Skip to main content

Posts

Showing posts from 2007

இங்க் பேனா

[%image(20071114-fountain_pen.jpg|91|81|null)%] தீபாவளிக்கு சென்னைக்குச் சென்ற போது பட்டாசுச் சத்தத்தின் மத்தியில் விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!. நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன். "இங்க் பென் இருக்கா?" ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார். "சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க" "இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்" வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன. இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? *)

சீனி கம்

'சக்கரை இனிக்கிற சக்கரை' என்ற  பதிவை எழுதி சரியாக ஒரு வருடம் ஆகிறது. டயாபடீஸ் வந்த ஒரு வருடத்தில் நல்லது என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், நான் நடந்திருக்கிறேன், தினமும் காலையில் 45 நிமிஷம். நான் போகும் வழியில் ஒரே செடியில் ஊதா, மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும். இது என்ன வகைச் செடி, யாருக்காவது தெரியுமா ? செண்பகப்பூ மரங்கள் நிறைய இருக்கின்றன. எந்தப் பூவையும் இது வரை பறித்ததில்லை (கைக்கு எட்டுவதில்லை ). மற்றபடி, டயாபடீஸ் என்றால் என்ன என்று நிறைய தெரிந்துகொண்டேன். கொஞ்சம் சுயபுராணம் - டயாபடீஸ் வந்த மூன்று மாதத்திற்கு நல்ல கண்ட்ரோலில் இருந்தது. பிறகு 2007 ஆரம்பத்தில் ரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு கூடியிருந்தது. டாக்டர் ஒரு கடுகு சைஸ் மாத்திரையை ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார். அதன் விளைவு எனக்கு ஒரு நாள் கார் ஓட்டும் போது தெரிந்தது. அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது, கை கால் எல்லாம் வெடவெடத்தது, வியர்த்தது. டயாபடீஸ் பற்றி படித்திருந்ததால் இது கம்மியான சர்க்கரை அளவு (Hypoglycemia) என்று பட்சி சொன்னது. காரை ஓரமாக நிறு

PAN

நிரந்தர கணக்கு எண்/அட்டை, சிம்பிளாக PAN CARD, பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வாரங்களுக்கு முன் 45 நாள் ஆன குழந்தைக்கு இந்த நிரந்தர கணக்கு அட்டை கிடைத்தது என்று செய்தி படித்தேன். [%image(20070815-pancard_s.jpg|216|144|PAN CARD)%] நான் 1999 ஆம் வருடம் இதற்கு விண்ணப்பித்தேன். பிறகு சோம்பல் காரணமாக ( பிஸி என்றும் தமிழில் சொல்வார்கள் ) கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆண்டுக்கு ஒரு முறை தனி நபர் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான படிவத்தில் PAN NO: _____________ என்று பார்த்தவுடன் தான் 'அட, நாம விண்ணப்பித்து ஒரு வருடம் ஆச்சே!' என்று நினைவுக்கு வந்தது. சரி, நாமே வருமானவரி அலுவலகத்துக்குச் சென்று பார்க்கலாம் என்று போனேன். வரவேற்பாளர், காப்பி குடித்து முடிக்கும் வரை காத்திருந்துவிட்டு, "ஒரு வருஷம் ஆச்சு சார், இன்னும் எனக்கு பான் கார்ட் வரவில்லை... யாரை பார்ப்பது?" என்றேன். "உங்க அப்ளிகேஷன் கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்றார். காண்பித்தேன். பார்த்துவிட்டு, "அடுத்த கட்டிடத்தில் இருக்கும் ஏழாம் எண் ரூம் போங்க" என்றார். சென்றேன். ஆனால் யாரும் இல்லை. ஃ

சென்னை விசிட்

இந்த வாரம் மருத்துவ பரிசோதனைக்கு, சென்னை செல்ல வேண்டியிருந்தது. அப்படியே வலைப்பதிவு பட்டறைக்கும் சென்றேன். 1993-1994ம் வருடம் கணினியில் தமிழில் தெரிந்தாலே புல்லரிக்கும். ஸ்ரீநிவாசன் 'ஆதாவின்' என்ற மென்பொருளின் தயவால்,  டாஸ் கணினியில் பாரதியார் கவிதைகள், திருக்குறள் எல்லாம் பெரிது பெரிதாகத் தெரியும்.  பிறகு விண்டோஸ் வந்த சமயம் தமிழ் நெட்டில் தங்கலீஷ் மறைந்து, முரசு அஞ்சல் வந்தது. அந்தச் சமயத்தில் தான் தமிழ் நெட்(99 என்று நினைக்கிறேன்) கருத்தரங்குக்குச் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. வேடிக்கை பார்க்கத்தான். பெரிய ஆட்கள் எல்லாம் என்கோடிங், கீபோர்ட் லேயவுட் என்று கார சாரமாக விவாதிப்பார்கள்.  வயது வந்த பிறகு தான் அந்த அரசியல் புரிய ஆரம்பித்தது.  TAM, TAB, TSCII எல்லாம் இன்றும் இருப்பதற்கு காரணம் இதுவே. அந்தச் சமயத்தில் நானும் ஒரு ஃபாண்ட் (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் என்கோடிங்) உருவாக்கியிருந்தால் இன்று 114 என்கோடிங்குடன் என்னுடைய என்கோடிங்கும் சேர்ந்து 115 வந்திருக்கும் என்று பட்டறையில் காசியிடம் நகைச்சுவையாகச் சொன்னேன். இன்று யூனிகோட் வந்த பிறகு  மற்றவர்கள் எல்லோரும் அமைதியாக கூ

ரவுண்ட் டிரிப் வித் சுஜாதா

[%image(20070621-Sujatha_Desikan.jpg|200|150|Me and Sujatha)%] ஏப்ரல் மாதம் சுஜாதாவை சந்தித்த போது "தேசிகன் ஒரு முறை ஸ்ரீரங்கம் போகணும்? என்னை அழைத்துக்கொண்டு போக முடியுமா ?" என்றார்.  இரண்டு வாரம் முன் இந்த பயணம் நிறைவேறியது. அதை பற்றி சுஜாதா ஆனந்த விகடன் கற்றதும் பெற்றதுமில் எழுதியிருக்கிறார். ( அதை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் ராஜேஷுக்கு நன்றி ) பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன். லல்லு வந்ததில், ரயில் நிலை-யச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன். பாயும் நீர் அரங்கத்தின் இரு நதிகளிலும் ஒரு சொட்டுத் தண்ணீர்-கூட இல்லை. வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். பூச்சாற்றி உற்சவம் முடிந்துபோன ஒரு சாதாரண வெள்ளிக்கிழமையிலேயே இத்தனை கூட்டத்தைப் பார்த்தபோது, என் இளமைக் கால ஸ்ரீ

பார்பர் ஷாப்பில் வேதாளம்

மொட்டை தலையுடன் வேதாளம் வந்தது. "என்ன திருப்பதியா ?" என்றான் விக்கிரமாத்தித்தன். "அதை ஏன் கேட்கற, நேத்திக்கு 'ஹெட் போனில் கேட்கவும்' னு ஒரு ஈ-மெயில் வந்தது.  சரி என்ன பெரிசா இருக்க போகிறது என்று...கேட்டேன்,  இப்படி ஆயிடுத்து" "என்ன!?" என்றான் விக்கிராமாதித்தன். வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு ஹெட் போனை மாட்டிவிட்டு, கண்ணை மூடிக்கோ" என்றது. விக்கிரமாதித்தன் கேட்க ஆரம்பித்தான் புன்னைகையுடன்.. . நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு ஹெட் போனில் கேட்டு பாருங்கள். மேலே உள்ள சுட்டி வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியில் கேட்கவும். இங்கே முயன்று பாருங்கள் இந்த மாதிரி ஒலிப்பதிவுக்கு  Binaural Recording  என்று பெயர். டம்மி தலையை வைத்துக்கொண்டு ஒலிப்பதிவை செய்கிறார்கள். மேல் விவரங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கிறது. முதல் முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும்.

சீட்டு மாளிகை – நைலான் கயிறு

சுஜாதாவின் முதல் தொடர்கதை நைலான் கயிறு. குமுதம் 1968, ஆகஸ்ட் மாதம் 141ம் பக்கத்தில் வெளிவந்தது. இதற்கு சுஜாதா வைத்த பெயர் - சீட்டு மாளிகை. ரா.கி.ரங்கராஜன் அதில் முதல் அத்தியாயத்திலிருந்து 'நைலான் கயிறு' என்பதைத் தேர்ந்தெடுத்தார். ( நைலான் கயிறு தொடர்கதையின் கடைசி அத்தியாயம் - சீட்டு மாளிகை). 14 வாரம் தொடர்கதையாக வந்தது. Uவாய் வளைந்து, **** என்று பூப்போட்ட சட்டை, ________ இந்த கோட்டின் அகலத்துக்கு மீசை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுநந்தாவின் டைரி என்று பல புதுமைகள் முதல் அத்தியாயத்திலேயே அடங்கும். "யாருப்பா இது?" என்று தமிழ் வாசகர்களை சட்டென்று நிமிர்த்திப் பேசவைத்தது. இரண்டு தலைமுறையினரைப் பாதித்து, இன்றும் நைலான் கயிறு பற்றி அவரைப் பார்ப்பவர்கள் கேட்பதற்கு இது தான் காரணம்.   தமிழ் நடையில் ஒரு புது முயற்சி இந்தத் தொடர்கதையில் துவங்கியது என்று சொல்லாலாம். ( இந்த தொடர்கதை கன்னடத்திலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது, ஒரு படக்கதையாக கூட மாற்றப்பட்டது, திரைப்படமாக்கப்படுவதிலிருந்து தப்பித்தது.) இந்தக் கதையை சுஜாதா அவர்கள் எழுதும் போது நான் பிறக்கவில்லை. நான் காலேஜ் ப

ராமானுஜலு

ஸ்ரீஉடையவர் சன்னதி - ஓவியம் தேசிகன் சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துவிட்டு திரும்பியதும், சித்திரை மாதம், ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருந்தேன். ராஜகோபுரத்தைச் சுற்றியுள்ள கடைகள், மாடுகள், நெட்டிலிங்க இலைமேல் வைத்துக் கொய்யா பழம் விற்கும் கிழவி, மத்தியான வேகாத வெயிலில் சமயபுரம் பஸ்ஸிலிருந்து இறங்கும் சந்தனம் தடவிய மொட்டைத் தலை 'கோவிந்தா'க் கூட்டம் என்று எதுவுமே மாறவில்லை. 'மைசூர் போண்டா ரெடி!'யைக் கடந்து சென்றால், 'ரங்கா ரங்கா' கோபுரத்திற்கு முன் 'ரின் சோப் உபயோகியுங்கள்!' பனியன் போட்டுக் கொண்டு ஒருவர் பரோட்டா மாவுடன் மல்யுத்தம் செய்து கொண்டுடிருந்தார். அவரிடம் அடிவாங்காமல் கடந்தால், ரெங்கவாசல் கடைகள் ஜொலிப்பில் நூறு வாட் என்றது. ரங்க வாசல் கடையில் தொங்கிய குஞ்சலத்தை பார்த்த ஒரு வெள்ளைக்காரர்.. "வாட்டிஸ் திஸ்?" "குஞ்சலம் சார், ஹெட் டெக்கரேஷன்" "ஹொவ் மச்" "ஃபிப்டீன் ரூப்பீஸ் சார்" பணம் கொடுத்து, குஞ்சலத்தை வாங்கித் தலையில் வைத்துப் பார்த்துக் கொள்பவரைக் கடந்து வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. எதிர

வினோத அனுபவங்கள்

'வியர்டு' என்ற சொல்லுக்கு தமிழில் 'வினோதமான' என்ற வார்த்தை, கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. உங்களிடம் உள்ள வினோத குணம் பற்றி எழுதுங்கள் என்றார்கள். என்னுடைய கிறுக்குத் தனங்களைப் பற்றி என்னை விட என் மனைவிக்குத் தான் அதிகம் தெரியும். கோடை விடுமுறைக்குச் சென்றிருப்பதால் வந்தவுடன் எழுதச் சொல்லுகிறேன். இந்தப் பதிவில், எனக்கு நடந்த சில வினோத அனுபவங்களைச் சொல்லலாம் என்று இருக்கிறேன். அரை டஜன் முதல் தவணையாக. இன்றைய பயணம் நேற்றைய டிக்கெட் பெங்களூர் வந்த பிறகு வாரா வாரம் சென்னை செல்வது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு வாரம் போகவில்லை என்றால் கூட ரயில்வேயிலிருந்து "ஏன் சார் இந்த வாரம் உடம்பு கிடம்பு சரியில்லையா?" என்று கேட்பார்கள். சுமார் 8 மாதம் முன் நடந்த இந்த அனுபவத்திற்கு என் மாமனாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். பெங்களூர் வந்திருந்த மாமனார் 'மாப்பிளைக்கு எதாவது உபகாரம் செய்யலாம் என்று சென்னை செல்ல மைசூர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்துகொடுத்தார். மைசூர் எக்ஸ்பிரஸ் பற்றி சில குறிப்புகள் -  'பெங்களூர் சிட்டி' ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ( மெஜஸ்டிக்

குட்டீஸ் புதிர்

வேதாளம் அவசரமாக வந்து ஒரு படத்தை விக்கிரமாதித்தனுக்கு தந்தது. "இது என்ன படம் ?" "இதுவா ? இது ஒரு விதமான புதிர்" "குழந்தைத்தனமா இருக்கு?" "ஆமாம். இது குழந்தைகளுக்கான புதிர் தான். இதில் நிறைய மிருகங்கள் பெயர் இருக்கிறது. அதை கண்டுபிடி பார்க்கலாம்" "விக்கிரமாதித்தன் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தான்" "இரு, செஸ் போர்டில் ராஜா எப்படி நகரும்?" "ஒவ்வொரு கட்டமாக" "அதே போல நகர்ந்து பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 75, 65, 56 கட்டங்களை கடந்தால் வரும் மிருகத்தின் பெயர் - 'DOG'. அதேபோல்  33, 43, 35, 45, 54, 63, 62, 70 & 71 கடந்தால் 'PORCUIPINE' வரும். சரி மத்த மிருகங்களின் பெயர்களை கண்டுபிடி" என்று வேதாளம் அவசரமாக எங்கோ போனது. [%popup(20070316-animalpuzzle.jpg|446|289|குட்டீஸ் புதிர்)%] விக்கிரமாதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். நீங்களும் விக்கிரமாதித்தனுக்கு உதவலாம்...   

Old is Gold

'Old is Gold' என்பார்கள், மத்த விஷயங்களில் எப்படியோ ஆனால் புத்தக விஷயத்தில் அது நிஜம். திரு. ராகவன் ( சென்னை ) அவர்கள், என் பதிவுகளை விரும்பி படிப்பவர். இன்று வரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. "சார், உங்களுக்கு ஒரு பழைய புத்தகம் ஒன்று அன்பளிப்பாக அனுப்பப்போகிறேன், அனுப்பவா ? " என்றார். "தாராளமாக" போன மாதம் ஒரு நாள் அவர் மனைவி புஷ்பா ராகவன் ( பொடிடப்பா நினைவிருக்கா ?) பெங்களூர் வந்த போது, அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். புத்தகம் பெயர்: நாலாயிர திவ்யப்ரபந்தம் அன்புள்ள தேசிகனுக்கு , சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வளமுடன் வாழ திருமலையப்பன் அருள்புரியட்டும் அன்புடன்... என்று கையெழுத்து போட்ட அந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புக்கள் 31.5.1943 பழனியில் ரூ 1.4.0கு வாங்கியது என்று திரு ராகவனின் அப்பா கையெழுத்து. சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை சென்னை தனிப்பிரதி விலை ரூ1.12.0, மூன்று பிரதிகள் ரூ 5 ஆழ்வார்கள் வைபவத்தில் ஆரம்பித்து, நாலாயிர திவ்யப்ரபந்தம், இயல்சாத்து, சாத்துமறை, திவ்வியதேசப் பிரபாவம், நூற்றெட்டு திருப்பதிகள் எண், திவ்வியபிரபந்தத்தில் கூறப்படும் பெயர்,

வேதாள உலகம்

இந்த முறை வேதாளம் வித்தியாசமாக வந்திருக்கிறது. ஆமாம், நீங்களும் வேதாளத்துடன் பயணம் செய்ய இருக்கிறீர்கள். ஜாக்கிரதை. இது மாயச் சுழல், விடை தெரிந்தால் தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும். உங்களுக்கு கடைசி வாய்ப்பு. சீக்கிரம் கிளம்புங்க. இப்போதே நீங்கள் மற்ற உபயோகமான வலைப்பதிவைப் படிக்க போகலாம். சரி 1, 2, 3 எண்ணுகிறேன்,  அதற்குள் கிளம்பிவிடுங்கள்.  1, 2, 3,...  என்ன இன்னுமா இருக்கிறீர்கள். பிறகு உங்க இஷ்டம், நான் என்ன செய்ய முடியும்?  ஆல் தி பெஸ்ட்!! [ விடைகளை கொடுக்க வேண்டிய வழிமுறைகள் - If the answer is a word, give it in english -lowercase. If it is a fraction, give it with a 0 before the decimal point eg., .1 is wrong, give it as 0.1 ]

திருமழிசையாழ்வார்

[%image(20070204-thirumazhisai1.jpg|167|242|Thirumazisai)%] நேற்று திருமழிசை ஆழ்வார் திருநட்சத்திரம். முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். தொண்டை நாட்டில் உள்ள திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். (கடலுக்கு மேற்கில் காஞ்சிபுரத்துக்குக் கிழக்கில் உள்ள ஊர்.) ("தொண்டை நன்னாடு சான்றோருடைத்து" என்கிறார் ஒளவையார்.) இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது.  தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார். திருமாலின் அடியவராகத் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும், கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும், திருமழிசை என்ற திருத்தலத்தில் பெருமானின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப் புதரின் கீழ் போட்டுவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு பிரம்பு அறுக்கும் தொழில் செய்யும் திருவாளன், அவரது மனைவி பங்கயச் செல்வி என்பவர்களால் வளர்க்கப் பெற்றதாக குருபரம்பரை கூறுகிறது. இவர் திருமழிசையில் பிறந்ததால் திருமழிசையாழ்வார் என்றும்

பதம் பிரித்த பிரபந்தம்

போன வாரம் எழுத்தாளர் சுஜாதாவை பார்த்த போது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகத்தை இருப்பதை கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்த போது அது - "நாலாயிர திவ்யப் பிரபந்தம்". வெளியிட்டவர்கள் தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை. ( இரண்டு பாகங்கள் விலை 225/= ). இந்த புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட புத்தகத்தை திரும்பவும் வெளியிட்டுள்ளார்கள். ( உபயம்: கடுகு அல்லது அகஸ்தியன் என்றழக்கப்படும் ரங்கநாதன்). பதிப்பாசிரியர்கள்: எழுத்தாளர்கள் 'சுபா'. பிரபந்தம் மீது பிரேமை கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய பதிப்பு. சிறப்பு பிகு: தென்கலை, வடகலை இரண்டு திருமண், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் தனியன்கள் அடங்கிய முதல் பிரபந்த புத்தகம் இது :-) இந்த வாரம் கல்கியில் சுஜாதா எழுதிய பகுதி கிழே தந்துள்ளேன். கிடைக்குமிடம் : 37, Canal Bank Road, Kasturaba Nagar, Adyar, Chennai 600 020 Phone: 044-2441 4441, 94446 59779      ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டு

பரமபத சோபானம்

[%image(20070125-paramapadam.jpg|329|400|paramapadam)%] ஒரு நாள் விஜயமாக திருச்சி சென்றிருந்தேன். வைகுண்ட ஏகாதசி முடிந்து ஸ்ரீரங்கத்தில் கூட்டம் கம்மியாக இருந்தது. ரெங்க விலாஸ் கடைகளில் கலர் பரமபதம் லேமினேட் செய்து விற்பனை செய்கிறார்கள். ( விலை 7/= ). சின்ன வயசில் அப்பா எனக்கு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சேவித்துவிட்டு வரும் வழியில் இந்தப் படம் மற்றும் தாயக்கட்டை வாங்கித் தருவார். அப்போது எல்லாம் சிகப்பு, கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். அந்தக் காலத்தில் டிவியின் தாக்கம் அதிகம் கிடையாது; அதனால் இதை விளையாட முடிந்தது. இப்போது எவ்வளவு பேருக்குப் பொறுமை இருக்கும் என்று தெரியாது. முதலில் தாயம் போட்டு ஆரம்பித்து, பிறகு ஏணிமேல் ஏறி, பாம்பின் வால் வழியாக இறங்கி கடைசியில் தாயமாகப் போட்டு போட்டு சொர்க்கம் செல்ல வேண்டும். சில சமயம் விளையாட்டு முடியாமல், அடுத்த நாளுக்கும் தொடரும். தற்போது வந்திருக்கும் படம் நான் சிறிய வயதில் பார்த்த படம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது, ஏணிகள் இடம் மாறிவிட்டது, பாம்புகள் சிரிக்கின்றன. பரமபத விளையாட்டு எல்லோருக்கும் புரியும்படி, நல்ல குணங்களான தருமம், நீதி,

காலச்சுவடு முதல் பஞ்சுமிட்டாய் வரை (Book Fair 2007)

புத்தகக் (கண்)காட்சிக்கு பொங்கல் அன்று சென்னை சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு, கூட்டம் அதிகமாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நான் போன சமயம் அப்படியில்லை; நுழைவு சீட்டு வாங்குவதற்கே க்யூ இருந்தது. முதலில் விகடன் பிரசுரம் இருந்தது. தீபாவளி பட்டாசு கடை போல் கூட்டம் அலை மோதியது. எனக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வருவதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அதிகம் விற்பனையானவை - கற்றதும், பெற்றதும், மதன் ஜோக்ஸ், ஓ-பக்கங்கள். பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் 4000/= முன் பதிவு செய்தால் 1999 என்று தூள் பறந்தது. விகடனில் மொத்தம் 113 தலைப்புகள் இருக்கின்றன. அடுத்தது கிழக்கு பதிப்பகம் வந்தேன். ஏகப்பட்ட தலைப்புகள், எல்லோரும் எப்போதும் போல் கிழக்கு யுனிஃபார்ம் போட்டுக்கொண்டு வரவேற்றார்கள். ஹாய் மதன், துப்பறியும் சாம்பு ( முழு தொகுப்பு, படங்கள் ரொம்ப சுமார், பழைய படங்களில் சாம்புவிற்கு இருக்கும் மூக்கு இந்த புத்தகத்தில் இளைத்திருக்கிறது, அட்டைப்படத்தில் சாம்பு ஓட்டும் பைக் TN-06-DS-007 ரெஜிஸ்டரேஷன்!. முன்னுரையில் சீக்கிரம் தேவனின் படக்கதை வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அலையன்ஸ் பதிப்பித்

கணையாழி கடைசிப் பக்கங்கள்

[%image(20070110-kanayali cover.JPG|221|339|kanayazhi cover)%] இந்த வருடம் தொகுத்த புத்தகம் இது. சுஜாதாவின் முன்னுரை மற்றும் என்னுடைய சிறு குறிப்பு. சுஜாதா முன்னுரை கடைசிப் பக்கங்களின் முதல் தொகுப்பு விசா பதிப்பகத்தினர் வெளியிட்டு மூன்று பதிப்புகள் கண்டது. அது முழுமையான தொகுப்பல்ல. கைவசம் இருந்த கணையாழி இதழ்களில் கிடைத்த 72 பக்கங்களின் தொகுப்பாக வந்தது. கணையாழியின் ஆரம்ப காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். கணையாழி இதழ்கள் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, வெ. சபா நாயகம், வெங்கடேஷ் போன்ற ஆர்வலர்களிடம் இருந்தன. ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சில திரட்டுகள் வெளியிட்டார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித