Skip to main content

ஸ்ரீ திருமங்கை மன்னன் ஆசீர்வாதம் !



ஸ்ரீ திருமங்கை மன்னன் ஆசீர்வாதம் !

அடியேனுக்கு திருவாலி திருநகரியில் கலியனை மனம் குளிர சேவிக்க வைத்து இந்த வயதிலும் ( 80+ ) நித்திய கைங்கரியம் செய்யும் ஸ்ரீ உ.வே எம்பார் ராமானுஜன் ஸ்வாமிகள் இன்று காலை 'கடைக்குட்டி' ஆழ்வார் என்று போற்றப்படும் நம் கலியனிடம் புத்தகத்தை ஆசீர்வாதம் பெற்றி தந்தார். அவர்களுக்கு என் நன்றிகள் பல பல 

அவர் விவரித்தது இது அதை இங்கே கொடுத்திருக்கிறேன்: 

முதலில் தாயார் திருவடிக்கு சென்ற புத்தகத்துக்கு தாயார் பிரசாதமாக தன்னிடம் இருந்த மஞ்சள்காப்பு,  திருமுடியிலிருந்து புஷ்பம் பிரசாதிக்க,  அங்கிருந்து ஸ்ரீந்ருஸிம்ம சன்னதிக்கு சென்று பிறகு சிந்தனைக்கு இனியான் திருவடிக்கு சென்று, ஆழ்வார் திருவடி அதற்கு கீழே வீற்றிருக்கும் ஸ்ரீ உடையவர் திருவடிக்கு சென்றது. அப்போது  திருமங்கை மன்னன் பிரசாதமாக புஷ்பங்களை அருளினார். 

படங்கள் : 

1.ஶ்ரீந்ருஸிம்ஹப் பெருமாள் ஸன்னதியில் 2.ஶ்ரீதிருமங்கைமன்னன் ஸன்னதி வாசலில்  

3.ஸன்னதி அர்ச்சகர் மற்றும் ஸன்னதி ஸ்தலத்தார் திருக்கரங்களில் புத்தகம். 

- சுஜாதா தேசிகன்

23-04-2021







Comments

Post a Comment