Skip to main content

Posts

தினமும் கொஞ்சம் தேசிகன் - 13

தினமும் கொஞ்சம் தேசிகன் - 13  ’என்னங்கடா இப்படியெல்லாம் பீதியை கிளப்புறீங்க’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். பீதி என்றால் பயம், ’அ பீதி’ என்றால் பயம் அற்ற என்று பொருள்.  ஸ்வாமி தேசிகன் ’அ பீதி ஸ்தவம்’ என்று அருளியிருக்கிறார். எப்போது ஏன் எழுதினார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் இருந்தாலும் சில வரிகளில் அதைக் கூறிவிட்டு மேலும் தொடர்கிறேன்.  திருவரங்கத்தில் நம் தேசிகன் நெடுங்காலம் எழுந்தருளியிருந்த சமயத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்து கோயிலுக்கு நாசம் விளைவித்தார்கள். நம்பெருமாளைப் பிள்ளை லோகாச்சாரியார் காப்பாற்ற, ஸ்வாமி தேசிகன் பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, சுதர்சன பட்டர் இரண்டு புதல்வர்களையும்  ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் தேசிகன் காத்துக் கொடுத்தார்.  திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட ஸ்வாமி தேசிகன், திருநாராயணபுரத்தில் இருந்த போது அங்கே சத்யா காலத்தில் வாசம் செய்த போது, நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு அவர் அபீதிஸ்தவம் என்ற உயர்ந்த 29 ஸ்லோகங்களை அருளினார். திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்து நீங்கி, அச்சம் நீங...

12. இராமானுசன் அடிப் பூமன்னவே - விளைநிலம்

 12. இராமானுசன் அடிப்  பூமன்னவே -  விளைநிலம்  சென்ற அத்தியாயத்தில் நம்மாழ்வார் முன் நாதமுனிகள் ’பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’  என்ற வரிகளை அழுத்திப் பாடி, வருங்கால ஆசாரியனின் உருவத்தை  சர்வ அவய பூர்ணமாக அடியேனுக்குக் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு குருகூர் சடகோபன் சிந்தனையில் ஆழ்ந்தார்.  நம்மாழ்வார் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்,  நாதமுனிகளைப் பார்த்து “ உமக்கு இன்று இரவு சொப்பனத்தில் நாமே அதைப் பாவனையாக காட்டியருளுகிறேன்” என்றார்.  அன்று இரவு நாதமுனிகளின் கனவில் ஆழ்வாரே தோன்றி “நாதமுனிகளே!  நம் குலத்தில்(1) அவதரித்து,   இப்பூவுலகம் முழுக்க வாழ்ச்சி அடையப் போகும் அவதாரத்தைக் காணுங்கள்! நாமே வருங்கால அசாரியனை உமக்குக் காட்டியருளுகிறேன்!” என்று நம்மாழ்வாரே வருங்கால ஆசாரியனாக நாதமுனிகளுக்குக் காட்சியளித்தார்.  பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் மீது, பால சூரியனின் ஒளிபட்டவுடன் எப்படி பிரகாசிக்குமோ அது போல அந்த ஒப்பற்ற திருமே...

கல்கியில் கடைசிப் பக்கம்

வரும் வாரத்திலிருந்து கல்கியில் ‘கடைசிப் பக்கம்’ எழுதப் போகிறேன். இதற்கான அறிவிப்பு இந்த வாரக் கல்கியில் வந்திருக்கிறது. 

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல! மீண்டும் ராமாயண கதை. என்று அந்தச் சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள். ராமருக்கு முடிசூட்டு விழா, ஆனால் கைகேயி, கூனியின் சூழ்ச்சியால் ராமர் காட்டுக்குச் சென்றுவிட்டார். ராமர் சித்திரகூடத்திலிருந்தபோது, பரதன் ராமரைத் தேடிக்கொண்டு வந்து “ராமா !மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும்” என்று கேட்க, அதற்கு ராமர் தந்தை சொல்லைத் தட்ட மாட்டேன், பதினான்கு வருடம் காட்டிலிருந்துவிட்டுத் தான் வருவேன் என்றார். பரதன் எவ்வளவு சொல்லியும் ராமர் மறுத்துவிட, பரதன் உங்கள் பாதுகையாவது கொடுங்கள்.  உங்கள் சார்பாக அந்தப் பாதுகை நாட்டைக் காத்து ஆளட்டும் என்று தலைமேல் சுமந்து அயோத்திக்கு திரும்பினார். பரதன் சென்றபிறகு ராமருக்குப் பரதன் நினைவு அடிக்கடி வந்தது. வேறு இடத்துக்குச் செல்லலாம் என்று புறப்பட்டார். போகும் வழியில் ஒரு ஆசிரமம் இருந்தது. அது அத்திரி முனிவரும் அவருடைய மனைவி  அனசூயை வசித்த ஆசிரமம். ராமர், சீதையைப் பார்த்தவுடன் முனிவரும், அனசூயையும் மிகவும் மகிழ்ந்தார்கள். முனிவர் அனசூயையைச் சீதைக்கு அறிமுகம் செய்து வைத்து “அனசூயை தர்மத்தில் மிகச் சிறந்தவள். முன்பு ஒரு ம...

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல !

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல !  பெண் பிள்ளை கதை சொல்ல ஆரம்பித்தாள்.   கண்டாகர்ணன் ஒரு பிசாசு. அந்தப் பிசாசு பிணத்தைத் தான் சாப்பிடும்.  சிறந்த சிவபக்தியுடையது ஆனால் அதற்கு நாராயணனைப் பிடிக்காது. அதனால் போகும் இடம் எல்லாம் காதில் மணியைக் கட்டிக்கொண்டு போகும். ”மணிக்கும் நாராயணனுக்கு என்ன சம்பந்தம் குழந்தாய் ?” என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தச் சுட்டிப் பெண்  ”சொல்கிறேன் சாமி” என்று தொடர்ந்தாள். கண்டா என்றால் மணி என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். மணிகட்டிய காதை உடைய பிசாசு. அதனால் அதற்குப் பெயர் கண்டாகர்ணன். நடக்கும்போது காதில் தொங்கவிட்ட மணி ‘டங் டங்’ என்று சத்தம் போடும். அப்போது யாராவது நாராயணா என்று சொன்னால் அதன் காதில் அது விழாது அல்லவா ?. பல காலம் பிசாசாக இருந்து அதற்கு அலுத்துவிட்டது. ஒரு நாள் சிவபெருமானிடம் “ஐயனே எனக்கு இந்தப் பிசாசு வாழ்க்கை போதும், எனக்கு வைகுண்டம் போக வேண்டும்”  என்று கேட்டது. அதற்குச்  சிவன் “பிசாசே, உன்னை வைகுண்டம் அனுப்பும் சக்தி என்னிடம் இல்லை. நாராயணன் ஒருவனுக்குத் தான் அந்தச் சக்தி உண்டு, அவர...

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே! ”பிள்ளாய்!, இந்தக் கதையில் கண்ணனா ? ராமரா  ?” என்றார் ராமானுஜர்  “சாமி, இது தொண்டைமான் சக்கரவர்த்தியின் கதை”  ”அப்படி என்றால் அது திருமலை சம்பந்தப்பட்ட கதை!” என்று ராமானுஜர் சிஷ்யர்களைப் பார்த்தார். சிஷ்யர்கள் புன்னகையுடன் கதையைக் கேட்க ஆரம்பித்தார்கள்.  குட்டிப் பெண் கதையைத் தொடர்ந்தாள். தொண்டைமான் சக்கரவர்த்தி  திருமலை ஏழுமலையானின் தீவிர பக்தன். கோபுரம், மதில், மண்டபங்கள் எல்லாம் கட்டினான். அவற்றைத் தங்கமும், ரத்தினங்களும் கொண்டு அழகு படுத்தினான்.  பெருமாள் மீது மிகுந்த அன்பு கொண்ட தொண்டைமானுக்குப் பெருமாள் நண்பனாகிவிட்டார்.  தினமும் பெருமாள் அவருடன் நேரில் பேசுவார். அடிக்கடி பெருமாளைப் பார்ப்பதற்கு அரண்மனையிலிருந்து கோயிலுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்தான்.  அதன் வழியே தினமும் பெருமாளுடன்  பேசிவிட்டு வருவான். .அப்படிப் பேசும் போது பெருமாள் இவருக்குப் பல நல்ல உபதேசங்கள் செய்வார். ஒரு முறை இந்த தொண்டைமானின் ராஜ்யத்தின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்தான்.  அப்போது தொண்டைமானுக்கு என்ன செய்வது எ...

இராமானுசனுடையார் - ஸ்ரீ ஸ்ரீராமபாரதி ஸ்வாமிகள்

இன்று எதையோ தேடும்போது ஸ்ரீராமபாரதி ஸ்வாமி பற்றிய வீடியோ இரண்டு கிடைத்தது. ( அதை கடைசியில் கொடுத்திருக்கிறேன்).  அடியேன் அவரைப் பற்றி சில விஷயங்கள் முன்பு எழுதியிந்தேன் அதை தொகுத்து இந்த பதிவில் தந்திருக்கிறேன்.  ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது. பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய த...

பதம் பிரித்த பிரபந்த புத்தகம் !

 பதம் பிரித்த பிரபந்த புத்தகம் ! 2007ல் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதாவைச் சந்தித்தபோது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகம் இருப்பதைக் கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்தபோது  "நாலாயிர திவ்யப் பிரபந்தம்"  இந்தப் புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது என்றார். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் முன் வெளியிடப்பட்ட புத்தகத்தைத் திரும்பவும் வெளியிட்டுள்ளார்கள். ( உபயம்: கடுகு அல்லது அகஸ்தியன் என்ற பி.எஸ்.ரங்கநாதன்).  பிரபந்தம் மீது பிரேமை கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய பதிப்பு. சுஜாதாவிடம் இருந்த இந்தப் புத்தகத்தின் முகவரியைத் தெரிந்துகொண்டு திருவல்லிக்கேணியில் அலைந்து திரிந்து வாங்கினேன். எனக்கு அப்போது எழுத்தாளர் கடுகு பரிட்சியம் கிடையாது.   என் அப்பா நான் படிக்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு ஒரு முறை எவ்வளவு புத்தகம்  படித்தாலும், கடைசிக் காலத்தில் இந்த பிரபந்தம் புத்தகம் தான் நமக்குத் துணை என்று அவர் வைத்திருக்கும் பிரபந்த புத்தகத்தை என்னிடம் காண்பித்தார்.  ஒரு முறை சுஜாதாவிடம் இத...

11. இராமானுசன் அடிப் பூமன்னவே - பக்தாம்ருதம்

11. இராமானுசன் அடிப் பூமன்னவே - பக்தாம்ருதம் பசிக்கு உணவைத் தேடிக்கொண்டு அலைந்தவனுக்கு விருந்தே கிடைத்தாற் போல,  திருவாய்மொழியைத் தேடிக்கொண்டு அலைந்த நாதமுனிகளுக்குப் பொய்கை, பூதன், பேயார், பொன்மழிசைக் கோன் மாறன் செய்ய மதுரகவி,  சேரர்பிரான் - வையகமெண் பட்டர் பிரான், கோதை, தொண்டர் பாதப்பொடி பாணன், கட்டவிழ்தார் வாட்கலியன் காப்பு(1) என்று எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களும் பக்தாம்ருதமாக(2) கிடைத்து, இன்பத்தில் திளைத்துக் குருகூர் சடகோபனை மார்வெழுத்தாக்கி கொண்டார்(3).  சடகோபன் உகப்புடன் தன் திருவாக்கினால்  திருவாய்மொழியை நாதமுனிகளுக்கு உபதேசிக்க ஆயத்தமானார். கடும் தாகத்தில் சிறிது தண்ணீர் அருந்தியவன் தண்ணீரின் இனிமையை உணர்ந்து தாகம் அடங்காது, “தண்ணீர் தண்ணீர்’ என்று தவிப்பது போல நாதமுனிகள் தவிப்பு இருந்தது. நாதமுனிகள்போல,  நம்மாழ்வாரின் தேனினும் இனிய பாசுரங்களை மீண்டும் அருந்த எல்லாத் தேசத்து எம்பெருமான்களும் நாதமுனிகளின் நெஞ்சில் உவந்து குடிகொண்டிருந்தனர்.  நாதமுனிகள்  அரிய  அமிர்தம் கிடைக்கப் போகும் ஆசையில் அதை முழுவதையும் பருக வேண்டும் என்ற பேருவ...

காந்திஜிக்குப் பிடித்த பஜன் !

காந்திஜிக்குப் பிடித்த பஜன்  காந்திஜி நிலக்கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றை உண்டார் என்று விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கிறது ஆனால்  அவருக்குப் பிடித்த மீரா பஜன் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.   எம்.எஸ். எப்போதும் காந்திஜி அவர்களுக்குப் பிடித்த ‘வைஷ்ணவ ஜனதோ’ என்ற பாடலைக் கடைசியில் பாடுவது வழக்கம். ( அதைப் பற்றி நேற்று எழுதினேன்).   1947ல் காந்திஜி பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன் காந்திஜிக்குத் தெரிந்தவரிடமிருந்து எம்.எஸ், சதாசிவம் தம்பதியினருக்குத் தொலைப்பேசி அழைப்பு  “அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாள் இசை நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது எம்.எஸ் அவர்கள் கலந்துகொண்டு ‘ஹரி தும் ஹரோ’ என்ற காந்திஜிக்குப் பிடித்த மீரா பஜனை பாட வேண்டும்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.  “இந்தப் பாடல் தெரியாதே. அதோடு இல்லாமல் எங்களுக்கு அங்கே வர முடியாத குடும்ப சூழ்நிலை. அதனால் வேறு யாரையாவது பாடச் சொல்லுங்கள்” என்று அந்தக் கோரிக்கையைப் பணிவுடன் மறுத்தார்கள்.  காந்திஜியின் பிறந்த தினத்திற்கு இரண்டு நாட்கள் முன் மீண்டும் தொலைப்பேசி அழைப்பு  ”இன்னொர...

ஸ்ரீவைஷ்ணவர்கள் என்போர் யார் ?

ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்போர் யார் ?  ’நரசிம்ம மேத்தா’ என்றால் உடனே யார் என்று நமக்கு சொல்லத் தெரியாது.  ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும்  ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று நாம் கேட்கும் பாடலை இவர் தான் இயற்றினார்.  தமிழ் நாட்டு மக்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்குத் தெரிந்து ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் மட்டும் தான் இவரைப் பற்றி உபன்யாசம் செய்துள்ளார். அதை முழுவதும் கேட்டிருக்கிறேன். பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்.  ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்கு அடையாளங்கள் இருக்கிறது. திருமண், துளசி மாலை... இது எல்லாம் புறச் சின்னம்.  வேஷ பூஷணத்தால் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிவிட முடியாது. சில இலட்சணங்கள் இருக்கிறது. அதை நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டும்.   கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல வெயில், பசி. ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம் என்று தேடும்போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு இரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்பட , அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசா...

வைணவத்தில் டாக்டர் பட்டம் !

வைணவத்தில் டாக்டர் பட்டம் ! இன்று வைணவத்தை தனியாக படிக்கலாம். டாக்டர் பட்டம் வாங்கலாம். பேசலாம் எழுதலாம். சில நாள் முன் ஒருவர் என்னுடன் பேசும் போது சொன்ன வார்த்தை என்னை யோசிக்க வைத்தது.   ”பிராமணர்களை பார்த்தால் எனக்கு ஒரு விதமான பயம். ஜீயர் என் பக்கம் நடந்து சென்றால் எனக்கு உடல் நடுக்கமாக இருக்கிறது!” என்றார்.  இன்னொருவர் ‘நைச்சிய குணம்’  அதாவது நீச்சனாக இருக்கும் தன்மை வருவது தான் மிக கஷ்டம் என்றார். மாற்று கருத்து இல்லை. பணம், குலம், படிப்பு அதிகமாக இருந்தால் இந்த நீச்ச பாவம் வருவது மிக மிகக் கஷ்டம்.  பரமபத விளையாட்டில் பெரிய பாம்பி வாயில் அகப்பட்டு கீழே வருவது போல நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.   ஒரு பிச்சைக்காரன் வாச கதைவை தட்டுகிறான் “யாரு அது?” என்று உள்ளேயிருந்து குரல் கொடுக்கிறோம். வெளியே பிச்சைக்காரன்  ‘நான் தான்யா’ என்று பதில் கூறுகிறான். அந்த பிச்சைக்காரன் சொல்லும்’நான்’க்கும் நாம் சொல்லும் ’அடியேனுக்கும்’ வித்தியாசம் இருக்கிறது. நம்முடைய ’அடியேனில்’  ஒரு வித செயற்கை தனம் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது.  என்றாவது ஒரு நாள் நம் ...