பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது. திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
Sunday, January 1, 2012
நம்பி இருந்த வீடு
பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது. திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
Labels:
அனுபவம்,
ஸ்ரீவைஷ்ணவம்
Wednesday, December 14, 2011
போராட்டமே வாழ்க்கை
எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிகப்பு நிற கிளோட்டன் செடியின் நுனிக்குருத்தை சில வாரங்களுக்கு முன் குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. இத்தனைக்கும் எங்கள் வீடு 15-ஆவது மாடியில் இருக்கிறது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது.
முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளரவேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான்.
செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்ற சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கணுக்களிலிருந்துதான் முளைக்கும். வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சியை வேறு சேனலுக்கு மாற்றாமல் கேட்டிருந்தால் பூச்சியினால் நுனிக்குருத்து தாக்கப்பட்ட செடிகள் இறந்து போவதையும் அதை எப்படி தடுப்பது என்பதையும் கேட்டிருக்கலாம்.
Tuesday, December 13, 2011
வீடு வாங்கிய கதை
கடைசிக்காலம் வரை என் அப்பா வாடகை வீட்டில் இருந்தாலோ என்னவோ எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.
திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள்.
“வேளச்சேரில என் ஃப்ரெண்டோட ஃபிளாட் ஒண்ணு ஒருக்கு, மழை வந்தால் அந்த வீட்டைச் சுத்தி மட்டும் தண்ணி வராது”
Friday, December 2, 2011
மல்லையா மருத்துவமனையின் முரண்
ஷூ ஃபிளவர் என்ற செம்பருத்தியை ஷூவில் தேய்த்தால் பளபளவென்று ஆகும் என்று சின்ன வயதில் நம்பி தேய்த்திருக்கிறேன். அதில் உள்ள ஈரத்துக்கு கொஞ்சம் நேரம் ஷூ பளபளக்கும். மாமியார் வீட்டில், முடிகொட்டாமல் இருக்க இந்தப் பூவை வெய்யிலில் காய வைத்து சீயக்காயுடன் அரைக்க உபயோகப்படுத்துவார்கள். ஒரு சமயம் இந்தப் பூவைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்; கொழகொழவென்று இருக்கும். ஆர்கானிக் டீ செய்கிறார்கள். சாமிக்குப் போடுகிறார்கள். தலையில் மட்டும் யாரும் வைத்துக்கொள்ளுவதில்லை!.
செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)
செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)
Labels:
கூடு
Thursday, December 1, 2011
பனியன் அண்டர்வேருடன்...
முதலில் கொஞ்சம் பழைய மேட்டர்...
1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.
பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட்டில் அடுத்த சானலை மாற்றுவது போல Wordpressக்கு மாறினேன்.
எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது. நானும் எழுதுவதை சில மாதங்களக நிறுத்தியிருந்தேன். போன வாரம், எழுத வருகிறதா என்று பார்க்க ஒரு சின்ன கட்டுரை எழுதினேன். வலைப்பதிவில் அதை பிரசுரித்த சில மணி நேரத்தில் என்னுடைய www.desikan.com தளம் 'ஹாக்' செய்யப்பட்டது. "பேசாதே!" என்ற சைகையுடன் ஒரு பாவபட்ட பெண் விரலை வாயில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்க என்னுடைய தளத்தை நிர்வகிக்கும் கம்பெனியுடன் பேசிய போது "இதோ பத்து நிமுஷம் சார்" என்று முந்தா நாள் எடுத்த நகலை கொண்டு என் வலைத்தளத்தை மீட்டார்கள். ஆனால் என் எழுத்துக்கு பதிலாக என்னுடைய வலைத்தளம் உள்ளே இருக்கும்(டைரக்டரி லிஸ்டிங்) பனியன் அண்டர்வேர் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
நண்பர் ரவியை(Ravidreams) கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். உடனே அவருடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு தகவல் களஞ்சியத்தில்( Database) ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று சரி செய்தார். செகியூரிட்டி பேச் எல்லாம் போட்டிருக்கேன், இனி பிரச்சனை இருக்காது நீங்க தொடந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர இரண்டு நாட்கள் ஆனது.
நேற்று ராத்திரி ஒரு நகல் எடுத்து வைக்கலாம் என்று திரும்ப என் வலைத்தளத்துக்கு சென்ற போது மெலிதான இசை கேட்டது, கூடவே காஷ்மீரில் என்ன நடக்கிறது தெரியுமா ? என்று இந்திய ராணுவத்தை திட்டி பீரங்கி என்னை நோக்கி இருக்க மீண்டும் பனியன், அண்டர்வேர் தெரிய ஆரம்பிக்க... கோபம் வரவில்லை அதற்கு பதில் திடீர்னு ஞாநோதயம் வந்தது.
உடனே எல்லா பதிவுகளையும் XML இம்போர்ட் எஸ்போர்ட் கொண்டு கூகிள் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.
நீதி: பதிவுகளை வேர்ட் பிரஸில் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நான் வேட்பிரஸில் ரசிகர் அதில் தான் எழுதுவேன் என்று அடம்பிடிப்பவர்கள், 'கூகிள் ஆண்டவர் துணை' என்று போட்டுவிட்டு எழுதுங்கள்.
( இன்று காலை ET ல் வந்த படம், கொஞ்சம் எடிட் செய்து உபயோகப்படுத்தியிருக்கேன் )
1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.
பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட்டில் அடுத்த சானலை மாற்றுவது போல Wordpressக்கு மாறினேன்.
எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது. நானும் எழுதுவதை சில மாதங்களக நிறுத்தியிருந்தேன். போன வாரம், எழுத வருகிறதா என்று பார்க்க ஒரு சின்ன கட்டுரை எழுதினேன். வலைப்பதிவில் அதை பிரசுரித்த சில மணி நேரத்தில் என்னுடைய www.desikan.com தளம் 'ஹாக்' செய்யப்பட்டது. "பேசாதே!" என்ற சைகையுடன் ஒரு பாவபட்ட பெண் விரலை வாயில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்க என்னுடைய தளத்தை நிர்வகிக்கும் கம்பெனியுடன் பேசிய போது "இதோ பத்து நிமுஷம் சார்" என்று முந்தா நாள் எடுத்த நகலை கொண்டு என் வலைத்தளத்தை மீட்டார்கள். ஆனால் என் எழுத்துக்கு பதிலாக என்னுடைய வலைத்தளம் உள்ளே இருக்கும்(டைரக்டரி லிஸ்டிங்) பனியன் அண்டர்வேர் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
நண்பர் ரவியை(Ravidreams) கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். உடனே அவருடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு தகவல் களஞ்சியத்தில்( Database) ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று சரி செய்தார். செகியூரிட்டி பேச் எல்லாம் போட்டிருக்கேன், இனி பிரச்சனை இருக்காது நீங்க தொடந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர இரண்டு நாட்கள் ஆனது.
நேற்று ராத்திரி ஒரு நகல் எடுத்து வைக்கலாம் என்று திரும்ப என் வலைத்தளத்துக்கு சென்ற போது மெலிதான இசை கேட்டது, கூடவே காஷ்மீரில் என்ன நடக்கிறது தெரியுமா ? என்று இந்திய ராணுவத்தை திட்டி பீரங்கி என்னை நோக்கி இருக்க மீண்டும் பனியன், அண்டர்வேர் தெரிய ஆரம்பிக்க... கோபம் வரவில்லை அதற்கு பதில் திடீர்னு ஞாநோதயம் வந்தது.
உடனே எல்லா பதிவுகளையும் XML இம்போர்ட் எஸ்போர்ட் கொண்டு கூகிள் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.
நீதி: பதிவுகளை வேர்ட் பிரஸில் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நான் வேட்பிரஸில் ரசிகர் அதில் தான் எழுதுவேன் என்று அடம்பிடிப்பவர்கள், 'கூகிள் ஆண்டவர் துணை' என்று போட்டுவிட்டு எழுதுங்கள்.
( இன்று காலை ET ல் வந்த படம், கொஞ்சம் எடிட் செய்து உபயோகப்படுத்தியிருக்கேன் )
Labels:
அனுபவம்,
வலைப்பதிவு
Monday, November 28, 2011
பேட்மேன் பேல்பூரி
பள்ளிக்கூடத்திற்கு வெளியே முன்பு மாதிரி இப்போது தின்பண்டங்கள் எதுவும் விற்பதில்லை. ஹைஜீன் என்று நம் புராக்டர் அண்ட் கேம்பில் குழந்தைகளுக்கு வெளியே எதையும் வாங்கித் தர பயப்படுகிறோம். நான் படிக்கும்காலத்தில் ஸாண்ட்விச், பீட்சா, பர்கர் வகையறாக்களைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.ஆறாம் கிளாஸ் படிக்கும்போது ‘பாக்கெட் மணி’ 25பைசாவுக்கு, இரண்டு தேன் மிட்டாய்; கூட மூன்று ஜவ்வு மிட்டாய் கிடைக்கும். தேன் மிட்டாயில் தேன் இருக்காது. ஆரஞ்ச் கலரில் (மைதா மாவு என்று நினைக்கிறேன்.) உருண்டை; உள்ளே உடைத்தால் சக்கரைப் பாகு இரண்டு சொட்டு இருக்கும்; அது தான் தேன். அந்த டேஸ்ட் அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்நாக்ஸ் என்பதெல்லாம் தேடினாலும் கிடைக்காது. அதை விற்கும் பாட்டியை என்னால் மறக்க முடியாது.
Wednesday, July 27, 2011
துப்பாக்கி நண்பர்கள்
தேசிகன்’ என்ற என் பெயர் கடைசியில் ‘Gun’ இருப்பதாலோ என்னவோ எனக்கும் துப்பாக்கிக்கும் கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது நான் கண்டெடுத்த துப்பாக்கி பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன்.
திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் புதருக்கு இன்னொரு பெயர் ‘காடு’. நிறைய மரம், செடி கொடிகள் என்று வருடம் முழுக்க பச்சையாகத்தான் இருக்கும். சில சமயம் நரிக்குறவர்கள் வந்து வலை விரித்துக் கிளி பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பொழுதுபோகாத சமயம் காட்டை சும்மா சுற்றுவது எங்களுக்குப் பொழுதுபோக்கு. காட்டுக்கு நடுவில் ஒரு பழைய காலத்து நீச்சல்குளம் போல் ஒரு பெரிய தொட்டி இருக்கும்; நிறைய படிகளுடன். உள்ளே ஒரு பாம்புப் புத்து இருப்பதால், இறங்க மாட்டோம். அதற்கு மேல் ஒரேயோர் உதய மரம் மட்டும் செப்டம்பர் மாதம் இலைகளை எல்லாம் இழந்து நிர்வாணமாக நிற்கும். தொட்டி முழுக்க அதன் இலைகள்தான்.
திருச்சியில் எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புரத்தில் இருக்கும் புதருக்கு இன்னொரு பெயர் ‘காடு’. நிறைய மரம், செடி கொடிகள் என்று வருடம் முழுக்க பச்சையாகத்தான் இருக்கும். சில சமயம் நரிக்குறவர்கள் வந்து வலை விரித்துக் கிளி பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன். பொழுதுபோகாத சமயம் காட்டை சும்மா சுற்றுவது எங்களுக்குப் பொழுதுபோக்கு. காட்டுக்கு நடுவில் ஒரு பழைய காலத்து நீச்சல்குளம் போல் ஒரு பெரிய தொட்டி இருக்கும்; நிறைய படிகளுடன். உள்ளே ஒரு பாம்புப் புத்து இருப்பதால், இறங்க மாட்டோம். அதற்கு மேல் ஒரேயோர் உதய மரம் மட்டும் செப்டம்பர் மாதம் இலைகளை எல்லாம் இழந்து நிர்வாணமாக நிற்கும். தொட்டி முழுக்க அதன் இலைகள்தான்.
Subscribe to:
Posts (Atom)





