Skip to main content

Posts

Showing posts from April, 2007

ராமானுஜலு

ஸ்ரீஉடையவர் சன்னதி - ஓவியம் தேசிகன் சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துவிட்டு திரும்பியதும், சித்திரை மாதம், ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருந்தேன். ராஜகோபுரத்தைச் சுற்றியுள்ள கடைகள், மாடுகள், நெட்டிலிங்க இலைமேல் வைத்துக் கொய்யா பழம் விற்கும் கிழவி, மத்தியான வேகாத வெயிலில் சமயபுரம் பஸ்ஸிலிருந்து இறங்கும் சந்தனம் தடவிய மொட்டைத் தலை 'கோவிந்தா'க் கூட்டம் என்று எதுவுமே மாறவில்லை. 'மைசூர் போண்டா ரெடி!'யைக் கடந்து சென்றால், 'ரங்கா ரங்கா' கோபுரத்திற்கு முன் 'ரின் சோப் உபயோகியுங்கள்!' பனியன் போட்டுக் கொண்டு ஒருவர் பரோட்டா மாவுடன் மல்யுத்தம் செய்து கொண்டுடிருந்தார். அவரிடம் அடிவாங்காமல் கடந்தால், ரெங்கவாசல் கடைகள் ஜொலிப்பில் நூறு வாட் என்றது. ரங்க வாசல் கடையில் தொங்கிய குஞ்சலத்தை பார்த்த ஒரு வெள்ளைக்காரர்.. "வாட்டிஸ் திஸ்?" "குஞ்சலம் சார், ஹெட் டெக்கரேஷன்" "ஹொவ் மச்" "ஃபிப்டீன் ரூப்பீஸ் சார்" பணம் கொடுத்து, குஞ்சலத்தை வாங்கித் தலையில் வைத்துப் பார்த்துக் கொள்பவரைக் கடந்து வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. எதிர

வினோத அனுபவங்கள்

'வியர்டு' என்ற சொல்லுக்கு தமிழில் 'வினோதமான' என்ற வார்த்தை, கொஞ்சம் பக்கத்தில் வருகிறது. உங்களிடம் உள்ள வினோத குணம் பற்றி எழுதுங்கள் என்றார்கள். என்னுடைய கிறுக்குத் தனங்களைப் பற்றி என்னை விட என் மனைவிக்குத் தான் அதிகம் தெரியும். கோடை விடுமுறைக்குச் சென்றிருப்பதால் வந்தவுடன் எழுதச் சொல்லுகிறேன். இந்தப் பதிவில், எனக்கு நடந்த சில வினோத அனுபவங்களைச் சொல்லலாம் என்று இருக்கிறேன். அரை டஜன் முதல் தவணையாக. இன்றைய பயணம் நேற்றைய டிக்கெட் பெங்களூர் வந்த பிறகு வாரா வாரம் சென்னை செல்வது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஒரு வாரம் போகவில்லை என்றால் கூட ரயில்வேயிலிருந்து "ஏன் சார் இந்த வாரம் உடம்பு கிடம்பு சரியில்லையா?" என்று கேட்பார்கள். சுமார் 8 மாதம் முன் நடந்த இந்த அனுபவத்திற்கு என் மாமனாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். பெங்களூர் வந்திருந்த மாமனார் 'மாப்பிளைக்கு எதாவது உபகாரம் செய்யலாம் என்று சென்னை செல்ல மைசூர் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்துகொடுத்தார். மைசூர் எக்ஸ்பிரஸ் பற்றி சில குறிப்புகள் -  'பெங்களூர் சிட்டி' ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ( மெஜஸ்டிக்