தக் கோயில் காப்பவர்களிடம் அனுமதி பெற வேண்டும்? நாம் பாட்டுக்கு உள்ளே சென்றால் அவர்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை!" ஆண்டாள்: "அடியார்கள...

ஆண்டாளும் தோழிகளும் - எல்லே - 15

ஆண்டாளும் தோழிகளும் - எல்லே - 15 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா, பூர்ணா) அடுத்ததாக சுகபாஷிணி என்ற பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள். பூர்ணா இல்லத்திலிருந்து ‘ஏண்டி’ என்று கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் இருக்கிறது இவள் இல்லம். எல்லாப் (பாகவத) பெண்பிள்ளைகளுடைய கோஷ்டியையும் ஒன்றாகக் காண வேண்டும் என்ற ஆசை உடையவள். என்ன பேசினாலும் திரும்பச் சொல்லும் கிளிப் போல, இவள் பேச்சிலும், அழகிலும் கிளியைப் போன்றவள். (சுகம் - கிளி; பாஷிணி - பேசுபவள்).) (காட்சி: எங்கும் நல்ல வெளிச்சம். ஆண்டாளும் தோழிகளும் பாசுரம் 14-ல் சொன்னது போல ‘சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை’ என்று பாடிக்கொண்டே வருகிறார்கள். அதே பாடலை மென்மையாக மெருகேற்றி, இனிமையாகத் தனக்குள் யாரோ முணுமுணுக்கும் ஓசை கேட்கிறது. பாடலில் கவரப்பட்டு அதைத் தேடிக்கொண்டு, அந்த இனிமையான தேவகானம் வரும் வீட்டை அடைகிறார்கள்.) (குறிப்பு: ஏல, ஏலே என்பது தென் தமிழகப் பேச்சு வழக்கு. இவள் பேச்சுக்கும் அழகிற்கும் இவளைக் 'கிளி' என்றே அழைத்திருக்கலாம். ஆனால் இவள் இளம...

ஆண்டாளும் தோழிகளும் - உங்கள் - 14

ஆண்டாளும் தோழிகளும் - உங்கள் - 14 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா, சுலோச்சனா) அடுத்ததாக, 'நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள், எல்லோரையும் நானே எழுப்புகிறேன்' என்று தம்பட்டம் அடித்தவளை எழுப்பப் போகிறார்கள். ஆனால், சொன்னதை மறந்துவிட்டு, வெட்கமே இல்லாமல் விடிய விடியத் தூங்கிக்கொண்டிருக்கிறாள் அவள். அவளை எழுப்பப் போகிறார்கள். உறங்குபவர்களை எழுப்பலாம்; உறங்குபவர்கள் போல் நடிப்பவர்களை? கொஞ்சம் கஷ்டம் தான்! இவள் நன்றாகப் பேசக்கூடியவள். பக்தி, பண்பு, அறிவு என்று எல்லாவற்றிலும் சிறந்த பரிபூர்ணமானவள். அவள் பெயர் பூர்ணா. (நங்காய் - பரிபூர்ணமானவள்/குணபூர்த்தி).) (காட்சி: பூர்ணாவின் வீட்டு வாசலை வந்தடைந்துவிட்டார்கள். பனி முழுவதும் விலகிவிட்டது. பூர்ணாவின் வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளும் செழித்து வளர்ந்த அடர்ந்த அழகிய தோட்டம், புழக்கடையில் (வீட்டின் பின்புறம்) அழகிய ஒரு சிறு குளம் ஒன்றும் இருக்கிறது. அதில் செங்கழுநீர், ஆம்பல் பூக்கள் நிறைந்து இருக்கிறது. ஆயர்பாடியில் உள்ள கோயில்களுக்கு இவள் வீட்டு வாசலைக் கடந்துதான் போக ...

புள்ளின்வாய் கீண்டானை - கோர்ட் வரை சென்ற பாசுரம்

புள்ளின்வாய் கீண்டானை - கோர்ட் வரை சென்ற பாசுரம் 12வது பாசுரத்தில் ராமனை 'மனதுக்கினியான்' என்று ஆண்டாள் குறிப்பிட்டது, அவளுடைய கோஷ்டியில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது. இதனால் ஆண்டாளின் கோஷ்டி, கண்ணன் கோஷ்டி மற்றும் ராமர் கோஷ்டி என்று இரண்டாகப் பிரிந்தது. கோஷ்டி என்றாலே சண்டை இருக்கத்தானே செய்யும்? ஸ்ரீவில்லிபுத்தூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு கோஷ்டியினரும் 'ராமன் வாழ்க', 'கண்ணன் வாழ்க' என்று முழக்கமிட, அங்கே ஒரு சிறிய 'பங்காளிச் சண்டை' ஆரம்பமானது. தோழியரை எழுப்ப எந்தக் கோஷ்டி முதலில் செல்ல வேண்டும் என்பதே அந்தச் சண்டை. விடியற்காலையில் எந்த நீதிபதியும் எழுந்திருக்காத அந்த காலத்தில், இரு கோஷ்டியினரும் பெரியாழ்வாரிடம் சென்று முறையிடலாம் என்று ஒருமனதாக முடிவு செய்து அவரிடம் சென்றார்கள். புஷ்பங்களைத் தொடுத்துக்கொண்டிருந்த பெரியாழ்வார், 'கேஸ்' ஓலைச்சுவடிகளைப் பார்த்தார். இதை 'அவுட் ஆப் தி கோர்ட் செட்டில்மெண்ட்' செய்யலாம் என்ற யோசனையில், "சிறுமியர்களே! தொண்டரடிப்பொடி ஆழ்வார் 'அயோத்தி எம்மரசே' என்று பெரிய பெருமாளை ராமராகப் பாடுகிறா...

ஆண்டாளும் தோழிகளும் - புள்ளின்- 13

ஆண்டாளும் தோழிகளும் - புள்ளின்- 13 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா, தனநிஷ்டா) அடுத்ததாக, கண்ணழகி ஒருத்தியை எழுப்பப் போகிறார்கள். 'என் கண்ணழகிற்கு மயங்கி கண்ணன் தானே என்னிடம் வரட்டும்' என்ற செருக்கில் படுக்கையில் கிடக்கிறாள் அவள். இவள் பெயர் சுலோச்சனா ('சு' - அழகான + 'லோச்சனா' - கண்கள்). (காட்சி: தனநிஷ்டாவின் வீட்டு வாசலில் பால் சேற்றில் நின்றதால், காலில் சகதியுடனும், மழையில் நனைந்த ஈரமான உடைகளுடனும் தோழிகள் மெதுவாக நடந்து செல்கிறார்கள். உள்ளே இருப்பவள், கோகுலத்தில் கண்ணனைப் பாடாமல், ராமரை அதுவும் ‘மனத்துக்கு இனியானை’ என்று எப்படிப் பாடலாம் என்ற செல்லக் கோபத்தில், இவர்கள் பார்க்கும்படி முகத்தைத் திருப்பிக்கொண்டு கிடக்கிறாள். அவளின் மன எண்ண ஓட்டத்தை ( மைண்ட் வாய்ஸ் ) அறிந்த தோழிகள் அவள் வீட்டு வாசலில்… ) (புள்ளின் வாய் கீண்டானை) ஆண்டாள்: "தாழ்ந்த நீர் நிலைகளிலே மேயும் கொக்கு உருவத்தில் கள்ள அசுரனான பகாசுரனின் வாயை வயிறுவரை இரண்டாகப் பிளந்த…” (கண்ணனின் வீரச்செயலைக் கேட்டவுடன், உள்ளே இருப்பவள் சற்று கோபம்...

ஆண்டாளும் தோழிகளும் - கனைத்து - 12

ஆண்டாளும் தோழிகளும் - கனைத்து - 12 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா, ஹேமலதா) அடுத்ததாக, கண்ணனின் நிழலாகத் திகழும் 'நற்செல்வன்' என்பவனின் தங்கையை எழுப்பப் போகிறார்கள். ராமனுக்கு எப்படி லட்சுமணனோ, அதுபோலக் கண்ணனுக்கு இந்தச் செல்வன். அண்ணனைப் போல் தங்கையும். அவள் பெயர் தனநிஷ்டா.) (காட்சி: 'செல்வப் பெண்டாட்டி'யான ஹேமலதா இல்லத்துக்கு மிக அருகில் இருக்கும் இல்லம். எருமை மாடுகள் ஏராளமாக நிற்கின்றன. வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. பாசுரம் 4-ல் வேண்டிக் கொண்டபடி லேசாகத் தூறல் போடத் தொடங்குகிறது) ஹேமலதா: "அடுத்து யாரை எழுப்பப் போகிறோம்?" புல்லகலிகா: "உன் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் செல்வனின் தங்கை தனநிஷ்டாவை." ஆண்டாள்: "நாடோ, காடோ... ராமனைப் பின்தொடர்ந்த இளையபெருமாளைப் (லட்சுமணனைப்) போல், இவனுக்கும் கண்ணனைத் தவிர வேறு எதுவும் தெரியாதே! அதனால் இவனை வெறுமனே செல்வன் என்று சொல்லாமல் ‘நற்செல்வன்’ என்று அழைப்பது தான் பொருத்தம்." பத்மா: "அவனுடைய தங்கையும் அப்படியே! கண்ணனுக்குத் தொண்டு புரியும் ...

ஆண்டாளும் தோழிகளும் - கற்று - 11

ஆண்டாளும் தோழிகளும் - கற்று - 11 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா, சொர்ணலேகா) அடுத்ததாக ஹேமலதா என்ற பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள். கண்ணன் எப்படி கோகுலத்திற்கே ஒரே செல்லப் பிள்ளையோ, அதுபோல இவள் கோகுலத்திற்கே ஒரே செல்ல மகள். உயர்ந்த குடியில் பிறந்தவள். ஒரு கொடியானது படர்வதற்கு எப்படிக் கொழுகொம்பு (ஆதாரமான மரம்) தேவையோ, அதுபோல இவள் கண்ணன் என்னும் கொழுகொம்பைச் சார்ந்து இருக்க வேண்டிய மென்மையான பொற்கொடி போன்றவள். இவளுக்கு ஒரு குணம் உண்டு - "நான் ஏன் அவனை அடைய நோன்பு இருக்க வேண்டும்? அவனுக்கு விருப்பம் இருந்தால், அவனே நோன்பு இருந்து வந்து என்னை அடையட்டும்" என்ற எண்ணம் கொண்டவள். (ஹேமலதா என்றால் பொற்கொடி) (காட்சி: எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவியிருக்க, அவர்கள் மாடவீதியிலிருந்து கோவலர்கள் குடியிருக்கும் வீதிக்கு வருகிறார்கள். அங்கே மாடுகளும் எருமைகளும் நிரம்பியிருக்க, அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகளின் ஓசை கேட்கிறது.) சொர்ணலேகா: "கோதை! அடுத்து யாரை எழுப்பப் போகிறோம்?" ஆண்டாள்: "குணம், குலம், ரூபம் என்று எல்லாவற்றிலும் சிறந்த ஹேமலதா...

ஆண்டாளும் தோழிகளும் - நோற்று - 10

ஆண்டாளும் தோழிகளும் - நோற்று - 10 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் (தோழி, புல்லகலிகா, பத்மா, விசாகா, சுகந்தா) நறுமணம் மிக்க சுகந்தாவை (பாசுரம் 9) எழுப்பிய பின், அவள் தாயாரிடம் விடைபெற்றுக்கொண்டு அவளுடன் அடுத்த பெண்ணை எழுப்பப் புறப்பட்டார்கள். கண்ணனுக்கு ஆபரணம் போன்றவள் அவள்; பெயர் சொர்ணலேகா.) (காட்சி: பனி விலகி, எல்லா இடங்களிலும் வெளிச்சம் பரவியிருக்கிறது. சொர்ணலேகாவின் இல்லம் கண்ணன் வீட்டுக்கு அடுத்த வீடு. ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் இவர்கள் இல்லம் அமைந்துள்ளது. இல்லங்களுக்கு இடையில் இடைவெளி இல்லாமல் பொதுவான இடைச்சுவர் உள்ளது; அதில் ஒரு ரகசியக் கதவும் இருக்கிறது!) சுகந்தா: "கோதை! அடுத்து யாரை எழுப்பப் போகிறோம்?" ஆண்டாள்: "வேறு யாரை! சொர்ணலேகா!" புல்லகலிகா: "தாகம் எடுத்தால் 'தண்ணீர் தண்ணீர்' என்று தவிப்பது போல் நாம் 'கண்ணன் கண்ணன்' என்று தவித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கண்ணனோ இவள் எப்போது கிடைப்பாள் என்று ஏங்கிக்கொண்டு இருப்பான்!" பத்மா: "ஆயர்பாடியில் கண்ணன் பிறந்த பின் 'கம்பும் கற்றையும்' போல வளைந்து கொடுக்காத தடி ஆண்க...

ஆண்டாளும் தோழிகளும் - தூமணி - 9

ஆண்டாளும் தோழிகளும் - தூமணி - 9 (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் கண்ணனால் பெரிதும் விரும்பப்பட்ட விசாகா என்ற பெண்ணை எழுப்பிய பின், சூரியன் புறப்பட்டு விட்டான் என்று வேகமாக நடந்து மாட வீதிக்குள் நுழைகிறார்கள். அங்கே ஆண்டாளின் மாமான் மகளை எழுப்பப் போகிறார்கள். அவள் பெயர் சுகந்தா. பெயருக்கு ஏற்றபடி நறுமணம் கொண்டவள். கண்ணனுக்காக சந்தனம் அரைத்தல் மற்றும் நறுமணப் பொடிகளைத் தயாரிப்பதில் வல்லவள். அவள் வீட்டு வாசலை அடைகிறார்கள்.) (மாமான் மகள் குறிப்பு: ஆயர்பாடியில் மாலாகாரின் மகள் இவள்.பெரியாழ்வாரும் புஷ்ப கைங்கரியம் செய்பவர் என்பதால், அந்தத் தொடர்பைக் கொண்டு ஆண்டாள் இவளை 'மாமான் மகள்' என்று உறவு முறை பாராட்டி அழைக்கிறாள். உடலால் வரும் உறவு அழியும்; ஆத்ம உறவு அழியாதது) (காட்சி: பனிமூட்டத்தின் ஊடாக இளம் சூரியக் கதிர்கள் ஊடுருவிச் செல்கின்றன. சூரிய ஒளி பட்டு அந்த வீட்டின் சுவர்களில் பதிக்கப்பட்ட மாணிக்கங்கள் வர்ணஜாலமாகக் காட்சி தருகின்றன. முகப்பில் எங்கு பார்த்தாலும் மாணிக்கக் கற்கள் மின்னுவதால், கதவு எது சுவர் எது என்று தெரியாமல் ஆண்டாளும் அவள் தோழிகளும் வியக்கிறார்கள். உள்ளே சுகந்தா படுத்தி...

ஆண்டாளும் தோழிகளும் - கீழ்வானம் வெள்ளென்று - 8

ஆண்டாளும் தோழிகளும் - கீழ்வானம் வெள்ளென்று - 8 (சூழல்: ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் பறவைகளின் ஒலியைச் சொல்லி பத்மாவை எழுப்பிய பிறகு, கண்ணனால் பெரிதும் விரும்பப்பட்ட விசாகா என்ற பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள். கிருஷ்ணனை அடைய வேண்டும் என்ற ஆசை ஒருபுறம், ஊரார் விழித்துக்கொண்டால் தடுத்துவிடுவார்களே என்ற பயம் மறுபுறம் இருக்க, ஆர்வமும் தவிப்புமாக அந்தப் பெண்ணின் வீட்டு வாசலை அடைகிறார்கள்.) (காட்சி: பனி மெல்ல விலகி கிழக்கு வெளுக்கும் சமயம். பசுமையான வயல்களில் எருமைகள் ஆங்காங்கே தெரிகின்றன. கோயில்களில் மணியோசை கேட்கிறது. பறவைகள் இரை தேடிப் பறக்கின்றன.) பத்மா: "என்னை எப்படியோ எழுப்பிவிட்டீர்கள். அடுத்து உங்கள் கையில் சிக்கப் போவது யார்?" புல்லகலிகா: "கண்ணனுக்கு விருப்பமான விசாகா! நம் தோழிகள் எல்லோரும் இவளைத் தான் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்." (விசாகாவின் இல்லம் வருகிறது. வாசலில் நிற்கிறார்கள்.) புல்லகலிகா: "விசாகா! பொழுது விடிந்துவிட்டது; ஊரார் அனைவரும் விழித்துக்கொண்டால் நம்மைக் கண்ணனிடம் செல்ல விடமாட்டார்கள். அவர்கள் நம்மைத் தடுப்பதற்கு முன்பே நாம் புறப்...