Skip to main content

Posts

Showing posts from June, 2025

108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம்.

108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம். திருச்சியில் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு உத்தியோகத்துக்கு சென்னைக்கு வந்த போது என் அப்பா ’சென்னையை சுற்றி நிறைய திவ்ய தேசங்கள் இருக்கிறது, வாரயிறுதியில் முடிந்தால் செல்’ என்று கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும், லிப்கோ 108 திவ்ய தேசங்கள் என்ற புத்தகம் ஒன்றையும் எனக்குக் கொடுத்தனுப்பினார். திருவல்லிக்கேணியில் ஒண்டியாக இருந்த போது பைக்கில் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று அதைக் குறித்து எழுதினேன். என் முதல் எழுத்து இப்படித் தான் ஆரம்பித்தது என்று கூடச் சொல்லலாம். என்றாவது ஒரு நாள் எல்லா திவ்ய தேசம் குறித்து எழுதி படங்களுடன் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் திவ்ய தேசப் பெருமாள் படங்களையும், புத்தகங்களையும் சேகரிக்கத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு பிரபல வார இதழில் 108 திவ்ய தேசம் என்ற தொடர் வந்தது, அதில் ஆச்சரியமான திவ்ய தேசப் படங்கள் வந்துகொண்டு இருந்தது. இது போன்ற படங்கள் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு வாரம் அந்தப் படத்துடன் ஓரத்தில் வாட்டர் மார்க் ஒன்று தெரிந்தது. ‘தஞ்சை மூர்த்தி’ என்று பிரபலப் புகைப்படக்காரர் திர...

பேயாழ்வார் பிறந்த இடம்

பேயாழ்வார் பிறந்த இடம் திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று - பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி என் மகன் ஐந்தாவது படிக்கும் போது அவனுக்கு ஆழ்வார் கதைகளைச் சொல்லி வைத்தேன். ஒரு நாள் அவன் புத்தகப் பையைப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட காகிதங்களில் ’ஆழ்வார் கதைகள்’ என்ற தலைப்பில் முதலாழ்வார்கள் கதை காமிஸ்க் வடிவில் வரைந்திருந்தது கண்ணில் பட்டது. ( ஒரு பக்கத்தைத் தந்துள்ளேன்). சமீபத்தில் தோளுக்கு மேல் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அவனுடன் ஒரு விடியற்காலை சென்னையைச் சுற்றி நடந்த போது, முன்பு அவன் வரைந்த காமிக்ஸ் வரைபடத்தைப் பற்றி பேச்சு வந்தது. என் கைப்பேசியில் அவன் வரைந்த அப்படத்தைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வி “பேயாழ்வார் மைலாப்பூரில் தான் பிறந்தாரா?. பிறந்த இடம் இன்னும் இருக்கிறதா?’ ‘இருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘இப்போது போய் பார்க்கலாமா?’ உடனே ஓர் ஆட்டோவை பிடித்து மைலாப்பூர் சென்றோம். பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியத்தின் போத...

சடகோபன் அருள்

சடகோபன் அருள் மதுரகவி ‘கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ மூன்று இடங்களில் சடகோபன் என்ற சொல்லை உபயோகிக்கிறார். சடகோபன் நம்பி என்று இரண்டு இடத்திலும் ஒரு இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார். ‘சடகோபன் அருள்’ என்றால் என்ன ? நாதமுனிகளுக்குச் சடகோபன் அருளியதால் தான் இன்று நமக்கு நாலாயிரமும் கிடைத்தது. தற்காலத்தில் திரு.உ.வே.சா தமிழ் ஓலைகளைச் சுவடிகளைத் தேடிக்கொண்டு ஆழ்வார்திருநகரியில் மனம் உருகி ஆழ்வாரை வேண்டிக்கொண்டதால் அவருக்கு வேண்டியது கிடைத்தது ( இதைப் பற்றித் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன் ). அதே போல் யோகா ஆசான் திரு கிருஷ்ணமாச்சாரியார் ஆழ்வார்திருநகரியில் சம்பந்தத்தால் அவருக்கு யோக ரகசியம் கிடைத்தது. ( இதைப் பற்றியும் அடியேன் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்). பல வருடங்கள் முன் லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருக்கும் இடத்துக்கு. அருகில் ஒரு கல்யாண மண்டபம். விழாக்கோலமாக இருக்கக் கோயில் மாலை பிரசாதமாக வருகிறது. ஏதோ காரணம் கல்யாணம் நின்றுவிட்டது. கோயில் ம...

அவுட்லைன்

அவுட்லைன்  ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ...