Skip to main content

Posts

Showing posts from September, 2024

காற்றினிலே வரும் கீதம்

  காற்றினிலே வரும் கீதம் ’காற்றினிலே வரும் கீதம்’, இசையரசியின் வாழ்க்கைப் பயணம் என்ற புத்தகம் சில வாரங்களுக்கு முன் கைக்குக் கிடைத்தது. ஆசிரியர் ரமணன். அவ்வப்போது அதைப் படித்து வந்தேன். பொதுவாகப் புத்தகத்தின் முன்னுரை, நூலாசிரியரின் ஒருப்பக்கவுரை படித்துவிட்டுப் படிப்பேன் ஆனால் இந்தப் புத்தகத்தைக் கடைசி அத்தியாயத்திலிருந்து தொடங்கினேன். பல வருடங்கள் முன் கௌரி ராம்நாராயண் எழுதிய ‘MS and Radha: Saga of Steadfast Devotion’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்த காரணமாக இருக்கலாம். சுஜாதா ஒரு முறை சுயசரிதம் எழுதுவதில் சில ஆபத்து இருக்கிறது. உண்மையை எழுத வேண்டிவரும். கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்றார். நான் அவரை தொடர்ந்து நச்சரித்த போது, சரி என்று ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்தச் சுயசரிதத்தை நீ எழுதுவது போல எழுதாதே, தன்னிலையில் ( first person ) நான் எழுதுவதைப் போலவே என் ஸ்டைலில் எழுது என்றார். இதற்காக அவருடன் நான் பல சந்திப்புகளை நிகழ்த்தினேன். எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்தேன். ஆனால் நடுவில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு,

பசுக்களின் வாத்சல்யம்

பசுக்களின் வாத்சல்யம்  வாத்சல்யம் என்ற சொல்லுக்குக் கூகுள் கூறும் பதில் இது - “வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது” ஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம். இவை எல்லாம் கஷ்டம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தைப் பார்க்கலாம். அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் கன்றுக்குட்டியுடன் ‘வாத்சல்யத்துடன்’  இருக்கும் காட்சி. இதே போலக் கன்றுக்குட்டியுடன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் படம் ஒன்றும், ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் ,  ஸ்ரீமத் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஸ்வாமிகளுடன்  படங்களையும் பார்த்திருப்பீர்கள்.  இன்று நம் பாரதப் பிரதமர் மோதி  இல்லத்தில் உள்ள புதிதாக ஈன்ற கன்றுகுட்டிக்கு அவர்  'தீப்ஜோதி' என்று பெயர் வைத்து கொஞ்சும் காட்சிகளைப் பல ம