Skip to main content

உடையவருக்குப் பிறந்த நாள் பரிசு !

 உடையவருக்குப் பிறந்த நாள் பரிசு ! 




போன வருடம் ஸ்ரீ உடையவர் திருநட்சத்திரம் அன்று ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் புத்தகம் வெளியிட்டு பலர் அதைப் பெற்றுக்கொண்டு ஒரே மாதத்தில் அது தீர்ந்தது.  

இந்த வருடமும் ஸ்ரீ உடையவர் திருநட்சத்திரமான இன்று இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆசியுடன், ஸ்ரீராமானுஜர் சந்நிதியில் இன்று காலை என் தம்பி உடையவர் சந்நிதியில் புத்தகத்தை சமர்பிக்க, அர்ச்சகர் ”இன்று முழுக்க இந்தப் புத்தகம் உடையவரிடமே இருக்கட்டும்” என்று தானுகந்த திருமேனி அருகில் உடையவர் உகந்த பிரபந்தத்தை எழுந்தருளச் செய்துவிட்டார்.

ஆயிரம் ஆண்டுகளில் உடையவருக்கு பிறந்த நாள் பரிசாக பிரபந்தப் புத்தகம் கிடைப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்! 

- சுஜாதா தேசிகன்

5.5.2022 

படம்1 : ஸ்ரீபெரும்புதூரில் எம்பெருமானார் உகந்து அளித்த துளசி பிரசாதத்துடன் புத்தகம்

படம்2: யதிராஜர் ஆசீர்வதிக்க எங்கள் அகத்தில் ஆழ்வார்கள் அருளிச் செயல்காளுடன்.  



பிகு:

நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது முதல் பலர் ஆர்வத்துடன் புத்தகத்துக்கு முன் பணம் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றி. பணம் அனுப்பியவர்களுக்குப் நாங்கள் இன்னும் பதில் அனுப்பவில்லை. சில நாள்களில் Tracking number உடன் பதில் அனுப்பத் திட்டம். 

புத்தகம் மே மாதக் கடைசியில் அனுப்பத் திட்டம்.




Comments