Skip to main content

சுஜாதா என்ற வாத்தியார்

'வாத்தியார்’ என்று அன்போடு அழைக்கப்படும் என் அபினான எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பிறந்த தினம் இன்று.
படித்துவிட்டு ராக்கெட் விடலாம், பெரிய வேலையில் இருக்கலாம் அல்லது மேதாவியாக கூட ஆகியிருக்கலாம். காரணம் அவர்களுடைய பள்ளி வாத்தியார் அதே போல தான் சுஜாதா என்ற வாத்தியாரும்!
பிப் 27 அவரைப் பிரிந்த நாளில் கலைஞர் முதல் பல பிரபலங்கள் வந்தார்கள் வருத்தப்பட்டார்கள் அஞ்சலி செலுத்தினார்கள். என்னைப் போல பலர் அழுதார்கள். ஆனால் நான் வியந்த விஷயம் மயானத்தில் வேலை செய்யும் சிப்பந்தி அழுதுகொண்டு இருந்தார். அழுததற்குக் காரணம் அவரும் சுஜாதா ரசிகர் !
கலைஞர் முதல் மயானத்தில் வேலை செய்யும் ஒரு கடை நிலை ஊழியன் முதல் வசிகரித்தவர் சுஜாதா அதனாலேயே அவர் எழுத்துலக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார்.
நான் சுஜாதாவை படித்ததே இல்லை என்று என் தலைமுறையில் யாராவது சொன்னால் அவருக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று அர்த்தம். இன்றும் யாராவது சுஜாதா பற்றி நல்லதோ கெட்டதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வாலி வதம் செய்தது சரியா ? தப்பா ? சீதையை ராமன் அனுப்பியது சரியா ? தப்பா ? போன்ற தலைப்புகளுடன் சுஜாதா வணிக எழுத்தாளரா, இலக்கிய எழுத்தாளரா என்ற தலைப்பும் பட்டிமன்றத்தில் சேர்ந்துவிட்டது. பலரைச் சென்றடைந்த எழுத்து இலக்கியமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?
மிஸ் யூ !
( ஓவியம் அடியேன் வரைந்தது, வாட்டர் கலர் )

Comments

  1. எனக்கு சுஜாதா வை சுஜாதா கதைகள் மூலம் அறிமுகம் ஆனாலும் சுஜாதா பற்றி பேசவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete

Post a Comment