Skip to main content

இரண்டு கட்டுரைகள்

சமிபத்தில் இரண்டு கட்டுரைகளை இரண்டு முறை படித்தேன். ஒன்று அசோகமித்திரன், மற்றொன்று ர.கி.ரங்கராஜன். யோசித்து பார்த்தால் இரண்டிலும் உள்ள நகைச்சுவைதான் காரணம் என்பது புலப்படும்.


முதலில் அசோகமித்திரன்.


இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது.


ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காது. யாரிடம் எதற்கு அனுமதி?


"என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க."


"எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது."


"அதுக்குள்ளே எடுத்துப் போயிடறோம்."


"எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம்தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு."


அப்பா பிணவறையிலிருந்து எழுந்து நடந்து போனார்.


( நன்றி: Samachar.com )


 [ நாளை ரா.கி.ரங்கராஜன். ]

Comments