Skip to main content

கலந்துரையாடல் பற்றி சுஜாதா..

இந்த வார கற்றதும் பெற்றதும்'ல் கலந்துரையாடல் பற்றி சுஜாதா...


நான் எழுதியது அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து என்னைவிடக் கூர்மையாக ஞாபகம் வைத்திருக்கும் வலுவான வாசகர்கள் ஒன்பது பேரைச் சந்திக்கும் வாய்ப்பை நண்பர் தேசிகன் ஏற்படுத்தியிருந்தார். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் டம்ளர்கள் இரைச்சலினூடே சந்தித்தோம். எனக்கே ஞாபகமில்லாத பல கதைகளை இகாரஸ் பிரகாஷ் போன்றவர்கள் நினைவு வைத்துக்கொண்டு அதன் உள்ளர்த்தங்களை அலசும்போது லக்கலக்கலக்கலாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இவ்வளவு அருகில் ஒரு எழுத்தாளன் இவ்வளவு விவரமான வாசக/வாசகியரைச் சந்திப்பது மற்ற பேருக்கு பன்னீராக இருக்கலாம். எனக்குக் கொஞ்சம் வெந்நீர்தான்!


கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து பிரசுரமான மறுகணம் எழுதியவனைவிட்டு பரதேசம் போய்விடுகிறது. அது ஊர் ஊராக அலைந்து கடைசியில் எழுதினவனிடம் திரும்பும்போது அடையாளம் மாறி சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் வந்து சேருகிறது. நான் எழுபது, எண்பதுகளில் எழுதிய கதைகளான 'குருபிரசாத்தின் கடைசி தினம்' 'நகரம்', 'வீடு', 'முரண்' போன்ற கதைகள் என்னை விவாகரத்து செய்துவிட்டன. அவற்றைப் பிறர் அலசும்போது எப்போதோ பார்த்த ஒரு கார்ட்டூன்தான் ஞாபகம் வருகிறது.


ஒரு ஆபரேஷன் டேபிள், டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு ஒருங்கிணைந்து தீவிரமாக ஆபரேஷன் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஓரத்தில் பேஷன்ட்டும் ஒரு கவுன் குல்லாயுடன் நின்று பின்னால் கை கட்டியபடி உன்னிப்பாக அந்த ஆபரேஷனைக் கவனித்துக்கொண்டு இருப்பார். அந்த நிலைதான் அன்று எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம்.



நன்றி: ஆனந்த விகடன்

 



Old Comments from my previous Blog


தேசிகன்,


குறைந்த பட்ச தூரம் என எதைக் குறிப்புடிகிறார் என்பது புரியவில்லை.


இவருக்கு நம் மேல் கோபமா? இல்லை சந்தோசமா? எனத் தெரியாமல் நாயகன் குழந்தை போல குழம்பிக் கொண்டிருக்கிறேன்


அன்புடன்


ராஜ்குமார்


By rajkumar, at Fri Jun 10, 11:53:08 AM IST  


Yes Desikan,


I second rajkumar.


- Suresh Kannan


By சுரேஷ் கண்ணன், at Fri Jun 10, 11:57:23 AM IST  


Rajkumar,


I don't think so. He has written in the sense that he didn't expect that he would meet readers who have a complete idea about his ventures.


It's fact that if the readers are so interested, definitely the author would be tensed up to face them. That's why he mentioned "vennirai kaalil ootrikonda mathiri"


By Ramki, at Fri Jun 10, 12:09:14 PM IST  


Rajkumar, Suresh Kannan,
//ஒரு ஆபரேஷன் டேபிள், டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு ஒருங்கிணைந்து தீவிரமாக ஆபரேஷன் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஓரத்தில் பேஷன்ட்டும் ஒரு கவுன் குல்லாயுடன் நின்று பின்னால் கை கட்டியபடி உன்னிப்பாக அந்த ஆபரேஷனைக் கவனித்துக்கொண்டு இருப்பார். அந்த நிலைதான் அன்று எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம்.
//
I assume the OPERATION on that day was successful (considering Sujatha appreciated Prakash!) and hence take this as a COMPLIMENT on the bloggers who met Sujatha the other day :-)


But, you MUST understand operation (not postmortem!) is generally a painful experience ;-) and hence the "குறைந்தபட்ச தூரமாவது தேவை", I guess !!!!


//இவ்வளவு அருகில் ஒரு எழுத்தாளன் இவ்வளவு விவரமான வாசக/வாசகியரைச் சந்திப்பது மற்ற பேருக்கு பன்னீராக இருக்கலாம். எனக்குக் கொஞ்சம் வெந்நீர்தான்!
//
This is definitely a compliment on you and "வெந்நீர்" is just an expression of the master's personal feeling of going thru' that exercise !!!!


Don't take it to heart :)))


By enRenRum-anbudan.BALA, at Fri Jun 10, 12:30:21 PM IST  


Hhmmm... :-) (sujatha sonnathu maathiri, naan enna ninaikkirEnnum yaarukkum puriyak kudaathu! athaan intha comment!)


anpudan,
Prasanna


By Haranprasanna, at Fri Jun 10, 05:22:59 PM IST  


பாராட்டுகளைக்கூட கொஞ்சம் திருகி சினிகலாத்தான் சொல்லணுமா வாத்யாரே ..??


:-)


By Mookku Sundar, at Fri Jun 10, 06:53:33 PM IST  


அவர் வேர என்ன சொல்லணும்னு நெனைக்கிறீங்க? எனக்குப் புரியலை. தெளிவா எது புடிச்சுது எது புடிக்கலைன்னு தானே சொல்லி இருக்காரு. இதையும் post mortem தான் பண்ணணுமா?
he said what he felt about the meeting. the scene was anyway like 10-15 people pouncing hard on him.
ப்ளாக்-ல உப்பு பெறாத விஷயத்தை ஊதிப் பெருசாக்கற கொள்கை கனஜோரா பல்கிப் பரவுதுன்னு நெனைக்கறேன்.


By சுவடு ஷங்கர், at Fri Jun 10, 08:25:01 PM IST  


//அவர் வேர என்ன சொல்லணும்னு நெனைக்கிறீங்க? எனக்குப் புரியலை. தெளிவா எது புடிச்சுது எது புடிக்கலைன்னு தானே சொல்லி இருக்காரு.//


ஷங்கர், அதே தான் நான் சொல்றதும். அவர் சொன்னதுல் எது புடிக்கலையோ அதை தான் நானும் சொல்றேன். "எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம்" அப்படின்னு அவர் சொல்றது அவரை கடவுள் மாதிரி நினைச்சு ( அட்லீஸ்ட அந்த மனநிலையில் இருந்த) பார்க்கப்போன என் நண்பர்களை புண்படுத்தி இருக்குமோ என்ற எண்ணம். எனக்குப் பிடிச்ச எழுத்தாளர்ங்கிறதுக்காக, அவர் என்ன சொன்னாலும் மண்டையாட்ட முடியாது. ஊதிப் பெருசாக்கறதுக்க்கு எதுல ஒண்ணுமே இல்லை. ஆனா கண்டிப்பா என் வருத்தத்தை தெரிவிக்கணும்ணு சொல்றேன். அவ்ளதான். புரியுமென்று நம்புகிறேன்.


By Mookku Sundar, at Sat Jun 11, 04:30:36 AM IST  


ஆனந்த விகடனில் படித்தேன்.சுஜாதா சொன்னதில் தவறு இருப்பதாய் எனக்கு படவில்லை.அவர் நிறைய எழுதிவிட்டார் திடீரென ஒருகதை ஒருகட்டுரை பற்றிக் கேட்டால் நாமா எழுதினோம் என சந்தேகம் வரும்தான் அக்கணம் நல்ல நியாபகம் வைத்திருக்கும் ஆட்களிடம் மாட்டினால்?கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைப்பார்கள்...என்னபதில் சொல்ல முடியும்.அதே நேரம் படைப்பாளியின் மனநிலை வேறு படிப்பவின் மனநிலை வேறு கொஞ்சம் கஷ்டம் தான் ஒத்துப் போவது...


By ப்ரியன், at Sat Jun 11, 12:18:16 PM IST  


அன்புள்ள தேசிகன்
நலமே, உண்மை தேசி, ஒரு எழுத்தாளன் என்பவன் படிக்க சுவாரசியமாய் இருக்கலாம், ஆனால் நேரில் பார்க்கையில் பொசுக்கென்று போய் விடலாம் என்று என் குரு பாலகுமாரன் சொன்னது நினைவு வருகிறது....


By srishiv, at Sun Jun 12, 12:18:29 AM IST  


I do not think you all should take it offensively. He has got all rights to say that some distance should be maintained. When he came to mayiladuthurai one time (around 15 years back) Everybody went to talk to him (including me...!!) and he said big NO... (I was studying in +1 and it was big disappointment for me ...) Later We also understood how difficult it would be for him to manage ... So we cannot take it offensively at all....


Thaks


By Anonymous, at Tue Jun 14, 09:33:28 AM IST  


 

Comments