Skip to main content

Posts

Showing posts from October, 2017

பெங்களூருவில் தியாகராஜர்

பெங்களூருவில் தியாகராஜர் என்னுடைய சின்ன வயதில் பலருடைய உபன்யாசங்களுக்கு என் தகப்பனார் அழைத்துச் செல்வார். அருமையான தமிழில் புகுந்து விளையாடுவார்கள். ”இராமன் என்ன செய்தான் தெரியுமா ?” என்று பட்டிமன்றத்தில் பேசுவது போலவே இருக்கும். ராமாயணம், மஹாபாரதம் கதைகள் தெரிந்தது ஆனால் பக்தி வளரவில்லை. ஒரு முறை ஐஸ் அவுஸ் பக்கம் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பாவுடன் சென்றிருந்தேன். பக்த மீரா, சூர்தாஸ் பற்றிய அவர் உபன்யாசத்தின் போது கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. இதே இரண்டு சொட்டு கண்ணீர் என் பையனுக்கு வரவேண்டும் என்று அவனுடன் நேற்று ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் இசை நாடகத்துக்கு என் பையனுடன் சென்றிருந்தேன். நாடகத்தில் ஒரு காட்சி. இரவோடு இரவாகத் தியாகராஜ ஸ்வாமிகள் நித்தியம் ஆராதனை செய்யும் ஸ்ரீராம விக்ரகத்தை அவர் மூத்த அண்ணன் காவிரியில் போட்டுவிட, மறுநாள் காலை தியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகத்தைக் காணாமல் துடிதுடிக்க அந்தக் காட்சி முடிந்த பின் மேடையில் லைட் மெதுவாக fadeout ஆகி முழுவதும் இருட்டாக... அரங்கில் நிசப்தம். அந்தச் சமயம்.. அர

விஷ்வக்ஸேநர்

விஷ்வக்ஸேநர் கல்லூரி முடித்துவிட்டு, சென்னையில் வேலைக்கு வந்த சமயம், பைக்கில் ஊர் சுற்றிய போது ”Vishwak” என்று கம்பெனி கண்ணாடி பலகை கண்ணில் பட்டது. வித்தியாசமான பெயராக இருந்தது. ஆனால் அர்த்தம் தெரியவில்லை. சில வருஷம் கழித்து அதன் உரிமையாளர் பிரபல ‘லிப்கோ’ புத்தக நிறுவனத்தின் வாரிசு என்று தெரிந்தது. ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இந்தப் பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. பல வருடங்கள் கழித்து கோயிலில் சன்னதிகளை சேவிக்கும் போது, விஷ்வக்சேனர் பற்றி தெரிந்துக்கொண்டேன். ’விஷ்வக்’ என்று முன்பு பார்த்த பெயருக்கும் இதற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு என்று நண்பர் Venkatarangan Thirumalai வெங்கட்ரங்கனை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன் (அவருடைய இல்லத்தில் அப்படி தான் அவரை கூப்பிடுவார்களாம் ! ) முதலில் விஷ்வக்ஸேனர் வாழி திருநாமம் ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வ

யோக ஆசான் – ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா

யோக ஆசான் – ஸ்ரீ கிருஷ்ணமாச்சார்யா - சுஜாதா தேசிகன் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியரிடம் கேட்கப்பட்ட, ‘இந்தச் சமுதாயத்துக்கு உங்களது செய்தி என்ன?’ என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் - ஓம்! முன்பு ‘மாரல் சைன்ஸ்’ என்றொரு வகுப்பு இருந்தது. அதில் பெரும்பாலும் ஆசிரியர், “சத்தம் போடாமல் ஏதாவது செய்யுங்க” என்ற அறிவுரையுடன் நோட்டுப் புத்தகங்களைத் திருத்திக்கொண்டு இருப்பார். எப்பொழுதாவது நீதிக் கதைகள் சொல்லுவார். மற்றபடி அது ‘ஓபி’ வகுப்பு. மூக்குக்குக் கீழே மீசை எட்டிப்பார்க்கும் காலத்தில் அறிவியல் பாடம் ஃபிஸிக்ஸ், கெமிஸ்டரி, பையாலஜி என்று பிரிக்கப்பட்டு, ‘மாரல் சைன்ஸ்’ மறைந்து போனது. ஹார்மோன்களின் அட்டகாசத்தால் பல சிக்கல்கள் வரும் பருவத்தில் ‘மாரல் சைன்ஸ்’ வகுப்பைப் புறக்கணித்துவிட்டு, எல்லோரும் என்ஜினியர்களாகவோ அல்லது டாக்டராகவோ புறப்படுகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மாரல் சைன்ஸ் என்ற வகுப்பு ‘வேல்யூ எஜுகேஷன்’ என்று உருமாறி, லீடர் ஷிப், கம்யூனிகேஷன், கமிட்மெண்ட், ரெலேஷன்ஷிப், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று கார்பரேட் சமாசாரமாகிவிட்டது. பத்து வயதுப் பையன் ஒருவனுக்கு ‘மௌஸ்’ உபயோகிக்க முடிகிற

நடுநாட்டு கரும்புச்சாறு

சாலை ஓரத்தில் இருக்கும் கரும்புச்சாறு இயந்திரத்தைப் பார்த்திருப்பீர்கள். கரும்பை உருளைகளுக்கு ( roller ) நடுவில் புகுத்தி சாற்றைச் சக்கையாக பிழிந்து தருவார்கள். பல நாள் கரும்புச்சாறு பருக ஆசை, சென்ற சனிக்கிழமை காரில் கிளம்பினேன். ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி ஓர் பதின்மூன்றாம் மலை நாடு ஓரிரண்டாம் - சீர் நடு நாடு ஆறோடு ஈரெட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறு திருநாடு ஒன்றாக் கொள். என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாசுரம் இதில் நடுநாட்டு திருப்பதி இரண்டு என்று இருப்பதைப் பார்க்கலாம். சில மாதங்கள் முன் என் பையனுக்குமுதல் ஆழ்வார்கள் கதையை சொன்ன போது அவன் கேட்ட கேள்வி “இன்னும் அந்த இடைகழி இருக்கிறதா ?” அப்போது தான் நினைவுக்கு வந்தது இந்த திவ்ய தேசத்தை அடியேன் இன்னும் சேவிக்கவே இல்லை என்று !. ஸ்ரீவேதாந்த தேசிகன் பிரபந்தசாரத்தில் தண் கோவல் இடை கழிச் சென்று இணையில்லா மூவருமாய் இசைந்தே நிற்க நடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம் நள்ளிருளில் மால் நெருக்க நந்தா ஞானச் சுடர் விளக்கு ஏற்றி அன்பே தகளியான தொடை நூறும் எனக்கு அருள் துலங்க நீயே என்று குறிப்பிடுகிறார். [மூவரும