Skip to main content

ஸ்ரீ உ.வே.அரங்கராஜன் அவர்கள் அணிந்துரை

ஸ்ரீ உ.வே.அரங்கராஜன் அவர்கள் அணிந்துரை




முதல் பதிப்பு பிரபந்தம் வந்த பிறகு ஒரு நாள் மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி என்னை தொலைப்பேசியில் அழைத்தார்.
“பிரபந்தம் பதிப்பாசிரியர் என்ற முறையில் நீங்கள் சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆழ்வார் பாசுரத்திலிருந்து சில வரிகளை மேற்கோள் காண்பித்து, அதற்கு விளக்கம் கொடுத்தார்.

87 வயதை தாண்டியவர் என்னை கூப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அளவு கடந்த பிரேமையும், ஆழ்வார்களின் மீதும், அவர்களின் ஈரத் தமிழின்பால் பிரேமையினால் மட்டுமே அது நடந்தது.


 

இன்றும் பிரபந்தத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே அவரை அழைத்துவிடுவேன். உடனே வகுப்பு ஆசிரியர் போல அழகாக சொல்லிக்கொடுப்பார்.


 
இரண்டாம் பதிப்பு பிரிண்டுக்கு போகும் சமயம் அவரிடம் தண்டம் சமர்ப்பித்து ”அடியேனுக்கு உங்கள் கையினால் ஓர் அணிந்துரை வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

“பார்க்கிறேன்” என்று கூறியவர் சில நாட்களில் என்னை அழைத்து அவர் எழுதிய அணிந்துரையை எனக்கு நிறுத்தி நிதானமாக படித்து காண்பித்து அனுப்பிவைத்தார்.

இந்த பெரும் பெறு எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியம்.

- சுஜாதா தேசிகன்
22.05.2022


Comments