Skip to main content

Posts

Showing posts from August, 2017

பொங்கும் பரிவு !

திருவாலி திருநகரி, திருமங்கை ஆழ்வார் பற்றி எழுதிய கட்டுரையில் “ஆழ்வார் பாசுரம் ஒன்று கூட இல்லையே?” என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். கலியன் பாசுரம் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடும் போது சிறிய திருமடல், பெரிய திருமடல் இரண்டுக்கும் தனியன் எழுதியது ‘பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று கண்ணில் பட்டது. போதுவாக தனியனைச் சேவிப்போம் ஆனால் அது எழுதியது யார் என்று நாம் கவனிக்க மாட்டோம். திருவாலியில் இருக்கும் திருமங்கை மன்னன் அர்ச்சா ரூபம் நிஜம் என்று எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அர்ச்சை என்றால் என்ன சார் எங்களுக்குப் புரியும் படி எழுதவும் என்று ஒருவர் சொல்லியிருந்தார் அவருக்காக இந்தச் சின்ன விளக்கம் எம்பெருமான் திருக்கோயில்களில் இருக்கும் நிலை அர்ச்சை. ஆழ்வார்கள் பக்தியுடன் சேவித்ததால் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாசுரம் பாட முடிந்தது. நாம் பார்க்கும் போது அது ‘சிலை’ என்று நினைப்பதால் பூர்ணமாக பக்தி செய்ய முடிவதில்லை. அர்ச்சா மூர்த்தி தான் தனக்குப் பிரியமானது என்கிறார் ஆளவந்தார்(சதுஸ்லோகீ) . ரஹஸ்யத்ரயஸாரத்தில் வேதாந்த தேசிகன் திருமங்கை ஆழ்வார் தம்மை பெருமாளின் விஷயத்தில் தேஹாத்

திருவாலி திருநகரி - மீண்டும் பயணம்

கல்லணை வழியாகத் திருவாலி திருநகரிக்கு திருமங்கை ஆழ்வாரைத் தரிசிக்க புறப்பட்ட போது குழந்தை வாயில் ஜொள் ஒழுகுவது போல மெதுவாக ஆங்காங்கே காவிரியில் தண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. (இங்கேயும்) மணல் லாரிகளின் வரிசையைக் கடந்து கல்லணை பாலத்தில் மயிரிழையில் எதிரே வரும் வண்டியை உரசாமல் திருவையாறு வரை வந்த போது தனியாவர்த்தனம் செய்த உணர்வு கிடைத்தது. தனியாவர்த்தனம் முடித்த பின் துக்கடாவாக சாலை போட வழியை அடைத்து எங்களைத் திருப்பிவிட மாற்று வழிப் பாதையில் எரிச்சலுடன் வண்டியை ஓட்டிய போது அது நேராக திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருவிண்ணகரம் என்னும் ஒப்பிலியப்பன் சன்னதி வாசலில் கொண்டு வந்து விட்டது. அர்ச்சகர் பெருமாள் கையில் இருந்த மாலையை அடியேனுக்குக் கொடுத்து ’நல்லா சேவிச்சிக்கோங்க’ என்று என்னை திருநகரிக்கு வழி அனுப்பிவைத்தார். வழி நெடுகிலும் வயல்களில் வரும் சுத்தமான காற்றைச் சுவாசித்துக்கொண்டு திருநகரிக்கு சென்றோம். ஓர் உடைந்த பாலம் பக்கத்திலேயே ஒரு புதிய பாலம் இருந்தது அதில் போக முடியாதபடி முள், டிரம் போட்டு அடைத்திருந்தார்கள். விசாரித்த போது அரசியல் தலைவர் வந்து திறந்துவைக்க காத்துக்க

பகல் கொள்ளை, இரவு கொள்ளை

ஆகஸ்ட் 15ம் தேதி இந்த வருடம் லாங் வீக்கெண்டாக சுதந்திரத்தை அனுபவிக்க பெங்களூருவை காலி செய்து ஸ்ரீரங்கத்துக்கு புறபட்டேன்.  என்னை போலவே பலர் காலி செய்ததால் போக்குவரத்து நெரிசலை கடந்து  கிருஷ்ணகிரியில் இருக்கும் A2Bக்கு வர நான்கு மணி நேரம் ஆனது. அங்கே பில்லுக்கு,  காபிக்கு, டாய்லட்டுக்கு என்று எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம். கிழிஞ்சுது கிஷ்ணகிரி  என்பதற்கு நேற்று தான் அர்த்தம் தெரிந்தது. நாமக்கல் தாண்டிய பிறகு முசுறிக்கு முன் காவிரி மணல் ஆறாக காட்சிகொடுத்தது. அதன்  நடுவே சாரை சாரையாக ஏதோ ஊர்ந்து சென்றுக்கொண்டு இருந்தது. இவ்வளவு பெரிய  சைஸ் எறும்பா ? என்று உற்று பார்த்த போது எல்லாம் லாரிகள் அதன் வால் எங்கே  இருக்கிறது என்று தேடிய போது கிட்டதட்ட ஒரு கிமீ தூரம் காவிரிக்கு அரணாக  மறைத்துக்கொண்டு... காவிரியை மணல் குவாரிகளாகிவிட்டார்கள். பிறகு குணசீலம்  தாண்டிய போது மீண்டும் அதே எறும்புகள்...ஒரு பெண்ணை பலர் ஒரே சமயத்தில்  கற்பழிப்பதற்கு சமமாகும் செயல் இது. பகல் கொள்ளை. ஸ்ரீரங்கம் முழுவதும் எல்லோரும் “தண்ணீர் முக்கொம்பு வரை வந்துவிட்டது.. நாளைக்கு  அம்மாமண்டபம் வ