Saturday, March 31, 2012

நம் செயல்களுக்குப் பொறுப்பு யார்? - எஸ்.ராஜகோபாலன்.

சுஜாதாவின் தம்பி திரு.எஸ்.ராஜகோபால் சுஜாதா பற்றிய தன் நினைவுகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறார்.

சென்னையில் சென்ற டிசம்பர் 6-ஆம் தேதி, ராகேஷ் (32) என்னும் மாணவரை வர்கீஸ் (26) என்னும் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, "கடவுள்தான் என்னைக் கொலை செய்யச் சொன்னார்; ஏன் என்று கடவுளிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று போலீஸிடம் கூறினார்
(தினமலர் 7-12-2011)

நாம் எல்லோரும் இப்படிச் சொல்பவரை மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லுவிடுவோம். ஆனால் அடிப்படைக் கேள்வியான, 'நாம் செய்யும் காரியங்களுக்கு நாமே பொறுப்பா அல்லது எல்லோரையும் இயக்கும் கடவுள் பொறுப்பா?' என்னும் தத்துவ ஞானக் கேள்விக்கு விடை காண்பதில் சிக்கல் உள்ளது.

என் அண்ணன் ரங்கராஜனும் (சுஜாதா) நானும் ஆறு வருடங்களுக்கு முன் பிரம்ம சூத்திரங்களை எளிமையான தமிழில் மொழிபெயர்க்கும்போது இதுபற்றித் தீவிரமாக சிந்தித்தோம்; படித்தோம்.

பிரம்ம சூத்திரம் (2.1.34) 'பாரபட்சமும் கருணையின்மையும் பிரம்மத்திற்கு இல்லை, நம் முதல் முயற்சியை எதிர்பார்த்து இருப்பதால்' என்று கூறும்-


'வைஷம்யே நைர்குண்யே ந, ஸா பேக்ஷத்வாத் ததா ஹி தர்சயதி'


எனும் சூத்திரத்திற்கு விளக்கம் அளிக்கும்போது, 'நாம் செய்யும் செயல்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு' எனும் திடமான முடிவுக்கு வந்தோம். அந்த இடத்தில் நாங்கள் எழுதியதைக் கீழே தருகிறேன்.


"இது முக்கியமான சூத்திரம். படைப்பு பிரம்மத்தின் விளையாட்டு என்று சொன்னால், அதில் ஏற்றதாழ்வுகள், ஏழை-பணக்காரன், சுக துக்கம் ஏன்? பிரம்மம் நல்ல குணங்களின் இருப்பிடம் என்றால், நம் எல்லாச் செயல்களுக்கும் பிரம்மம் முழுப் பொறுப்பு என்றால், அதற்குப் பாரபட்சமும் கருணையின்மையும் குணங்களாகி விடும். அது தவறு என்கிறது இந்தச் சூத்திரம். இந்தப் பரமாத்மா ஜீவர்களைப் 'படைக்கும்' போது, அவர்களின் பாப புண்யங்களைப் பார்த்து அதற்கேற்ப படைக்கிறது. பிரம்மம் நம் முயற்சியை எதிர்பார்த்தே நம்மைச் செயல்படுத்துகிறது.

முதல் முயற்சி அல்லது பிரதம பிரயத்தனம்- நாம் நல்லதோ தீயதோ செய்ய எடுத்துவைக்கும் முதல் முயற்சியானது நம்மை அந்த முதல் அடியை எடுக்க வைக்கிறது. இதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது (Free Will)." -- (பிரம்ம சூத்திரம் ஓர் எளிய அறிமுகம்- பக்கம் 85.)


சங்கரர் இந்தச் சூத்திரத்தை விளக்கும்போது பிரம்மத்தை மழையோடு ஒப்பிடுகிறார். "விதையிலிருந்து செடி வெளிவருவதற்குக் காரணம் மழை ஆனாலும் எந்தவிதமான செடி (மா, பலா, வேம்பு..) வெளிவருகிறது என்பதை விதையில் புதைந்திருக்கும் குணங்களே தீர்மானிக்கின்றன; அதற்கு மழை பொறுப்பில்லை" என்கிறார்.

இதே போல கடவுளின் அருள் சிலர்மேல் காரணமின்றி (நிர்ஹேதுகமாக) விழுகிறது என்ற வைணவ நம்பிக்கை பற்றி விவாதித்தோம். என் அண்ணன், இந்த நம்பிக்கை, கடவுளை நம் செயல்களில் (ஆகையால் நம்மேல்) விருப்பு வெறுப்பற்றவராக (உதாசீனராக) ஆக்கிவிடுகிறது என்றார்.

நான் "கடவுளை, காரண காரியங்களுக்குக் கட்டுப்படாதவராக, கேட்பாரற்ற சுதந்திரராக வேதங்கள் வர்ணிக்கும்போது, அவருடைய கிருபையையும் நிர்ஹேதுகமாகவே கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது" என்றேன்.

தீவிர சிந்தனைக்குப் பிறகு, "அப்படித்தான் கொள்ளவேண்டும், இல்லாவிடில் முரண்பாடு ஏற்படுகிறது. சர்வ சுதந்திரத்வமும் காரணத்தோடு கிருபை செய்யவேண்டிய கட்டாயமும் oxymoronic status. ஆனால் கடவுள் எதிர்மறைகளின் கூட்டம். கருப்பும் வெளுப்பும் அவரே. ஆகவே அவருடைய அருளின் (கிருமையின்) நிலைப்பாடு, என்றும் விடைகாண முடியாத புதிரானது" என்றார்.

நாங்கள் இதுபற்றி விவாதித்த அந்த நாள்கள் இன்னும் என்னை மகிழ வைக்கின்றன. அவரை அண்ணனாகப் பெற்றது நான் செய்த புண்ணிய பலன்- அதுவும் கடவுளின் நிர்ஹேதுகக் கிருபையே!

ரங்கராஜன், ஒரு 'வகைப்படுத்த' முடியாத எழுத்தாளர். சிறுகதை, நாவல், கட்டுரை, விஞ்ஞானம், பொது அறிவு, புதுக்கவிதை, பழங்கவிதை, திரைக்கதை போன்ற எல்லா வடிவத்திலும் ஆர்வமுள்ள எழுத்தாளர். கடவுள், ஆன்மிகம் இவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. கஷ்டமான சிந்தனைத் தொடர்களைப் புரிந்துகொண்டு, அன்றாடம் பழகும் தமிழில் எளிமைப்படுத்தி எழுதுவது அவருக்குக் கைவந்த கலை.

ரங்கராஜன் 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள், தனது 73-ஆவது வயதில் மறைந்தார். அவர் எழுதியவை மறையாது.

Monday, February 27, 2012

சுஜாதாவிற்கு வந்த ஃபோன் கால்

13.4.2007 அன்று எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசியதிலிருந்து சில பகுதிகள்... (ஒலிப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து)

"....There will be a turning point ... கண்ட்ரோலராக இருந்த போது எனக்கு பல்ராம் என்ற ஒருவர் 'ஏம்பா இங்கே உட்கார்ந்து மன்றாடிக்கொண்டு இருக்கே.. இந்த இன்ஞ்னியரிங் சர்விஸ் எக்ஸாம் வந்திருக்கு. அதை ஏன் நீ எழுத கூடாது.. இன்று கூட அந்த விளம்பரம் வந்திருக்கு பார்த்தியா? என்றார். நான் ஹிந்துவில் ஸ்போர்ட்ஸ் தவிர வேற ஒன்றும் பார்க்கறதில்லை என்றேன். விளம்பரம் வந்திருக்கு கடைசி தேதி இன்று தான் என்று நினைக்கிறேன்... நீ இன்ஞ்சினியரிங் படிச்சிருக்கே எதுக்கு டிராஃபிக் கண்டரோல் பண்ணிக்கொண்டு இருக்கே என்றார்.

I was sort of drifting around.. not doing much.. and the job was a little boring... this was just before marriage. it was a casual phone call. அதற்கு அப்பறம் UPSC விளம்பரம் வாங்கிக்கொண்டு இன்ஞ்சினியரிங் சர்விஸிஸ் தேர்வுக்கு அப்ளை செய்தேன். ஆகஸ்ட் 1960 என்று நினைக்கிறேன். அது தான் முதல் எலக்டரானிக்ஸில் இன்ஞ்சியரிங் சர்வீஸ் எக்ஸாம் அதற்கு முன்னாடி இன்ஞ்னியரிங் சர்வீஸ் எக்ஸாம் General தான்.

இந்த(எலக்டரானிக்ஸ்) எக்ஸாம் ஆல் இந்தியா ரேடியோ, சிவில் ஏவியேஷன் போன்றவைக்கு விண்ணப்பிக்கலாம். எக்ஸாம் எழுதுவதற்குத் திரும்ப டெக்னிகல் புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். யுனிவர்சிட்டி லைப்பரியில்... பிறகு ஹைதராபாத் டிரான்ஸ்ஃபர் ஆனேன். அங்கே இருக்கும் போது ரிசல்ட் வந்து... ஒரு வருஷம் கழித்து அப்பாயின்மெண்ட் கிடைத்தது - டெக்னிகல் ஆபிஸர் சிவில் ஏவியேஷனில். அங்கே தான் என் Career முழுமையாக மாறிவிட்டது. டெக்னிகல் ஆபிஸராக இருந்ததால் நான் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆனேன். Technology content in my job was much much higher. I had to install navigation equipment. அந்த சமயம்(70'ல்) பாரத் எலக்டரானிக்ஸ் விளம்பரம் வந்தது.. அங்கே போனேன். அங்கேயும் முழுவதும் டெக்னிகல் சமாச்சாரம். Microprocessor... R&D instumention... voting machine.. இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் இவை எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது ஒரு ஃபோன் காலினால்!.

நான் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன். அந்த பல்ராம் என்னை கூப்பிடாமல் இருந்திருந்தால் ... அதுவும் விண்ணபிக்கக் கடைசி நாள் அது... Opportunities in life arrive unwittingly... அதாவது அறிவிக்காமல் வருகிறது.. ஏதோ ஒரு விதத்தில் இதை ஒரு தெய்வாதீனம் என்று கூட சொல்லலாம். வாழ்க்கையில் திரும்பிப் பார்க்கும் போது தான் உங்களுக்கு இது புரிகிறது. அந்த சமயத்தில் புரியாது. சாதாரண நிகழ்வு போல இருக்கும். . இதைப் பற்றி எழுதியிருக்கேனா என்று தெரியவில்லை...... அதை நீங்களே எழுதிவிடுங்கள்.. Opportunity எப்போது வரும் என்று நமக்கு தெரியாது. எனக்கு மட்டும் இல்லை....நிறைய பேருடைய வாழ்க்கையில் இந்த மாதிரி நடந்திருக்கும்.... உங்க வாழ்க்கையில்... கூட யோசித்து பார்த்தால் ஏதாவது இந்த மாதிரி நடந்திருக்கும்.

போன வருட பதிவு: ஜாகரண்ட பூக்கள்

Sunday, January 1, 2012

நம்பி இருந்த வீடு


பயணம் முடிந்து, நினைவுகள் வாடாமல் இருக்கும்போதே அதைப் பற்றி எழுதிவிடுவது நல்லது. சில சமயம் முடிவதில்லை. சமீபத்தில் எதையோ தேடும் போது, 2009 டிசம்பர் 27 காலை சுமார் 10 மணிக்குமேல் நான் திருக்கோட்டியூர் சென்றதற்கு அத்தாட்சியாக நான்கு ரூபாய் திருப்பத்தூர் பேருந்து சீட்டு கிடைத்தது.  திருக்கோட்டியூர் பயணத்தை அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

Wednesday, December 14, 2011

போராட்டமே வாழ்க்கை


எங்கள் வீட்டு வாசலில் இருக்கும் சிகப்பு நிற கிளோட்டன் செடியின் நுனிக்குருத்தை சில வாரங்களுக்கு முன் குரங்கு ஒன்று வந்து பிய்த்துப் போட்டது. இத்தனைக்கும் எங்கள் வீடு 15-ஆவது மாடியில் இருக்கிறது. செடியில் குருத்து என்பது மிக முக்கியமானது. சில செடிகளுக்கு நுனிக்குருத்து மிக முக்கியம். தேங்காய், பனை போன்றவற்றில் நுனிக்குருத்தை வெட்டிவிட்டால் செடி வளராது.

முளைக்கருவிலிருந்து (embryo) புறப்படும் இந்த நுனிக்குருத்து செடிக்கு மிக இன்றியமையாதது. ஆங்லத்தில் Terminal Bud என்பார்கள். செடி எப்படி வளரவேண்டும் எங்கே இலைவிட வேண்டும் என்ற எல்லாமே அங்கேதான் இருக்கிறது. 100 வருடம் வாழ்ந்துகொண்டு இருக்கும் மரத்தையும், மண்ணிலிருந்து உலகத்தை எட்டிபார்க்கும் சின்ன செடியையும் பெரிதாக வளரவைப்பது இந்த நுனிக்குருத்துதான்.

செடிகளில் குறிப்பிட்ட அளவில் கணுக்களைக் காணலாம் (axil). செடிகளில் தோன்றும் கணு, செடி வளர்வதற்கு ஏற்ற சக்தியை அங்கே சேகரித்து வைக்கிறது என்று நினைக்கிறேன். வேர்களிலிருந்து வளரும் கீழ்நோக்கி நீளும் கிளைகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முளைக்கும். ஆனால் செடிகளில் மேல்வளரும் கிளைகள் இந்தக் கணுக்களிலிருந்துதான் முளைக்கும். வயலும் வாழ்வும் போன்ற நிகழ்ச்சியை வேறு சேனலுக்கு மாற்றாமல் கேட்டிருந்தால் பூச்சியினால் நுனிக்குருத்து தாக்கப்பட்ட செடிகள் இறந்து போவதையும் அதை எப்படி தடுப்பது என்பதையும் கேட்டிருக்கலாம்.

Tuesday, December 13, 2011

வீடு வாங்கிய கதை


கடைசிக்காலம் வரை என் அப்பா வாடகை வீட்டில் இருந்தாலோ என்னவோ எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.

திருமணம் ஆன பிறகு “மாப்பிள்ளை, எப்போது குழந்தை?” என்ற கேள்விக்கு விடைகிடைத்தபின்பு வீட்டுக்கு வருபவர்கள் “எப்போது சொந்த வீடு?” கேள்விக்கு மாறிவிட்டார்கள்.

“வேளச்சேரில என் ஃப்ரெண்டோட ஃபிளாட் ஒண்ணு ஒருக்கு, மழை வந்தால் அந்த வீட்டைச் சுத்தி மட்டும் தண்ணி வராது”

Friday, December 2, 2011

மல்லையா மருத்துவமனையின் முரண்

ஷூ ஃபிளவர் என்ற செம்பருத்தியை ஷூவில் தேய்த்தால் பளபளவென்று ஆகும் என்று சின்ன வயதில் நம்பி தேய்த்திருக்கிறேன். அதில் உள்ள ஈரத்துக்கு கொஞ்சம் நேரம் ஷூ பளபளக்கும். மாமியார் வீட்டில், முடிகொட்டாமல் இருக்க இந்தப் பூவை வெய்யிலில் காய வைத்து சீயக்காயுடன் அரைக்க உபயோகப்படுத்துவார்கள். ஒரு சமயம் இந்தப் பூவைச் சாப்பிட்டு பார்த்திருக்கிறேன்; கொழகொழவென்று இருக்கும். ஆர்கானிக் டீ செய்கிறார்கள். சாமிக்குப் போடுகிறார்கள். தலையில் மட்டும் யாரும் வைத்துக்கொள்ளுவதில்லை!.

செம்பருத்தி, சிவப்பு நிறத்தில் பார்த்திருக்கிறோம், பெங்களூரில் பல வண்ணங்களில் பூக்கிறது- ஆரஞ்ச், பிங்க், வெள்ளை, மஞ்சள்... ஒரே வண்ணமாகவும், இரண்டு வண்ணமாகக் கலந்தும்கூட இருக்கும். எந்த வண்ணமாக இருந்தாலும் எண்ணி 5 இதழ்கள்தான் இருக்கும். (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு பால்கனி செம்பருத்தி!, பெங்களூருக்கு ஏற்றார் பொல மஞ்சள், சிகப்பு !)

Thursday, December 1, 2011

பனியன் அண்டர்வேருடன்...


 முதலில் கொஞ்சம் பழைய மேட்டர்... 

1995ல் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த மின்னஞ்சல்களை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த மின்னஞ்சல்கள் தான் அதிகம்.

 பின்னர் பிளாகர் வந்த புதிதில் அதற்கு மாறினேன். வலைப்பதிவுக்கு கலர் அடிப்பது, லேயவுட்டை மாற்றுவதை கொஞ்சம் நாள் செய்துக்கொண்டு இருந்தேன். புது மனைவிக்கு அழகு பார்ப்பது அலுத்து போன பிறகு கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன். தமிழ்மணம் வந்த சமயம், அப்போது பிரபு ராமநாதன் எனக்கு அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி என் பேரில் domain வாங்கி தந்தார். காசியின் உதவிக்கொண்டு Blogcms நிறுவினேன். அடுத்த புது மனைவிக்கு அழகு பார்த்த பின்னர், டிவி ரிமோட்டில் அடுத்த சானலை மாற்றுவது போல Wordpressக்கு மாறினேன்.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது. நானும் எழுதுவதை சில மாதங்களக நிறுத்தியிருந்தேன். போன வாரம், எழுத வருகிறதா என்று பார்க்க ஒரு சின்ன கட்டுரை எழுதினேன். வலைப்பதிவில் அதை பிரசுரித்த சில மணி நேரத்தில் என்னுடைய www.desikan.com தளம் 'ஹாக்' செய்யப்பட்டது. "பேசாதே!" என்ற சைகையுடன் ஒரு பாவபட்ட பெண் விரலை வாயில் வைத்துக்கொண்டு போஸ் கொடுக்க என்னுடைய தளத்தை நிர்வகிக்கும் கம்பெனியுடன் பேசிய போது "இதோ பத்து நிமுஷம் சார்" என்று முந்தா நாள் எடுத்த நகலை கொண்டு என் வலைத்தளத்தை மீட்டார்கள். ஆனால் என் எழுத்துக்கு பதிலாக என்னுடைய வலைத்தளம் உள்ளே இருக்கும்(டைரக்டரி லிஸ்டிங்) பனியன் அண்டர்வேர் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்தது.

 நண்பர் ரவியை(Ravidreams) கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன். உடனே அவருடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு தகவல் களஞ்சியத்தில்( Database) ஏதோ பிரச்சனை இருக்கலாம் என்று சரி செய்தார். செகியூரிட்டி பேச் எல்லாம் போட்டிருக்கேன், இனி பிரச்சனை இருக்காது நீங்க தொடந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வர இரண்டு நாட்கள் ஆனது.

 நேற்று ராத்திரி ஒரு நகல் எடுத்து வைக்கலாம் என்று திரும்ப என் வலைத்தளத்துக்கு சென்ற போது மெலிதான இசை கேட்டது, கூடவே காஷ்மீரில் என்ன நடக்கிறது தெரியுமா ? என்று இந்திய ராணுவத்தை திட்டி பீரங்கி என்னை நோக்கி இருக்க மீண்டும் பனியன், அண்டர்வேர் தெரிய ஆரம்பிக்க... கோபம் வரவில்லை அதற்கு பதில் திடீர்னு ஞாநோதயம் வந்தது.

 உடனே எல்லா பதிவுகளையும் XML இம்போர்ட் எஸ்போர்ட் கொண்டு கூகிள் ஆண்டவரிடம் ஒப்படைத்துவிட்டேன்.

நீதி: பதிவுகளை வேர்ட் பிரஸில் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.  நான் வேட்பிரஸில் ரசிகர் அதில் தான் எழுதுவேன் என்று அடம்பிடிப்பவர்கள், 'கூகிள் ஆண்டவர் துணை' என்று போட்டுவிட்டு எழுதுங்கள்.
( இன்று காலை ET ல் வந்த படம், கொஞ்சம் எடிட் செய்து உபயோகப்படுத்தியிருக்கேன் )