Skip to main content

Posts

Showing posts from April, 2010

கும்பகர்ணனுக்கு பிடித்த மரம்

மேலே பார்க்கும் இந்த பூவை போன வாரம் என் புதிய கேமராவில் கவர்ந்தேன். பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களிலிருந்து இந்த பூ மீது எனக்கு ஒரு வித காதல் என்று சொல்லலாம். கிரவுண்ட் சுற்றி இந்த மரங்கள் குடை போல வளந்திருக்கும். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் மரம் முழுக்க சா'மரம்'மாக பூத்திருக்கும். பள்ளியில் இரண்டு வகுப்புக்கு நடுவில் பத்து நிமிடம் பிரேக் விடும் போது ஓடி சென்று இந்த மரத்திலிரிந்து சியக்காய் போல விழுந்திருக்கும் இதன் காய்களை பொறுக்கி டிராயர் பாக்கெட்டில் அடைத்துக்கொண்டு வருவோம். தட்டையாக கருப்பாக இருக்கும் இந்த காய்கள் ஒரு வித தித்திப்பு வாசனையுடன் (அதிமதுரம் மாதிரி வாசனை என்பார்கள்) பிசுபிசுப்பாக இருக்கும். ஸ்கூல் விட்டவுடன் பொறுக்கிய காய்களை கல்லை கொண்டு நசுக்கி பொடியாக்கி கார்த்திகை பொரி உருண்டை போல உருட்டினால் கார்க் பந்து போல இருக்கும். நிஜ கிரிக்கெட் பந்தின் தையலை பிரித்தால் சணல் கயிறால் சுற்றப்பட்ட சின்னதாக ஒரு கார்க் பந்து இருக்கும். அந்த கார்க் பந்தை இந்த காய்க்கொண்டு தான் செய்கிறார்கள் என்று புரளியை யாரோ கிளப்பிவிட, நாங்கள் இந்த கார்க் பந்து தயாரிப்பில் முழு வீச்சுடன் ஈடுபட

மேல்கோட்டையில் ஒரு நாள்

மேல்கோட்டைக்குப் பல முறை சென்றிருந்தாலும், கடந்த மாதம் 25ஆம் தேதி அங்கு பிரசித்திபெற்ற ‘வைரமுடி’ உத்ஸவத்தைக் கண்டுகளித்தது மறக்க முடியாத அனுபவம். “எக்கசக்கமா கூட்டம் இருக்கும், காரை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திவிடுவார்கள்” போன்ற எச்சரிக்கைகளைக் கேட்டுவிட்டு பெங்களூர் மைசூர் ரோட்டில், ராம் நகரத்தில் இருக்கும் ‘காமத் லோகருச்சி’ ஹோட்டலை அடைந்தபோது காலை எட்டரை மணி. தென்னை ஓலை இட்லியை சாப்பிட்டுவிட்டு மேல்கோட்டை சென்றபோது மதியம் பன்னிரண்டு மணி. மேல்கோட்டை மண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரம் தாலுக்காவில் இருக்கிறது. பெங்களூர் மைசூர் நெடுஞ்சாலையில் மாண்டயாவிலிரிந்து சுமார் 25 கிமீ தூரத்தில், 150 மீட்டர் உயரத்தில் உள்ள தட்டையான பகுதிதான் மேல்கோட்டை என்ற ஊர். 1991ஆம் கணக்கின் படி இங்கே இருப்பவர்களின் எண்ணிக்கை 2685. தற்போது இதைவிட 100 பேர் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். திருநாராயணபுரம், யாதவகிரி என்ற பெயர்கள் இருந்தாலும் மேலே இருக்கும் கோட்டை என்ற பொருள்பட மேல்கோட்டை என்ற பெயரே பிரசித்தம். உடல்நலத்துக்கு உகந்த இடமாகவும், வேளாண்மை நிலங்கள், நீர் நிலைகள் சூழ்ந்த, ஃபேண்டஸி கதைகளில் வர

கூடு விட்டு கூடு

 கூடு விட்டு கூடு என்ற தலைப்பில் கூடு இணையதளத்துக்கு எழுத ஆரம்பித்திருக்கிறேன். இந்த பகுதியில் நான் பார்த்து, ரசித்த காட்சிகள், படித்து ரசித்த சிறுகதை, கட்டுரை, புத்தகங்கள். தினசரி சந்திக்கும் மக்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கேன். இந்த தொடர் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்..

பில்லா

Be aware of God Beware of Dog சித்தார்த் ஜான்சன் வீட்டு வாசல் கேட்டில் இப்படி எழுதியிருக்கும். நாய்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. காலை தூக்கிக்கொண்டு கம்பத்தின் மீது ‘உச்சா’ போவதைப் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தான். நைட் ஷோ பார்த்துவிட்டு வரும்போது பின்தொடர்ந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் நடப்பது போல பாவனை செய்வேன். ‘குரைக்கிற நாய் கடிக்காது’ என்பார்கள். கடிக்கும் போது நாயால் எப்படிக் குரைக்க முடியும்?  அதனால் அப்படிச் சொல்லியிருப்பார்கள். கடிக்கும் என்ற வார்த்தையை “கடி+ க்க் + உம்” என்றும் எழுதலாம். ஆங்கில இலக்கணத்தில் இதை ஸ்டிராங் வெர்ப்(Strong verb) என்கிறார்கள். தமிழில் வல்வினையாம். சொற்களுக்கு நடுவில் “க்க்” வந்து வார்த்தையை வல்வினையாக்குகிறதாம். இப்பொழுது நீங்களே ‘அக்’கென்று கடித்துப் பாருங்கள்; ‘க்க்’ சத்தம் வரும். (உடனே ‘அக் அக்’னு கடிச்சுப் பார்க்காதீங்க.) கடைசியில் ‘உம்’ விகுதியில் முடிவதால் எதிர்காலமாகிறது. ‘உம்’ விகுதி பற்றி நாய்க்குத் தெரியாத காரணத்தால் பில்லா வந்த அன்றே என்னைக் கடித்தது. வால்வினையால் வந்த வல்வினை. என்ன பில்லாவா? என்று கேட்கநினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக