தமிழன் என்று சொல்லடா ’Her Mother's Killer’ என்ற ஸ்பானிஷ் தொடர் ஒன்றை முன்பு பார்த்திருக்கிறேன். அதில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கேவலமான விஷயங்களைச் செய்வார்கள் என்று காட்டியிருப்பார்கள். அதனால் இன்று தமிழக அரசியலில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. திராவிடக் கட்சிகள் சினிமாவைத் தங்கள் பிரச்சாரக் கருவியாகச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்தது. ‘முன்னேற்றக் கழகம்’ என்ற வார்த்தை கட்சிகளை மட்டும் முன்னேற்றப் பயன்பட்டது. மக்கள் முன்னேறினார்களா ? சமீபத்திய உதாரணம் – அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள் என்று விழா எடுத்தார்கள். அதை வியப்புடன் சினிமாப் பிரபலங்கள் பார்த்துக் கைதட்டினார்கள். வெளிநாடுகளில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது என்பது கனவு. இங்கே அப்படி இல்லை. இன்றும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலையை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அங்கே வாக்களிக்கும் போது பார்க்கலாம். வாக்களிக்கும் ஒவ்வொருவரும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலை...