Skip to main content

Posts

Showing posts from October, 2025

பொய்யிலாத மணவாள மாமுனி

பொய்யிலாத மணவாள மாமுனி  ’பொய்யிலாத’ என்று பதம் ஏன் வருகிறது என்று பல காலமாக தெரியாது. ஒரு முறை மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே. அரங்கராஜன் ஸ்வாமிகளைக் கேட்டபோது அதை விளக்கினார். அதைக் குறித்து கடைசியில் கூறுகிறேன்.  சில வருடங்களுக்கு வைகாசி விசாகம் அன்று ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். அன்றுதான் நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழிப் பிள்ளையின் திருநட்சத்திரம். வீதிப் புறப்பாட்டின்போது மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையை சேவித்துவிட்டு, மாலை மரியாதைகளுடன் சில வாழைப்பழப் பிரசாதங்களுடன் விடைபெற்றுச் சென்றார்.  பிறகு நம்மாழ்வார் சந்நிதிக்குச் சென்றேன். வரிசையில் நின்ற என்னை ஒரு பெரியவர் அழைத்தார். சென்றேன்.  “இந்தப் பிரசாதத்தை கொடுக்க தகுந்தவரை தேடிக்கொண்டிருந்தேன். நீர் வாங்கிக்கொள்ளும். திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளுக்கு அளித்த பிரசாதம்” என்று கையில் வாழைப்பழத்தைக் கொடுத்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை தான் மணவாள மாமுனிகளின் ஆசாரியர்.  திருவாய்மொழிப் பிள்ளை, சரம தசையில் மிகுந்த கவலையுடன் இருந்தார். அதைக் கண்ட சீடர்கள், 'பரம பக்தராகிய உங்களுக்கு மரண பயம் இருக்காத...

காந்தாரா சாப்டர் 1

காந்தாரா சாப்டர் 1  பள்ளியில் படித்தபோது, மலையாளப் படங்கள் ‘பிட்’டாகவும், தெலுங்குப் படங்கள் வெறும் மசாலாவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டன. கன்னடப் படங்கள் திரைப்படங்களே இல்லை என்று ஒதுக்கப்பட்டன. அவை தமிழ்நாட்டுக்குள் வந்ததில்லை. மற்ற திராவிடப் பிரதேசங்களில் தமிழ்ப் படங்கள் ’வேற லெவல்’ என்று கோலோச்சிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். சேட்டன்களின் கதைக்களம் எல்லாம் யோசிக்கக்கூட முடியாதவையாக, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையும் கதைச் சொல்லும் விதத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்கள். தெலுங்குப் படம் ‘பாகுபலி’ வந்த பிறகு ஒரு தனி அந்தஸ்து கிடைத்துவிட்டது. எந்த அந்தஸ்து கிடைத்தாலும், படம் ஆரம்பிக்கும் முன் மங்களகரமான மஞ்சள் எழுத்தில் திருவேங்கடமுடையானுடன் பக்தியுடன் ஆரம்பிக்கிறார்கள். கன்னடப் படங்கள் மெதுவாகத் தவழ்ந்து ‘யூ டர்ன்’ என்ற படம் வந்த போது ‘அட’ என்று சொல்ல வைத்து, ‘காந்தாரா’ வந்த பிறகு ‘அடடா’ என்று சொல்லவைத்தார்கள். இன்று காந்தாராவின் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ பாகுபலிக்கே போட்டி என்று பெயர் வாங்கியிருக...

புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ்

 புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ் புதிய தலைமுறை என்ற சேனல் அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது செய்தி. இதில என்ன சார் ஆச்சரியம், இதே போல் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது என்று பரவலாக பேசப்படுகிறது. ஏன் இப்படி நடந்தது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், எந்த பிரதான ஊடகமும் இதை தைரியமாக சொல்லப் போவதில்லை. சொன்னால் அவர்கள் சேனல் எங்கோ தொலைந்துவிடும்.  தமிழக மொத்த மீடியாவும் இன்று ஜெயா / சன் டிவி என்ற குழுமங்களுக்குள் ஏதோ ஒன்றில் அடங்கிவிடும். அதனால் புதிய தலைமுறை குறித்து எனக்கு வருத்தம் இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கலாம். இந்தப் பதிவு இன்றைய இந்தியப் புதிய தலைமுறை குறித்து.   ‘அரசு’ கேபிள் நிறுவனம், பெயருக்கு ஏற்றார் போல அரசு நடத்துகிறது. அதனால் மீடியாவின் சிகை அவர்கள் கையில். முடக்கவோ, தொலைந்து போக செய்யவோ முடியும். இதே போல தான் ஆண்டராய்ட், ஆப்பிள், கூகுள், ஜீ.மேயில், வாட்ஸ்-ஆப் போன்ற இன்ன பிற வஸ்துக்களும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் எல்லாம் வெளிநாட்டு அரசு கேபிள் நிறுவனம் போன்றவை. நாளை காலை, கூகுள், ஜீமெயில் இல்லை என்றால் உங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்...

பகுதி - 9 - ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும்

9. ஆறுகளும், ஈராறு ஆழ்வார்களும் பொலிந்து நின்ற பிரான் கோயிலுக்குள் நாதமுனிகள் சென்ற அவ்வேளையில், கோயிலின் அமைதி அவரைத் தழுவிக்கொண்டது. அந்த அமைதியை ஆரம்ப ஜாமத்தின்‌ மணியோசை கலைத்தது. பல ஆண்டுகாலம் பிரிந்திருந்த தோழர்கள் சந்தித்ததுபோல், கோயில் புறாக்கள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. கோயிலின் நறுமணப் புகையுடன், பெருமாளின் மீது சாத்தப்பட்ட மகிழம் பூவின் நறுமணமும் கலந்து ஒரு வைகுண்ட சூழலை சிருஷ்டித்துக்கொண்டிருந்தது. கோயிலை ஒட்டிய தாமிரபரணி ஆற்று நீர் வழக்கத்துக்கு மாறாகச் சப்தம் இல்லாமல், மெதுவாக கோயிலை தடவிக் கொடுத்துச் சென்றது. மெல்லிய அலைகள் அங்கிருந்த பாறைகளில் பட்டு, ‘ஏன் இவ்விதம் ஜடமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்பதுபோல இருந்தது. பளிங்கு போன்ற ஆற்றின் நீரில் மீன்கள் கூட்டம் கூட்டமாகத் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தன. சில மீன்கள் நீருக்கு மேல் நாதமுனிகளைப் பார்க்க முடியுமா என்ற ஆவலில் துள்ளிக் குதித்து எட்டிப் பார்த்தன. அந்த மீன்களைப் போல, நாதமுனிகளின் மனமும் குருகூர் நம்பியை எப்போது காணப் போகிறோம், அவர் அருளிய இன்தமிழ் ஆராவமுதத்தை எப்போது பருகப்போகிறோம் என்று துள்ளிக் குதித்தவண்ணம் இ...