Skip to main content

Old is Gold

'Old is Gold' என்பார்கள், மத்த விஷயங்களில் எப்படியோ ஆனால் புத்தக விஷயத்தில் அது நிஜம்.
திரு. ராகவன் ( சென்னை ) அவர்கள், என் பதிவுகளை விரும்பி படிப்பவர். இன்று வரை நான் நேரில் சந்தித்தது கிடையாது.


"சார், உங்களுக்கு ஒரு பழைய புத்தகம் ஒன்று அன்பளிப்பாக அனுப்பப்போகிறேன், அனுப்பவா ? " என்றார்.
"தாராளமாக"
போன மாதம் ஒரு நாள் அவர் மனைவி புஷ்பா ராகவன் ( பொடிடப்பா நினைவிருக்கா ?) பெங்களூர் வந்த போது, அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். புத்தகம் பெயர்: நாலாயிர திவ்யப்ரபந்தம்


அன்புள்ள தேசிகனுக்கு ,
சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வளமுடன் வாழ திருமலையப்பன் அருள்புரியட்டும்
அன்புடன்... என்று கையெழுத்து போட்ட அந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புக்கள்


31.5.1943 பழனியில் ரூ 1.4.0கு வாங்கியது என்று திரு ராகவனின் அப்பா கையெழுத்து.


சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை சென்னை
தனிப்பிரதி விலை ரூ1.12.0, மூன்று பிரதிகள் ரூ 5


ஆழ்வார்கள் வைபவத்தில் ஆரம்பித்து, நாலாயிர திவ்யப்ரபந்தம், இயல்சாத்து, சாத்துமறை, திவ்வியதேசப் பிரபாவம், நூற்றெட்டு திருப்பதிகள் எண், திவ்வியபிரபந்தத்தில் கூறப்படும் பெயர், இக்காலத்தில் வழக்கத்தில் உள்ள பெயர், இருக்குமிடம், போகும் ரயில் வழி, பெருமாள், தாயார் பெயர், விமானம், தீர்த்தம் பெயர், மங்களா சாசனம் செய்த ஆழ்வார் பெயர், பாடல் எண், மற்றும் சில குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


அடுத்து யாப்பு இசைக்குறிப்பட்டவணை. இதில் எந்தெந்த பாட்டு எந்தெந்த யாப்பு வகை என்ற குறிப்பு


பாடபேதங்களின் அட்டவணை -இதில் பழைய ஏட்டுப்பிரதிகளுக்கும் அச்சில் உள்ள பாடல்களுக்கும் உள்ள சின்ன சின்ன வித்தியாசங்களில் தொகுப்பு.


பாட்டு முதற்குறிப்பகராதி


துணை நூல் அட்டவணையில்(Biblography) உள்ள புத்தகங்கள் எல்லாம் 157 வருடம் பழமை வாய்ந்தவை. அதாவது, பெரும்பாலான புத்தகங்கள் 1850ல் வெளிவந்தவை. இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்குமா என்று பார்க்கவேண்டும்.


இது புத்தகத்தை திரு ராகவனே திருப்பி கேட்டால் கூட கொடுப்பதற்கு யோசிப்பேன் !

Comments