Skip to main content

Posts

Showing posts from June, 2024

சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது.

  சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது. திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு இருக்கிறதா என்று தேடிக்கொண்டும், அறிஞர்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தேன். சங்க இலக்கியத்துக்கும், திருக்குறளுக்கும் இருந்தது ஆனால் ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு இல்லை என்பது தெரிந்த அதே சமயம் ஸ்ரீமந் நாதமுனிகளின் 1201 திருநட்சத்திரப் பத்திரிக்கை அடியேன் இல்லம் தேடி வந்தது. 1200 வருடங்களுக்கு முன் நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து நமக்குப் பெற்றுக் கொடுத்த ஆழ்வார்களின் ஈரச் சொற்களுக்குச் சொல்லடைவு இல்லையே, நினைத்தவுடன் நாம் நாதமுனிகளின் திருநட்சத்திரம் அன்று பிறந்த நாள் பரிசாக அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் அவருக்கு இதை சம்பர்பிக்க முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்தேன். இரண்டு நாளில் மொத்த 300 பக்கங்களையும் டைப் செட் செய்து, பிழைகளை நீக்கி, அட்டைப் படம் முதலியவற்றை வடிவமைத்து அச்சுக்கு அனுப்பியது எல்லாம் ஒளிக்கீற்று போல முடிந்ததற்குக் காரணம் நாதமுனிகளின் ஆசிகள் தான். இதுவரை நேரில் பார்க்காத நண்பர் பிரசன்னா, ஓட்டுனருடன் காரை அனுப்ப திருவாலி திருநகரிக்கு மன்ன

ஸ்ரீமத் நாதமுனிகள்

  ஸ்ரீமத் நாதமுனிகள் ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருப்பதே என் அப்பா சொல்லித் தான் தெரியும். ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் கடைகளுக்கு நடுவே ஒரு சந்தில் இருக்கும். சின்ன வயதில் ஒரு நாள் அதைத் தேடிச் சென்று சேவித்துவிட்டு வந்தேன். பிறகு ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலில் அவர் பேரனான ஆளவந்தாருடன் சேவித்துவிட்டு அங்கேயே ஒரு முழு நாளை சில வருடங்களுக்கு முன் கழித்தேன். பதம் பிரித்த பிரபந்தம் முதல் பதிப்பின் போது அடியேனுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியார்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார்.(அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார்) ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீமத் நாதமுனிகளையே சாரும். ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே&

சேவடி சில குறிப்புகள்

சேவடி சில குறிப்புகள் திருப்புல்லாணி ஸ்வாமி சந்தமிகு தமிழ்மறை என்ற புத்தகத்தின் சில பகுதிகளைச்  சில நாட்கள் முன் பகிர்ந்தார். அதில் திருப்பல்லாண்டு தொடக்கத்தில் ‘செவ்வடி’ என்று அச்சடித்துள்ளதுக்கு அருகில் ‘சேவடி’ என்று பால்பாயிண்ட் பேனாவில் எழுதிய குறிப்பைப் பார்த்தேன்.  இதைப்  பாடபேதம் என்பார்கள். ஸ்ரீ.உ.வே AV ரங்காசாரியார் பாடபேதங்களுக்கு 600 பக்கங்களில் தனிப் புத்தகமே போட்டுள்ளார்.  வியாக்கியானத்தில் செவ்வடி என்றும், சேவடி பாடாந்தரம் (சேவிக்கும் போது உபயோகப்படுத்துவது) என்று குறிப்பு உள்ளது.  செவ்வடி - செவ்விய + அடி அதாவது சிவந்த அடி என்பது உரைகளில் உள்ளது. செவ்விய என்றால் செம்மையான, செம்மை என்ற பொருளிலும் வரும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.  சேவடி - செ + அடி - செ என்ற ஒற்றைச் சொல் சிவப்பு என்ற பொருள் தரும் என்று நன்னூல், போன்ற இலக்கண நூல்கள் கூறியிருக்கிறது.  ‘சேவடி’ என்ற சொல் ஆழ்வார்கள் எங்கெல்லாம் உபயோகித்துள்ளார்கள் என்று சொல்லடைவு புத்தகத்தைப் பார்த்த போது 26 இடங்களில் வருகிறது.  சேவடி (26) :1/4, 47/1, 419/3, 469/2, 583/2, 660/4, 661/4, 709/2, 1146/3, 1179/2, 1193/1, 1267/

திவ்யப் பிரபந்தச் சொல்லடைவு சில கேள்விகள் பதிலுடன்

திவ்யப் பிரபந்தச் சொல்லடைவு சில கேள்விகள் பதிலுடன்  நேற்று சொல்லடைவு புத்தகம் வெளியீடு குறித்து அடியேன் எழுதியிருந்தேன்.  சிலர் கேட்கும் கேள்விகளுக்கு இவை.  *புத்தகம் என்ன விலை, எப்போது கிடைக்கும் ? அளவு என்ன ?  புத்தகம் அச்சுக்குச் சென்றுள்ளது, அட்டை, பைண்டிங் போக்குவரத்துச் செலவு போன்றவை தெரிந்த பின் வழக்கம் போலப் புத்தகத்துக்கு ஆகும் செலவை மட்டும் வாங்கிக்கொள்ள எண்ணம்.  மற்ற ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடுகள் போல இருக்கும். புத்தகம் 20.6.2024 அன்று வெளியிடப்படும். அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அனுப்பத் திட்டம்.  *புத்தகம் உள்ளே எப்படி இருக்கும் ? மாதிரி பக்கங்களைப் பகிர முடியுமா ?   சில மாதிரி பக்கங்களைக் கொடுத்திருக்கிறேன்.  *என்னிடம் பழைய பிரபந்தம் புத்தகம் ஒன்று இருக்கிறது அதற்கு இந்தச் சொல்லடைவைப் பயன்படுத்த முடியுமா ?  இந்நூலில் குறிப்பிட்டுள்ள பாசுர எண்கள் ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடான ‘ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள். உங்களிடம் உள்ள பிரபந்தப் புத்தகம் அந்த எண்களுடன் ஒத்துப் போனால்

திவ்யப் பிரபந்ததுக்கு முதல் சொல்லடைவு !

 திவ்யப் பிரபந்ததுக்கு முதல் சொல்லடைவு !  சென்ற வாரம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு குறித்து எழுதியது நினைவிருக்கலாம்.  சில நாள்கள் முன் காட்டுமன்னார் கோயிலிலிருந்து ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் திருஅவதார மஹோத்ஸவ பத்திரிகை வந்த போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் சொல்லடைவு புத்தகத்தைத் தயாரித்து அதை ஸ்ரீமந் நாதமுனிகளின் அவதார தினத்தில் வருக்கு சமர்பித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று அடியேனுக்கு உடனே தோன்றியது.  சென்ற வாரயிறுதியில்  புத்தகம், அட்டைப் படம் முதலியவற்றைத் தயாரித்து, மருத்துவர் ஸ்ரீ உ.வே.திருக்குடந்தை வேங்கடேஷ் ஸ்வாமியிடம் அணிந்துரை வேண்டும் என்று கேட்டவுடன்  அன்புடன் உடனே அளித்து, 20ஆம் தேதி அன்று ஸ்ரீ உ.வே கருணாகராசார்ய ஸ்வாமிகளும், ஸ்ரீ.உ.வே A.V..ரங்காசாரியார் ( சிதம்பரம்) 'நாதமுனிகள் காட்டிய நல்வழி புத்தகத்தை’ நாதமுனிகள் சந்நிதியில் வெளியிட உள்ளார்கள், அத்துடன் உங்கள் திவ்யப் பிரபந்த சொல்லடைவு புத்தகத்தையும் சேர்த்து வெளியிடலாமே  என்ற போது, ’போதும்’ என்று கை நீட்டினாலும் மடத்தில் கைமேல் அக்கார அடிசில் சாதிப்பது போல இருந்தது.  புத்தகம் நேற்று அச்சுக