Skip to main content

Posts

தஞ்சை பெரியகோயில்

முன்பு சோழர் பற்றி ஒரு பதிவு எழுதியது ஞாபகம் இருக்கலாம். ( படிக்காதவர்கள் இங்கு பார்க்கவும் ) நேற்று குரு சுப்பிரமணியம் அவர்களின் வலைப்பதிவில் இந்திய கோயில்களை பற்றிய ஒரு விவரணப்படம் படம் ஒன்று கிடைத்தது என்று எழுதியிருந்தார். நானும் முன்பு எப்போதோ டிவியில் இதை பார்த்திருக்கிறேன். ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில்களள பார்க்க பார்க்க ஒர் வித சந்தோஷம் கிடைக்கிறது. மூன்று வருடத்திற்கு முன் Birds eye viewவில் நான் வரைந்த ஸ்ரீரங்கம் படமும் ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கமும் ஒத்துப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. [%popup(20060621-srirangam_birds_eye_view.jpg|500|351|படம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்)%] 52 நிமிடம் ஓடும் இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை - பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன் தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'. பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமி...

நன்றி தேன்கூடு !

 இன்றைய தேன்கூடு 'வாசகர் பரிந்துரையில்' என் வலைப்பதிவு பற்றி வந்துள்ளது. தேன்கூடு குழுவிற்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்" என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் 'மொட்டைக் கடுதாசி' மொட்டைக் கடுதாசி - எஸ்.வி.ராமகிருஷ்ணன் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பத...

கும்பகோணம்

[%image(20060609-kootani_vans.jpg|175|131|kootani)%] தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிரசார வாகனங்கள் இங்கும் அங்கும் சென்றுகொண்டிருந்த நேரத்தில்  குடும்பத்துடன் கும்பகோணம் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம். வீராணம் குழாய், மதுராந்தகம் ஏரி, பண்ருட்டி பலாப்பழம், ரோடில் காயந்துகொண்டிருக்கும் கருப்பு உளுந்து, சுவரில் மாம்பழச் சின்னம் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே போனால் 7 மணி நேரம் ஆகிறது.     [%image(20060609-uppiliappan_gopuram.jpg|175|131|uppiliappan)%] கும்பகோணம் வந்தடைந்து மதியம் சாப்பிட்டபின் முதல் கோயிலாக திருவிண்ணகர் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் சென்றோம். திருமங்கையாழ்வார் , பேயாழ்வார் , நம்மாழ்வார் பாடிய இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. பெருமாள் ஒப்பிலியப்பன் - ஒப்பற்றவன் என்று பொருள். இக்கோயில் தளிகையில்(பிரசாதத்தில்) உப்பு சேர்ப்பதில்லை அதனால் பெருமாள் 'உப்பிலியப்பன்' என்றும் அழைக்கப்படுகின்றார். (கோயிலிக்குள் உப்பையோ உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் சென்றால் நரகத்துக்குச் செல்வா...

மீண்டும் மூளைக்கு வேலை

போன வருடம் டிசம்பர் மாதம் " மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை " என்ற பதிவுவை பார்த்திருப்பீர்கள். இன்னுமும் எனக்கு 'நான் இந்த Levelல்' இருக்கிறேன் எனக்கு உதவுங்கள்  என்று  ஈமெயிலில் என்னன சிலர் கேட்பதுண்டு. இந்த புதிர் இணையத்தில் நிஜமாகவே ஒரு பெரும் வெற்றி அடைந்தது. இதை தயாரித்த IIM Indore மாணவர்கள் இதற்கு தனியாக http://www.playklueless.com என்ற வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் . அதில் Hall of Fame என்ற தொடுப்பில் வரிசை எண் 455ல் ஒரு விஐபி பேர் இருக்கிறது :-)

சித்திர நாலாயிரம்

நேற்று ஸ்ரீரங்கம் பெருமாளை ஓசி பாஸ் மூலம் தரிசித்து விட்டு வரும் வழியில் வடக்கு சித்திர வீதியில் திரு S.R.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஓவிய கண்காட்சிக்கு சென்றது ஒர் இனிய அனுபவம். [%image(20060529-srinivasan.jpg|200|267|S.R.Srinivasan)%] நான் போன சமயம், சிலர் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு ஓவியத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். மிக எளிமையாக ஒரு மேல்துண்டுடன் வந்தவர்களுக்கு எல்லாம் தான் வரைந்தவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். சித்திர கவி பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு, அதாவது கவிதையை சித்திர வடிவில் எழுதுவது. ஆனால் திரு ஸ்ரீநிவாசன், கவிதையால் சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம், கோடு, புள்ளி எதுவும் இல்லாமல், நாலாயிர திவ்வியப்பிரபந்ததைக் கொண்டு 108 திவ்விய தேச பெருமாளை அந்தந்த நிலைகளிலேயே வரைந்துள்ளார். [%image(20060529-srinivasan_and_others.jpg|200|150|Srinivasan + crowd)%] உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெருமாளை 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 247 பாட்டுக்களால் வரைந்துள்ளார். அதுவும் எப்படி, திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதிப்பிரான்' என்ற பாட்டில் வரும் திருவரங்கனின் அழகை அவர் அங்க...

writersujatha.com

சற்று முன் எனக்கு திரு.சுஜாதாவிடமிருந்து வந்த மின்னஞ்சல். Dear Desikan, My website is up and running. the first book is fifty short stories Till now about fifty books have been inputted and are being progressively uploaded Please announce it in your blog Eventually all my books are going to be available thru Paypal on a nominal payment per book.  It may not be fair to give free access to my stories anymore as others will be paying. Hence I suggest you delink my stories from your website.  We will discuss this when you are in Chennai next regards Sujatha As per the request, I have removed the short stories from my site. :-(

சில்வியா - நேர்காணல் சுஜாதா

ஆனந்த விகடனில் சுஜாதா ஆரம்பித்திற்கும் தொடர். போன முறை பேசிய போது 8-9 வாரம் போகும் என்றார். இதை பற்றி தீபக் எழுதியுள்ளார் . ஆரம்பம் என்னும்  கொஞ்சம்  வேகமாக  இருந்திருக்கலாம்  ( "அப்படீன்னா?" என்றார் வசந்த். "அப்படியா?" என்றார் கணேஷ். மற்றும் ரசிக்கும் படி இருந்தது ).   அடுத்ததாக நிலாச்சாரலில் சுஜாதா அவர்களின் நேர்காணல். கிட்டத்தட்ட ஒரு டஜன் கேள்விகள். கேள்விகளை விட பதில் சின்னது. பதில் எழுதும் போது, பக்கத்து விட்டு அழும் குழந்தை, மேல் மாடி ஸ்டிரியோ அவரை டிஸ்டர்ப் செய்ததா என்று கேட்க வேண்டும். நேர்கணலுக்கு எடுத்து செல்லும் லிங்க் இங்கே

எழுபத்தொன்று - சுஜாதா

[%image(20060504-sujatha_hindu_pic.jpg|351|263|Sujatha)%] அதிகாலையிலிருந்து போன்கால்கள், பொக்கேக்கள், பரிசுகள், ஏதோ நேற்றுப் பிறந்தவன்போல என்னை உணரவைக்கும்  இந்தப் புதிய சங்கதிகளை என்னை விட என் எழுத்துக்கு நண்பர்கள் தரும் மரியாதையாக எண்ணி அதில் மமதை கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன். பேரெழில் குமரன் ஒரு மிகப் பெரிய வாழ்த்து அட்டையில் என் போட்டோக்களை அமைத்து  லாமினேட் பண்ணி அனுப்பியிருந்தார். குறைந்தபட்சம் அதைத் தயாரிக்க இரண்டு நாளாகியிருக்கும். அவர் என் பரம ரசிகர். மகனுக்கு வசந்த் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொன்னார். எழுபத்தோரு வயதைக் கடந்த இந்த தினத்தில் பி.ஜி.உட்ஹவுசின் over Seventy என்கிற புத்தகம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுபது வயதைக் கடந்ததும் இந்தப் புத்தகத்தை எழுதினார். தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த மாற்றங்களை அவருடைய தனிப்பட்ட நகைச்சுவை உணர்வுடன் எழுதினார். 'என்னப்பா! உனக்கு எழுபது வயதாகிறதாமே! பார்த்தால் 105 வயசான மாதிரி தெரிகிறாய். ஏன் இதைப் பற்றி எழுதி இன்னும் காசு பண்ணவில்லை?' என்று துவங்கி சில அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். ''அமெரிக்காவில் இப்போதெல்லா...

பெண்களூர்-0 7

போன வாரம் புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கும் இடத்தில் என்னையும் சேர்த்து ஒரு நான்கு பேர் தான் இருந்தார்கள். [%image(20060420-bangalore_violence.jpg|100|142|Violence)%] விசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயில் வந்துள்ளது என்றார்கள். நானும் கிளம்பினேன். வரும் வழியில் நடு ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஸிராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு வேகமாகப் போய்கொண்டிருந்தன. சுமார் இரண்டு கீமீ தூரத்துக்கு வாகன நெரிசல்... பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து டிவியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலையிலிருந்தே எங்கும் வன்முறை, பதட்டம் என்று டிவியில் சோக இசையில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கன்னட சேனல்கள், இரண்டு செய்தி சேனல்கள் தவிர மற்றவைகளில் எல்லாம் பூச்சிகள் தான் தெரிந்தது. டிவியில் பார்த்த வன்முறை செய்பவர்கள் 15-25 ...

கல்கி – அசோகமித்திரன்

இந்த வாரம் நான் படித்த இரண்டு பகுதிகளை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முதலில் கல்கி எழுதியது ( - ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம் ) ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், ‘‘என்னப்பா கதை சொல்லுகிறாயே?’’ என்கிறோம். ‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்?’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’ ‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’ ‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’ ‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன...

வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா

[%image(20060314-veetai.jpg|175|175|Kamal's New Movie )%] எனது நண்பர் மாணிக்கம் நாராயணின் அழைப்பில் அவர் எடுத்து முடித்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு குளிக்க அழைத்துச் செல்லப்படும் நாய்க்குட்டிபோலச் சென்றேன். காரணம் இம்மாதிரி விழாக்களில் படுத்துவார்கள். பத்துமணி என்று சொல்லி பதினொன்றரைக்கு முதல் நாற்காலிகளை மேடை மேல் வைத்து 'செக் செக் மைக் டெஸ்டிங்!' செய்வார்கள். விஐபிக்கள் செல்போனில் 'வந்துகொண்டே இருக்கிறேன்' என்று பாத்ரூமிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள். விழா நாயகர்கள் வரும்வரை எங்கள் போன்ற பாமரர்களுக்கு கமல் படங்களின் பழைய பாடல்களையும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சமீபத்திய பாடல்களையும் சின்மயி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, கார்த்திக், சரண், உண்ணி மேனன், ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் ஸ்ருதி விலகுவது பற்றி கவலைப்படாமல் பாடிக்காட்ட கமல் ரசிகர்கள் மாடியில் பால்கனியில் அவ்வப்போது 'ஆழ்வார்பேட்டை ஐயப்பா! 'மன்னார்குடி மாமன்னா' என்று ஆரவாரமிட்டுக் கொண்டிருக்க, எல்லோரும் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருந்தோம். மேடையில் மேலும்...

பலே பல்வந்த்பூரா

[%image(20060226-Peoplesrailway.jpg|160|160|People's railway station)%] ரயில்வே பட்ஜட்டில் ரயில் டிக்கேட் எவ்வளவு கம்மியாகியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்த போது, NDTVல் பல்வந்த்பூரா ஸ்டேஷனை பற்றி ஒரு கொசுரு செய்தியை கான்பித்தார்கள். பல்வந்த்பூரா(Balwantpura) ஜெய்பூரிலிருந்து நூற்றியருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது.  இந்திய வரைபடத்தில் இந்த மாதிரி ஓர் ஊர் இருக்கா என்று கூட தெரியாது. இந்த 1994 ஆம் ஆண்டு முதலே பல்வந்த்புராவில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் விரும்பி, ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் போதிய அளவு நிதியில்லை என்று ரயில்வே நிராகரித்தது. இதனால் சுற்றி உள்ள ஐந்து கிராமங்களில் இருப்பவர்கள் பஞ்சாயத்தில் ஒன்று கூடி தாங்களாகவே ஸ்டேஷன் கட்ட முடிவு செய்தனர். அவர்கள் ரயில்வேயிடம் "நாங்கள் ஸ்டேஷன் கட்டினால் நீங்கள் அட்லீஸ்ட் இந்த வழியாக வரும் ரயிலை நிறுத்துவீர்களா என்றனர்?" ரயில்வே சம்மதிக்கவே 20,000 மக்கள் கொண்ட ஊர் மக்கள், பக்கத்தில் உள்ள பள்ளி, கல்லூரி என்று நன்கொடை வசூலித்து தாங்களாகவே ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள்.  அங்கு...

IVA

[%image(20060225-iva_kid.jpg|240|180|IVA photo1)%] நம்மில் பலர் சமூக சேவை என்றால் அமெரிக்காவில் இருந்து $100 அல்லது உள்ளூர் ரூ1000/= கொடுத்து ரசீது வாங்கி வருமான வரி குறைப்புக்கு(80G) உபயோகப்படுத்துவது; CRY கார்ட் வாங்குவது; அலுவலகத்தில் வைத்திருக்கும் அட்டைபெட்டியில் உபயோகபடுத்திய துணிமணிகளை போடுவது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் சமூக சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொள்ளாலாம் அவ்வளவுதான். வயலில் இறங்கி வேலை செய்தால்தான் விவசாயின் கஷ்டம் தெரியும் என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். அதேபோல் தான் இதுவும். களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் அது எவ்வளவு கஷ்டமான ஆனந்தமான செயல் என்று தெரியும். IVA பற்றி இந்த பதிவில் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சிகொள்கிறேன். IVA என்பது "Individuals for Voluntary Activities" என்பதின் சுருக்கம். முதலில் Infosysல் வேலை செய்யும் சிலரால் 2003ல் ஆரம்பிக்கபட்டது. பிறகு மற்ற நிறுவனங்களின் மென்பொருளார்கள் இதில் சேர்ந்து இன்று 700க்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்!. முதலில் ஏழை குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தர ஆரம்பித்த இவர்கள் பிறகு கண்தெரி...

முழு வீச்சில் வேதாளம்

விக்கிரமாதித்தன் பத்தாவது மாடியில் ஒரு புது ஃபிளாட் வாங்கியிருந்தான். பால்கனியில் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு குமுதம் நடுப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தான், பார்த்துக்கொண்டிருந்தான் என்பது தான் சரியான வார்த்தை பிரயோகமாக இருக்கும். வேதாளம் எட்டிப் பார்த்தது. "ஐயோ! இங்கேயும் வந்துட்டையா?" என்று அதிர்ச்சியில் விக்கிரமாதித்தன் கத்தினான்.   "புது வீடு நன்றாகத் தான் இருக்கிறது!" "இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்" "தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்" "ஐயோ!" "உனக்குத் தெரியுமா ? இந்த மார்பிள், கிரானைட்டில் கதிர் வீச்சு இருக்கிறது!" "ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை" என்று விக்கிரமாதித்தன் கடுப்பானான். வேதாளம் வழக்கம் போல் தொடந்தது... "மார்பிள் ( சலவைக் கல் ), கிரானைட் ( கருங்கல் ) ஆகியவற்றில் கொஞ்சம் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன.  "யுரேனியம்(uranium), தோரியம்(Thorium) இவற்றில் தான் இருக்குன்னு நினைச்சேன்" ...

ஐந்து புத்தகங்கள்

வாரயிறுதியில் சென்னை செல்லும் போது 'நியூ புக் லெண்டஸ்'   செல்வது வழக்கம். அங்கு நண்பர் ஸ்ரீநிவாசனிடம்  'எந்த புத்தகம் நன்றாக போகிறது?' என்று விசாரிப்பேன். சென்ற வாரம் விசாரித்ததில் முதல் ஐந்து புத்தகங்கள் என்று அவர் சொன்னதை வலது பக்கம் தந்துள்ளேன். மாதம் ஒரு முறை புதுபிக்கலாம் என்று இருக்கிறேன். பார்க்கலாம். தகவல் சொன்ன ஸ்ரீநிவாசனுக்கு நன்றி

அறிவிப்பு

www.desikan.com   தளம் இயங்கும வழங்கி (சர்வர்) சில தடங்கல்களை நேற்று சந்திக்க நேர்ந்தது. இதனால் நேர்மை என்ற பதிவை பலர் படிக்கமுடியாமல் போய்விட்டது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தடங்கலுக்கு மன்னிக்கவும். என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி. நேர்மை என்ற பதிவை தொடர்ந்து படிக்க இங்கு சுட்டியை கிளிக் செய்யவும் .  

நேர்மை

சமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது .தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம். Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். ...

பெண்களூர்-0 6

நேற்று தான் பெங்களூர் வந்தது போல் இருக்கிறது, அதற்குள் ஒரு வருடம் ஓடிவிட்டது. இந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி வாரயிறுதி ஏதாவது ஒரு காரணம் வைத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கிறேன்.  போன ஜென்மத்தில் ரயில்வேக்கு நிறைய கடன் பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்த ஒரு வருடத்தில் இரண்டு வீடு மாத்த வேண்டியிருந்தது. தற்போது புதிதாக குடிபெயர்ந்த வீட்டின் பால்கனியில் வாழைப்பழம் சாப்பிட்டால் ஆபத்து. காரணம் கடைசியில். பெங்களூரில் வீடு தேடுவது அவ்வளவு சுலபம் இல்லை. வீடு தேடும் போது முதல் முதலில் இவரைதான் சந்தித்தேன். "சார், உங்கள் வீடு காலி என கேள்விப்பட்டேன் .." "ஆமாம், நீங்கள் எவ்வளவு பேர்?" "நான், என் மனைவி, குழந்தை, வீட்டை பார்க்கலாமா ?" "அப்படியா? வாடகை 14,000/= அதைத்தவிர மெயிண்டெனஸ், EB...எல்லாம் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" "சார் விட்டை பார்க்கலாமா..." "ஆணி அடிக்க கூடாது, நாய் வளர்க்க கூடாது..." "சார் வீட்டை பார்க்கலாமா..." "பால்கனியில் பூத்தொட்டி வைக்கக் கூடாது" "அப்புறம் கடைசியா...