Skip to main content

Posts

Showing posts from March, 2018

ஒரு கிரைம் கதை

ஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன் SarvayoniShu Kaunteya MurrtayaH SaMbhavanti YaaH  | Taasaam Brahma Mahat YoniH Aham BeejapradaH Pitaa   || Whatever forms (of beings) are produced in any wombs, O Arjuna, the Prakriti ( i.e. the matterat large) is their great womb (mother) and I am the sowing father (to all beings) Shrimad Bhagawad Gita  Chapter 14 Shloka 4 அன்று சீக்கிரம் விழிப்பு வந்திருக்காவிட்டால் அந்த அபூர்வ வழக்கில் ஈடுபட்டிருக்க மாட்டேன். வழக்கு என்றவுடன் நான் ஏதோ வக்கீலோ போலீஸோ அல்லது குற்றவாளியோ என்று நினைக்க வேண்டாம். சென்னையில் சாதாரண கம்ப்யூட்டர் இன்ஜினியர். மென்பொருளாளர்களைப் பற்றிய பிம்பம் ஒன்று ஏற்கெனவே பல எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்னை நானே விவரித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை. வழக்கமாக ஏழரை மணிக்கு விழிப்பு வரும். முதல்நாள் நிறைய நேரம் தொலைக்காட்சியில் விவாதத்தைப் பார்த்ததால் சரியான தூக்கம் இல்லை. சீக்கிரம் முழிப்பு வந்து, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பைக்கை நிறுத்திவிட்டு, பிளாட்பாரத்தில் மயில் தோகை போல அடுக்கப்