Skip to main content

ஹாப்பி பர்த்டே சுஜாதா !

 


சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் படித்து அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவம் குதூகலம், விளையாட்டு, பக்தி, உற்சாகம், துக்கம் என கலவையானது. ஆனால் நேற்று ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா எழுதிய இந்த கட்டுரை என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்தது. முதுமை ஒரு தவிர்க்க இயலாத கட்டளை என்ற போதிலும் அதை எதிர்கொள்வது ஒரு கலை. வயோகதிகத்தின் அச்சுறுத்தும் இருண்ட கனவுகளை அங்கதமாக மாற்றி அதனோடு விளையாடுவதற்கு வாழ்க்கையின்மீதான ஒரு பெரிய தரிசனமும் சுய வெளிச்சமும் இருந்தால்தான் சாத்தியம். சுஜாதாவின் இந்தக் கட்டுரை அந்த வெளிச்சத்தை கொஞ்ச நேரம் நம் மனங்களில் ஏற்றுகிறது.


அவர் இந்தக் கட்டுரையில் கூறியிருக்கும் ஞாபக மறதி உட்பட பல symptoms எனக்கு இந்த வயதிலியே இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது


இன்று தனது 70வது பிறந்த நாள் காணும் திரு.சுஜாதாவிற்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவரை ஸ்ரீரங்கநாதர் நல்ல உடல் நலத்துடன் வைத்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன்.


நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.


 


இந்த வார 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...


மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.


"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.


நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.


"எதுக்குப்பா?"


"தொடுங்களேன்!"


சற்று வியப்புடன் தொட்டார்.


"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.


"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."


"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.


"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.


அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"


Image hosted by Photobucket.com"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.


மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!


டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.


மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!


சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".


ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.


இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.


ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).


இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.


தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.


அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.


நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!


நன்றி: ஆனந்த விகடன்



Old Comments from my previous Blog


வணக்கம் தேசிகன். அன்னிக்கு மூக்கு சுந்தர் பதிவுள்ள எழுதியிருந்ததால, ஆ.வி போய் படித்தேன். உண்மையில் படிக்கும்போது மிகுந்த கலக்கமாய் இருந்தது.


சாருக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டபோதும், இதயநோய் ஏற்பட்டபோதும் அவர் சிரித்தபடி எழுதியிருந்தாலும், என் மனது வருத்தப்பட்டது உண்மை.


ஆனாலும், அப்போது விட இந்த வார கற்றதும், பெற்றதும் கலங்கடித்து விட்டது. ஒரு மினி சுயசரிதை போன்ற வடிவமும் காரணமாய் இருக்கலாம். அது உங்களை disturb பண்ணியதில் ஆச்சரியமில்லை.


சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உடல்நலப்பிரச்னை அதிகமில்லாமல் நீடுழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.


By அன்பு, at Tue May 03, 10:31:12 AM IST  


உங்கள் கைவண்ணட்த்தில் படங்கள் சூசூப்ப்ப்பர்ர்...


By அன்பு, at Tue May 03, 10:32:18 AM IST  


Birthday wishes to Sujatha Sir.


By Anonymous, at Tue May 03, 10:34:23 AM IST  


Happy Birthday to Sujatha sir...
Intha naalilum inivarum naatkalilum iraivanin poorana aasigal Petru indrupol endrum vaazha iraivanai vanangi vaazhthum anbu...
srishiv from IIT Guwahati, Assam,India.


By srishiv, at Tue May 03, 11:29:18 AM IST  


My Hero!!!!
Happy Birthday wishes to him.


By "Anamikaa" Meyyappan, at Tue May 03, 11:50:59 AM IST  


தேசிக், கட்டுரையுடன் படித்தவுடன் தான் bubble புரிகிறது...
:))


Convey my birthday wishes to sujatha.


சுஜதாவும் நானும் பதிவை திரும்பவும் படித்தேன். அந்த கடைசி வரி...


By ரவியா, at Tue May 03, 01:20:56 PM IST  


Related Links :
http://icarus1972us.blogspot.com/2005/05/happy-birthday-sir.html
http://www.lazygeek.net/archives/2005/05/03/happy_birthday_dude_sujatha_rangarajan.html


By Desikan, at Tue May 03, 02:01:10 PM IST  


தன்னுடைய கவலையைக் கூட சுவைபட சொல்வது ஒரு கலை. அது சுஜாதா அவர்களால் தான் முடியும்.


அவர் நீடூழி வாழ்ந்து, மேன்மேலும் பற்பல எழுத்தாளர்களின் மானசீக குருவாகத் திகழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


அன்புடன்,
'சுபமூகா'


By சுபமூகா, at Tue May 03, 03:35:52 PM IST  


Hi,


I think You r the only person who is qualyfied to do that.
Mr.Sujatha is my favourite writer. Though im a journalist,
his writings -both his themes and the way he creates
his magic with brisk,simple yet inimitable style of language- are my
inspiration.
Many guys like me aspire but pitifully fail even to remotely imitate his
penmanship.
I think his fingers (and keyboard) are blessed by Goddess Saraswathi.
He may be turning seventy today, but his writings show that he is just
thirty.


I read his column in Vikatan and totally moved by how he takes things in his


stride and accept things as they are. I also pray for him for many more
healthy years of writing.


And he is blessed with more people like Desikan who are his true wealth.


God bless him.


Anbudan
Sadha


By Sadha, at Tue May 03, 03:58:25 PM IST  


//நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
//


நானும் தான் தேசி, இன்னும் பலரும் தான். Mr.Sujatha contributed a lot in everything
he had set his eyes on, not just writing in which field he rode like a
COLOSSUS. My wishes and prayers for a long and healthy life (and more writing)
on his Birthday! நான் பலமுறை கேட்டதை சீக்கிரம் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்


என்றென்றும் அன்புடன்
பாலா


By enRenRum-anbudan.BALA, at Tue May 03, 05:41:05 PM IST  


‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.


oh god(ess) :).


By Anonymous, at Tue May 03, 06:29:16 PM IST  


Many more happy returns of the day
to a 70 years young hero
nanu


By Anonymous, at Tue May 03, 08:33:01 PM IST  


Simplicity is the ultimate sophistication. ~Leonardo DaVinci


This is what Sujatha is special about. Among writers who write stuff that are Latin and Greek for the common reader, Sujatha has proved that simple language doesnot mean low stuff; but raher the contrary.


Let his writings influence a lot more to seek and excel in the art of keeping it simple and sweet.


Birthday wishes to him
Senthil Kumar


By SSK, at Tue May 03, 10:52:16 PM IST  


>>உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!<<


நாளை இருப்போமா என்பது நம் கையில் இல்லை என்பதை எத்தனை தெளிவாக
சொல்லி இருக்கிறார்!.


அவரை வாழ்த்த வயது போதாது, அவர் நல்லாரோக்கியத்துடன்,நலமே வாழ ராஜராஜேஸ்வரி
அருள்புரிய வேண்டுகிறேன்.


அற்புதமான அந்த எழுபது வயது இளைஞரின் ஆசிகள் எங்களுக்கு எப்போதும் கிடைக்கவேண்டும்.


அன்புடன்
(ரங்க)மீனா


By meena, at Wed May 04, 12:00:25 AM IST  


Hello Desikan,
Your blogs are really good and made me read these days... Very Impressive..


Btw, Wishes to Sujatha ..


~VAsu


By Anonymous, at Wed May 04, 07:38:41 PM IST  


I would like to send birthday wishes to Sujatha and to count the real readers of Sujatha. But I dont want to overload his email account. How to do that? I wish to make him receive atleast 10 million wishes. Do something Desikan..


By Anonymous, at Wed May 04, 09:50:41 PM IST  


//நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
//


நானும்.


Chinnakaruppan
karuppanchinna@yahoo.com


By Anonymous, at Wed May 04, 11:37:15 PM IST  


அன்புள்ள தேசிகன்


எனது வாழ்த்துக்களையும் சுஜாதா அவர்களிடம் சேர்ப்பிக்கவும்.


விகடன் கட்டுரை மிகவும் நெகிழ வைத்தது. அவரது நல்ல நெஞ்சுக்கு எவ்விதக் குறையும் வாரா. 'உமக்கென்ன குறைச்சல் நீர் ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை' என்று எம் எஸ் விஸ்வநாதன் குரலில் பாடத் தோன்றுகிறது. நோய்கள் நீங்கி, இன்னும் பல நூற்றாண்டு ஆரொக்கியமாக வாழ்ந்து, உன்னதப் படைப்புக்களைத் தொடர்ந்து படைக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.


பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
ச.திருமலை


By Anonymous, at Thu May 05, 07:03:09 AM IST  


விகடன் கட்டுரை படிப்பது ஒரு மினி சுயசர்தை படிப்பது போலிருந்தது என்பது உண்மைதான்.


கட்டுரை படித்ததும் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டேன், இங்கு எழுத நினைத்தேன், பிரகாசும் தேசிகரும் போட்டுவிட்டார்கள்.
நன்றி.


நல்ல உடல் நலத்துடன் ரங்கராஜன் அய்யா அவர்கள், நீண்ட நாள் வாழ இறை அருள் புரியட்டும்!


எம்.கே


By எம்.கே.குமார், at Thu May 05, 07:21:38 AM IST  


நானும் அவரின் தீவிர வாசகன்! அன்னாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும்!


By Moorthi, at Thu May 05, 08:05:12 AM IST  


Desikan,


today i morning i read the article. amma was reading it two days and recommended me to read this weeks katrathum petrathum in vikatan.


there are lots of things that is beyond human understanding. if all the information all available for everyone at some place learning will stop. then it is all about perceiving those information more than coming out with new things.


i was reading angels and demons last week and got a new perspective about god. as per the author dan brown science is nothing but god. god has created so many things for you and whenever you learn something you are nearing god. the time when you see both science and god are complementing each other you are starting learning more. ofcourse this is a perspective of one of the character in the book.


one more addition the late age memory loss is something called as dementia. the definition of dementia is gradual progressive mental impariment. alzheimer is one form of dementia. nearly 65% of people are suffering from this kind of dementia. this is a compromise that people had to do for their long life. lots of activities are happening on this area in nimhans @ bangalore.


as sujatha mentioned live for today.


By kicha, at Thu May 05, 10:51:52 AM IST  


Dear Desikan,
Thanks for the article. I have one similarity with Sujatha!! Guess What???
My Date of Birth is also 13-April and his too. But Actually my DOB is 13-October.. changed due to some reason in school. Apart from this he is a great human being. He came to my colleage during my 2 Year, he was talking about Video Compressiong, Huffman coding etc.. i was thrilled to hear that. I wanted to meet him in person and get an autograph,but i couldn't do on that day. Everyone in my famil likes his stories. I have bought all the Katrathum Petrathu,En Etharku eppadi series from Ananda Vikatan. He is truly a amazing gift to Tamil People and Cinema.
Wishing him a great Day and God bless him.


Regards,
Subbu


By Anonymous, at Thu May 05, 11:29:11 AM IST  


என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது. அவர் இப்படித்தான் ஒரு ஆங்கில வார்த்தையைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தார். "சண்டை போடுறதுக்கு இதைச் சொல்வாங்க" என்று தேடினார். ஞாபகத்திலிருந்து எப்படியும் எடுத்துவிடமுடியும் என்று நம்பித் தேடினார். கடைசியில் சில மணி நேரங்களுக்குப் பிறகு "quarell" என்றார், அதைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில். "இதைக் கண்டுபிடிக்கத் தெரியலை?" என்றேன். "நான் நினைச்சதை உன்னாலயும்தான் கண்டு பிடிக்கமுடியலை" என்றார்.


எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே. சமீபத்தில் ஜெயகாந்தனைப் பார்த்தபோது, அருகில் என் தாத்தாவைப் பார்ப்பது போலவே உணர்ந்தேன்.


சுஜாதாவின் எழுத்தில் கூட அதே "தாத்தாமை".


இந்தச் சப்பை கமெண்ட்டைப் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. தேசிகனின் வலைப்பதிவு ஒரு "நிலை"க்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இதே பிரச்சினை பத்ரியின் வலைப்பதிவிலும் இருக்கிறது. ஏதாவது செய்யவும், எழுதாமலிருப்பதைத் தவிர! :-)


அன்புடன்
ஹரன்பிரசன்னா


By Haranprasanna, at Thu May 05, 01:46:48 PM IST  


Desikan
Convey my wishes to Sujatha


"Now I know why he did not attend my marriage"


BTW what film he is curremtly working on


Dittu


By Dittu, at Sat May 07, 08:13:54 AM IST  


Dear Desikan
U will become a cloned version of Sujatha one day.
best wishes
Nanu


By Narayanan, at Sun May 08, 11:04:33 AM IST  


the post as well as the responses are as sentimental and sensible as most tamil tv serials are.


By Anonymous, at Mon May 09, 03:08:31 AM IST  


எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே


is it so.but children dont talk nonsense as grandpas like jayakanthan talk nor they seek sympathy citing their age.


By Anonymous, at Mon May 09, 03:10:13 AM IST  


Hi Desikan,
I wrote a blog inpired by yours yesterday. I also share the same ideas like you do about evolution and the dasavatharam. It would be nice if you continue to write such blogs combining religion and science.
ROBBIE


By ROBBIE, at Tue May 10, 02:41:31 AM IST  


robbie
are you going to recycle the junk i.e. what desikan wrote on evolution and ten avatars of vishnu
or would it be a new junk


By wichita, at Tue May 10, 03:38:57 AM IST  


WICHITA,
HAVE YOU EVER HEARD ABOUT FREEDOM OF SPEECH. IF YOU HAVE A POINT TO MAKE INCLUDE IT IN YOUR BLOG. DO NOT GO AROUND INSULTING PEOPLES INTELLIGENCE. DO NOT ARGUE FOR ARGUEMENTS SAKE AND DO NOT TAKE AWAY THE CREATIVE SPIRIT WITH WHICH WE WRITE OUR BLOGS. I DONT WRITE BLOGS TO SATISFY YOUR GRANDMOTHER.
PEACE,
ROBBIE


By ROBBIE, at Tue May 10, 03:45:27 AM IST  


hi first time here and realy impressed with your tamil contribution....


I also read this in ananda vikatan and touched by the stark reality. if you happen to see that energetic author talking like this, it makes be sad.


By Ram.C, at Tue May 10, 03:46:06 AM IST  


why certain comments are appearing as lines only?what should be done to view the comments?


By Anonymous, at Tue May 10, 08:30:14 PM IST  


http://kasi.thamizmanam.com/?item=196


முடிந்தால் இந்த தொடுப்பையும் கண்ணில் படுமாறு செய்துவிடுங்கள்.நன்றி


By suratha, at Thu May 19, 01:33:18 AM IST  

Comments