Skip to main content

Posts

ஒரு பெண்ணின் கதை

ஒரு பெண்ணின் கதை  அந்தப் பெண்ணின் பெயர் தேவை இல்லை. அவளுடைய தந்தை நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். பிள்ளையாண்டான் பெயர் விமல். அப்பாவின் கொள்ளுத்தாவுக்கு ஏதோ உறவு. இவன் தான் உனக்கு ஏற்றவன் என்றபோது,  அப்பாவின் பேச்சைத் தட்டவில்லை “சரிப்பா” என்று ஒற்றை வார்த்தையில் சம்மதித்தாள். பையன் பார்க்க லட்சணமாக ராஜா மாதிரி இருந்தான். வெளிநாட்டுப் பையன் செல்வத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.  திருமணத்துக்குப் பையன் இரண்டு வாரம் விடுப்பில் வந்திருந்தான்.  அவளுக்கு அருமையான நெக்லெஸ் & பெண்டண்ட் பரிசாகக் கொடுத்தான். இவனை மாதிரி மாப்பிள்ளை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.  வெளிநாட்டிலிருந்து வந்த பையனிடம் எந்த வெட்டிப் பந்தாவும் இல்லை, எல்லோரிடமும் சகஜமாகப் பேசி அவர்களுடன் மைசூர் பாக், லட்டு என்று சாப்பிடவிட்டு, கல்யாணம் செய்த கையோடு  ”இதோ வருகிறேன்” என்று வெளிநாட்டுக்குச் சென்றான்.  அதற்குப் பிறகு அவனிடமிருந்து மின்னஞ்சல், மொபைல்... எந்தத் தகவலும் இல்லை.  அவனுடைய நம்பரைத் தொடர்பு கொண்டால் “நீங்கள் தொட...

திருக்கோட்டியூர் செல்வ நம்பி

திருக்கோட்டியூர் செல்வ நம்பி ’திருக்கோட்டியூர்’ என்றால் உடனே ஸ்ரீராமானுஜர் பதினெட்டு முறை நடந்து சென்ற விஷயமும்,  திருக்கோட்டியூர் நம்பியும் நம் நினைவுக்கு வருவார்கள்.  திருக்கோட்டியூர் செல்வ நம்பி என்ற ஒருவர் நம் நினைவுக்கு வருவதில்லை. அவரைப் பற்றித் தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.  பெரியாழ்வாருக்கு கண்ணன் மீது அளவு கடந்த பிரியம். அது போல திருக்கோட்டியூர் மீதும்! பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிவிட்டு, பெரியாழ்வார் என்ற பட்டம் பெற்று, பெரியாழ்வார் திருமொழியை எப்படி ஆரம்பிக்கிறார் என்று பாருங்கள்.  வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன்முற்றம் கலந்து அளறு ஆயிற்றே கண்ணன் பிறந்த இடம் திருக்கோட்டியூர் என்று கொண்டாடுகிறார். ஏதோ விஷயம் இருக்க வேண்டும், சற்று ஆராயலாம்.  ஒருமுறை பெரியாழ்வார் திருக்கோட்டியூருக்கு அவருடைய தோழர் செல்வ நம்பியைப் பார்க்க வருகிறார். அங்கே சௌமிய நாராயணப் பெருமாளைச் சேவித்தபோது பெருமாள் கண்ணனாகக் காட்சி கொடுத்தார். அது மட்டுமல்லாமல், திருக்கோயில் நந்தகோபன் மாளிகையாகவும், அந்...

8. இராமானுசன் அடிப் பூமன்னவே - ஆறுகளும்,ஈராறு ஆழ்வார்களும்

 8. இராமானுசன் அடிப் பூமன்னவே - ஆறுகளும்,ஈராறு ஆழ்வார்களும் அதிகாலை திருக்குருகூர் அமைதியாக இருந்தது. அந்த அமைதி நாதமுனிகளைத் தழுவிக்கொண்டது. பல ஆண்டுகாலம் பிரிந்த தோழர்கள் சந்தித்தது போலப் பறவைகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. தாமிரபரணி மெதுவாக ஓடிக்கொண்டு இருந்தது. மெல்லிய அலைகள் அங்கே இருக்கும் பாறைகளில் பட்டு ‘ஏன் இவ்விதம் ஜடமாக இருக்கிறீர்கள் ?” என்று கேட்பது போல இருந்தது. பளிங்கு போன்ற ஆற்றின் நீரில் மீன்கள் கூட்டம் கூட்டமாக அவைகளுக்குள்ளே ஏதோ பேசிக்கொண்டன. நீருக்கு மேல் சில மீன்கள் நாதமுனிகளைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. அந்த மீன்களைப் போல நாதமுனிகளின் மனமும் எப்போது குருகூர் நம்பியைக் காணப் போகிறோம் என்று துள்ளி குதித்தவண்ணம் இருந்தது.  தாமிரபரணி படித்துறையை நோக்கி நடந்த போது,  மூங்கில்களும், காய்ந்த புல் முதலியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ள குடிசைகள் தெரிந்தன. ஒரு குடிசையின் மேல் சேவல் ஒன்று கூவியதைக் கேட்டு மெதுவாக உறக்கத்திலிருந்து எழுந்துகொண்டார்கள். ஆனால் சிலர் அந்தக் காலை வேளையிலும் சுறுசுறுப்பாகக் கோரைப் புற்களை அடுக்கி வைத்துப் பாய் முடைவதற்கு ஆ...

திருவுள்ளம் பற்றிய திருக்குருகைப்பிரான் பிள்ளான்

 திருவுள்ளம் பற்றிய திருக்குருகைப்பிரான் பிள்ளான் ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாம்.  ஒருமுறை கொங்கு நாட்டுக்குப் பிள்ளான் சென்றிருந்தார். அங்கே ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இல்லத்தில் தங்கினார். அங்கே தாமே தளிகை(சமையல்) செய்து உண்ண நினைத்தபோது அவருக்கு அங்கே ஓர் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெருமாள் திருநாமங்களை பாடிக்கொண்டு இருந்தார்கள். பிள்ளான் இவர்கள் இல்லத்தில் உணவு அருந்துவது தகாத விஷயம் என்று புறப்பட்டார்.  பிள்ளான் ஏன் இப்படிச் செய்தார் ? என்று நமக்குத் தோன்றும். காரணம் இருக்கிறது.  அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியர்களுடைய திருநாமங்களைச் சொல்லாமல் எம்பெருமான் திருநாமங்களை மட்டுமே கூறியதால்  ஆசாரிய அபிமானம் இல்லாதவர்கள் இல்லத்தில் அமுது செய்வது தகாது என்று அங்கிருந்து புறப்பட்டார்.  சிஷ்யனுக்கு ஆசாரியன் இடத்தில் அபிமானமும், அதே போல ஆசாரியனுக்குச் சிஷ்யனிடத்தில் அபிமானமும் சேர்ந்துகொண்டால் அவர்கள் பேசிக்கொள்ளாமலே பேசிக்கொள்வார்கள். அவர்கள் மனத்தால் பேசிக்கொள்வார்கள். இது ஸ்ரீவைஷ்ணவத்தில் தனித்துவமான ஒன்று.  இன்று  'ஒரே மாதி...

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை - சில குறிப்புகள்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை - சில குறிப்புகள் குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில்  தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள். இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும். பெரியவாச்சான் பிள்ளையின் இயர் பெயர் கிருஷ்ணன் (பெரியவாச்சான் பிள்ளை காலத்தில் வாழ்ந்த இன்னொரு மகான் பெயர் சிறியாத்தான்!) நம்பிள்ளையின் சிஷ்யரான பெரியவாச்சான் பிள்ளை ஆவணி ரோகிணியில் யாமுனாசார்யருக்கும் நாச்சியாரம்மனுக்கும் திருக்குமாராராய், சோழநாட்டில் (தஞ்சாவூர் பக்கம்) உள்ள திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்திற்கு அருகில் உள்ள சங்கநல்லூர் என்னும் ஊரில் கிபி 1167ல் அவதரித்தார். ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். அதனாலேயே, இவருக்கு கிருஷ்ணர் என்னும் திருநாமத்தைச் பெற்றார்.பெரிய பெருமாள், பெரியாழ்வார், பெரியவாச்சான் பிள்ளை, பெரியஜீயர் என்று அழைக்கப்பட்ட நால்வரும் அவரவர் ...

தினமும் கொஞ்சம் தேசிகன் - 11

தினமும் கொஞ்சம் தேசிகன் - 11 ஜெயந்தி என்ற சொல் பிறந்த நாளைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுகிறது. கண்ணன் பிறந்த நாளே ஜெயந்தி. ஸ்ரீஜெயந்தி. ஸ்ரீஜெயந்தி என்றால் என்ன பொருள் ?  அவன் பிறந்த தினத்தைக் கொண்டாடும் பக்தர்களுக்கு ஜெயத்தை உண்டாக்கும் அதனால் ஜெயந்தி.  எப்படி ஜெயந்தி என்றால் கண்ணனின் பிறந்த நாளைக் குறிக்குமோ அது போலத் தேசிகன் என்ற திருநாமம். அஹோபில 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ”அடை மொழியின்றி வழங்கப்படும் ’தேசிக’ என்ற சப்தம் நம் ஸ்ரீநிகமாந்த மஹா குருவையே குறிக்கும். இப்படி இந்த ’தேசிக’ சப்தம் ஈரரசு ( இரு பொருள்) படாதபடிச் செய்த பெருமை நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுக்கே உரியதாகும்” என்கிறார்.  தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள். அதுவே வேதாந்த தேசிகன் என்று இன்று நிலைத்துவிட்டது. உபய வேதாந்தத்துக்கும் அதாரிட்டியான ஆசாரியன் இவரே அதனால் அவரை வேந்தாந்தாசாரியர் என்றும் கூறுவர்.  வேதாந்தாசார்யர் என்ற பதம் எப்படி ஸ்வாமி தேசிகனைக் குறிக்கிறதோ அது போல கீதாசாரியன் என்ற பதம் கண்ணனைக் குறிக்கும். கண்ணனுக்கு யார் கீதாசாரியன் என்ற பட்டத்தைக் கொடுத்தது என்று தெரியாது ஆனால் வேதாந்தாசார்ய...

குரங்கு செடியும், ஸ்பைடர் மேனும்

குரங்கு செடியும், ஸ்பைடர் மேனும்  வீட்டு வாசலில் சிகப்பு நிற கிளோட்டன் செடி ஒன்றை வாங்கி அழகிற்கு வைத்தேன். சில வாரங்களில் நுனிக்குருத்தை குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது. முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளர வேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான். செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்றச் சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கணுக்களிலிருந்துதான...

7. இராமானுசன் அடிப் பூமன்னவே - சாவி

7. இராமானுசன் அடிப் பூமன்னவே - சாவி பராங்குச தாசர் கண்ணிநுண் சிறுத்தாம்புக்கு முன் மதுரகவிகள் பற்றி ஒரு சம்பவத்தைக் கூற ஆரம்பித்தார்.  மதுரகவிகள் திருக்குருகூர் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் பெருமாளைப் பார்க்காதவண்ணம் ஓரமாகச் சென்று சடகோபனைச் மட்டும் சேவிப்பார். ஒருமுறை மதுரகவிகளிடம் சடகோபன், ’எப்போதும் என்னையே வணங்கிக்கொண்டு இருக்கிறீர்களே, ஒருமுறை பொலிந்து நின்ற பிரானையும் சேவித்துவிட்டு வாரும்’ என்று கட்டளையிட்டார். மதுரகவிகளும் பொலிந்து நின்ற பிரானை சேவித்து ‘என் ஆசாரியனுடைய கட்டளை அதனால் இங்கே உம்மைச் சேவிக்க வந்தேன். என் விருப்பத்தினால் அல்ல!” என்று  கூறினார்.   நாதமுனிகள் உள்ளம் உருகி ‘எப்பேர்பட்ட ஆசாரிய பக்தி!’  என்றார்.  இராமாயணத்திலிருந்து மேலும் சில விஷயங்களைக் கூறினார் பராங்குச தாசர். இராமனின் அழகைப் பார்த்தால் எல்லோரும் மயங்கிவிடுவார்கள். சூர்ப்பனகை மூக்கு அறுபட்டு ரத்தம் சொட்ட இராவணனிடம் சென்று இராமனின் அழகைப் பலவாறு புகழ்ந்துவிட்டு கடைசியில் மூக்கு அறுபட்ட விஷயத்தைக் கூறினாள். இராமனின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை.  ஆனால் சத்ருக்ன...

தினமும் கொஞ்சம் தேசிகன் - 10

தினமும் கொஞ்சம் தேசிகன் - 10 தினமும் கொஞ்சம் தேசிகன் பத்தாவது பகுதி. அதனால் பெரியாழ்வார் கூறும் பத்து மலர்களைப் பார்க்கலாம் அவை - செண்பகம், மல்லிகை, தமநகம், பாதிரி, மரு, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை பெரியாழ்வார் யசோதையாகக் கண்ணனுக்குப் பல மலர்களைச் சூட்டிக்கொள்ள வாராய் வாராய் என்று கூப்பிடுகிறார்.  சில ’வாராய்’ வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.  தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய் குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய் தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் இந்த மலர்கள் எப்படி இருக்கும் என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.  இந்த மலர்களை எல்லாம் லாக்டவுன் முடிந்த பிறகுக் கிராமங்களில் சென்று தேடலாம். மேல்கோட்டை சமஸ்கிருத ஆராய்ச்சி நிலையம் சுற்றி ஆழ்வார் பாசுரங்களில் வரும் மலர்களின் செடிகளை வளர்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஒ...

உத்தமன்

உத்தமன் ஓணம் பண்டிகை. கேரளாவில் கோலாகலமாகவும், தமிழர்கள் வாட்ஸ்-ஆப்பில் நுனி இலை சாப்பாட்டு படங்கள் பகிர்ந்து  கொண்டாடுகிறார்கள்.   பலர் ஆண்டாளின் வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து “ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று இன்று பல்லாண்டு பாடினார்கள்.  ‘அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்’  என்றும் ஆண்டாள் போற்றியிருக்கும் அந்த மூன்றாவது அடியைப் பெருமாள் மாதிரி என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்கள்.  தமிழ்நாட்டில் பொங்கல் போல, கேரளாவில் ஓணம்  உழவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.  பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம்.  மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ பெரியாழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழ் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும் தமிழில் எழுதியிருக்கிறார். ஆழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம். பெரும் புகழ் படைத்த மாவலி வேள்வியில் நீ யாசித்தபோது சுக்கிராச்சாரியார் இவனுக்கு...

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை

ஓட்டையின் உள் ஓர் ஓட்டை சமீபத்தில் ’சகுந்தலா தேவி’ என்கிற  திரைப்படத்தைப் பார்த்தபோது அதில் ஒரு காட்சியில் சகுந்தலா தேவி, 689 என்ற எண்ணைத் தலைகீழாகத் திருப்பினாலும் அதே எண்தான் வரும் என்பார். இதில் பெரிய அதிசயம் எதுவும் இல்லை. ஆனால் அவருடைய இரட்டை ஜடைப் பின்னலில் சின்ன ரிப்பன் கட்டியிருப்பார்.அந்த ரிப்பன் ஒரு சுவாரசியமான பொருள்.  ரிப்பனில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று நினைக்கலாம்.  ஒரு நீண்ட ரிப்பனை ஒரு திருகு திருகி அதன் முனையோடு இணைத்தால் அல்லது ஒட்ட வைத்தால் கணித இயலில் மிகச் சிக்கலான பொருளாகிறது.   இந்தக் கட்டுரையை மேற்கொண்டு படிப்பதற்குமுன் இந்தச்  சோதனையை நீங்கள் செய்துபார்க்கச் சிபாரிசு செய்கிறேன். கட்டுரை படித்துப் புரிந்துகொள்ள உதவும். இதற்குத் தேவையான பொருட்கள் – ரிப்பன் போன்ற ஒரு துண்டுக் காகிதம். செலோ டேப்,  ஒரு கத்தரிக்கோல். பேப்பர் துண்டை ஒரு திருகு திருகி ஒட்டவைத்து, அதன் முதுகுப் பகுதியின் குறுக்கே வெட்டிக்கொண்டே போனால் ? இரண்டு வளையம் கிடக்கும் என்று நீங்கள் நினைக்கும்போது, சட்டென்று ஒரு முழு வளையமாகிவிடும்.   இதற்கு Mö...