Skip to main content

Posts

Showing posts from October, 2024

ராமனைக் கற்போம்

ராமனைக் கற்போம் நேற்று ஒருவர் என்னிடம் நான் பணிபுரியும் இடத்தில் பொறாமை குடிகொண்டுள்ளது இவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை உங்களிடம் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று கேட்டார். எனக்குள் பொறாமை இருக்க நான் எப்படித் தீர்வு கொடுக்க முடியும் என்று நினைத்தவாறே ’இராமபிரானை கற்போம்’ என்ற புத்தகத்தை அன்று இரவு திறந்தேன். அதில் ஸ்ரீமத் ஆண்டவன் பொறாமை குறித்து விவரித்திருந்தார்( நிஜமாகவே!). ”கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?” என்ற ஆழ்வார் திருவாக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கே ஆழ்வார் ”கற்பவர்கள் ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ? என்கிறார். இதில் இரண்டு வார்த்தைகளை ஒளிந்துகொண்டு இருக்கிறது. அதைச் சேர்க்க வேண்டும். முதலில் பிரான் - ’பிரான்’ என்றால் ’பெருங்கருணை’ என்று ஒரு பொருள். இப்போது ”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?” அடுத்த வார்த்தை ’குணக்கடலான’ என்பது. இது ஸ்ரீராமர் என்ற வார்த்தையிலேயே ஒளிந்துகொண்டிருக்கிறது. அதையும் சேர்த்தால் ‘”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட குணக்கடலான ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?” உங்களுக்கு எல்ல