Skip to main content

Posts

Showing posts from April, 2008

நட்சத்திர எழுத்தாளர் (1935 - 2008) - குவளைக் கண்ணன்

1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது.

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் குமுதம் தீராநதி(இரண்டாம் பகுதி)

பகுதி-2 - வ.ஜ.ச. ஜெயபாலன், எம்.ஜி.சுரேஷ், இரா.நடராஜன், த.பழமலய் வ.ஜ.ச. ஜெயபாலன் எதிர்பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப் போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப்படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப்பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராய்ச்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்தித்ததில் இருந்து 1999_ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செழித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே. மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணினிக் காலம் வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுட்பத்தாலும் மனசாலும் மீண்டும் மீண்டும் பிறந்து வ.ஜ.ச. ஜெயபாலன் காலத்தை வென்று கொண்டிருந்தார். என்னை கணினியில் எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள் அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும்

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் - குமுதம் தீராநதி(பகுதி ஒன்று)

குமுதம் தீராநதி இதழில் வந்த சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் பகுதி 1 - பா.வண்ணன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி. பா.வண்ணன் சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அப்போது எங்கள் அப்பாவுடைய தையற்கடையில் உதவியாளராக மாதவன் அண்ணன் என்பவர் இருந்தார். என்னுடைய புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தெரிந்துகொண்டு தன்னுடைய வீட்டில் தன் அண்ணனுக்கும் அப்படிப்பட்ட பழக்கம் உண்டு என்று சொன்னார். ஏராளமான அளவில் புத்தகங்கள் அவரிடம் இருப்பதாகவும் உற்சாகமாகச் சொன்னார். உடனே அந்தப் புத்தகங்களைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் பீரிட்டெழுந்ததால், “படிப்பதற்கு எனக்குத் தருவாரா?’’ என்று கேட்டேன். அவருடைய அண்ணன் கடலூரில் தங்கி ஏதோ ஒரு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலை பார்த்துவருகிறார் என்றும், வாரவிடுமுறையான ஞாயிறு அன்றுதான் வீட்டுக்கு வருவார் என்றும் மாதவன் அண்ணன் சொன்னார். அதனால் ஞாயிறு வரை நான் காத்திருந்தேன். அவர்கள

ஊஞ்சலை தேடினோம்

எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.   டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம். அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம். "சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங