Skip to main content

Posts

Showing posts from March, 2009

பாச்சை உருண்டை

பாச்சை உருண்டையில் இரண்டு வகை இருக்கிறது. வெங்கட்நாராயணா சிக்னலில் தோளின் குறுக்கே குழந்தையை மாட்டிக்கொண்டு இவற்றை விற்பதைப் பார்த்திருப்பீர்கள். அம்மினிக் கொழுக்கட்டை மாதிரி சின்னதாக இருக்கும். பாச்சை உருண்டை என்று கேட்டால் நகரக் கடைக்கார்களுக்குத் தெரியாது. ’நாப்தலின் பால்ஸ்’ என்றால் எடுத்துக்கொடுப்பார்கள். நாப்தலின் என்ற வேதிப்பொருள் இதில் இருப்பதால் இந்தப் பெயர். பூ, பழ வாசனையுடன் நம் வீட்டு பாத்ரூமிலும், பீரோவிலும் இருப்பது இன்னொரு வகை. வாசனைக்குக் காரணம் Paradichlorobenzene என்ற பொருள். முகர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும், ரொம்ப முகர்ந்தால் தலைவலி வரும்.  நாப்தலின் பீரோவில் வைத்தால் கொஞ்ச நாளில் கற்பூரம் போலக் கரைந்து போகும் . திடப் பொருளாக இருக்கும் நாப்தலின் வாயுவாக மாறுகிறது என்று சின்ன வயதில் படித்திருக்கிறேன். இதிலிருந்து வெளிவரும் விஷ வாயு அல்லது வாசனை கலந்த விஷ வாயுதான் சின்னச் சின்ன ஜீவன்களை சத்தம் போடாமல் சாகடிக்கிறது. நாம் உட்கொண்டால் வயிற்றைப் பிரட்டி வாந்தி வருவது போல இருக்கும். வாந்தி வராதவர்களுக்கு பேதி, மூத்திரத்தில் ரத்தம் வரும். போன வாரம் டிவியில் 'ஹலோ டா

சொர்க்கம், நரகம் - இடைவெளி 250km

பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் இருக்கிறது. பத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லியிருக்கிறது. பண்டரீபுரம் பற்றிய புராணக் கதை இப்படிப் போகிறது... புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரை போகவேண்டும் என்ற ஆசையோடு புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு இடையில் யாத்திரை போய்க்கொண்டிருந்தவர்கள் சந்தரபாகா (பீமா நதி என்றும் அழைப்பர்) நதிக்கரைக்கு வருகிறார்கள். அங்கே காட்டில் உள்ள ஒரு மகரிஷி புண்டரீகனைப் பார்த்து, “உன் தாய் தந்தையரை இந்த வயதான காலத்தில் (யாத்திரைக்கு) கஷ்டப்படுத்துவது தர்மம் ஆகாது. தாய் தந்தையரை நல்லபடியாக வைத்து பூஜித்தாலே சர்வ தீர்த்தயாத்திரைக்குச் சமம்" என்று உபதேசம் செய்தார். புண்டரீகனும் சந்தரபாகா நதிக்கரையிலேயே ஒரு குடிசையை அமைத்துக்கொண்டு தாய் தந்தையருக்கு பணிவிடை செய்துகொண்டு காலத்தைக் கழிக்கிறான். புண்டரீகனின் பித்ருபக்தியை நாரதர் மூலமாக அறிந்த கிருஷ்ணன் துவாரகையிலிருந்து ருக்மணியுடன் புண்டரீகனைப் பார்ப்பதற்கு வருகிறார். இவர்க

தொட்டமளூர்

[%image(20090302-brindavanaKrish.jpg|107|143|Brindavana Kannan)%] ஹைவேஸின் அதிவேகப் பயணத்தில் உங்களுக்குப் பின்னால் வரும் காரின் பிரேக் பெடலுக்கு அடியில் வாட்டர் பாட்டில் மாட்டிக்கொண்டால் என்ன ஆகும்? போன வருட இறுதியில் வந்த ஒரு சாதாரண சனிக்கிழமை காலை.  டிவியில் ஏதோ அசட்டு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்க, போரடிப்பதை உணர்ந்து திடீர் என்று ஸ்ரீரங்கப்பட்டினம் சென்று வரலாம் என்று முடிவுசெய்து, தயிர்சாதம், தண்ணீர், குழந்தைகள் என்று எல்லாவற்றையும் அள்ளிகொண்டு கிளம்பும் போதே மணி பதினொன்று. [%image(20090302-DoddamallurGopuram.jpg|133|200|Doddamallur Gopuram)%] ஸ்கூல் எக்ஸ்கர்ஷனில் ஸ்ரீரங்கப்பட்டினத்தைப் பலர் பார்த்திருப்பீர்கள்; அதனால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை. சொல்லப்போவது தொட்டமளூர் பற்றி. பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் சென்னப்பட்டினத்தைத் தாண்டி சில மைல் தொலைவில் இருக்கிறது தொட்டமளூர். ராஜேந்திர சிம்ம சோழ மன்னன் இக்கோயிலைக் கட்டியதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. ராமானுஜர் காலம் அல்லது அதற்கு முன்பே இந்தக் கோயில் இருந்திருக்கலாம் என்றும் சொல்லுகிறார்கள். கோயிலைப