Skip to main content

பெண்களூர்-0 2

பெங்களூர் பற்றி எழுதியதும் எனக்கு பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். சிலர் போன் செய்து புளியோதரை சாப்பிட எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்றார்கள். கூப்பிட்டவர்கள் இதுவரை அவர்கள் வீட்டு முகவரியைத் தரவில்லை. என் நீண்ட நாள் நண்பர் கிச்சா என்ற கிருஷ்ணன், அவர் வீட்டு விலாசம் குடுத்து "ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்" என்று ஈ-மெயில் அனுப்பியிருந்தார். அட்ரஸை பார்த்தால் நிஜமாகவே அடுத்த வீட்டுக்காரர். எங்கள் வீட்டு மதில் சுவற்றில் ஒரு எட்டு ஏறி குதித்தால் போதும்!


பலர் "என்ன சார் டிராஃபிக் ஜாம் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே" என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். அவர்கள் இட்ட சாபம் என்று நினைக்கிறேன், போனவாரம் எனக்கு ராத்திரி 9:30 மணிக்கு சென்னை ரயில். ஆட்டோ வில் ஏறும் போது மணி 8:00. நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது மணி 9:20. நடந்து சென்றிருந்தால் 9:00 மணிக்கே போய் சேர்ந்திருக்கலாம்!


அல்சூர், கோரமங்களா போன்ற இடங்களில் நல்ல தமிழ் நாட்டு உணவு கிடைக்கிறது என்று எனக்கு தெரிவித்தவர்களுக்கு என் நன்றிகள். நாம் நலம் விசாரிக்கும் போது "என்ன சார் செளக்கியமா?" என்று கேட்போம். ஆனால் இங்குள்ளவர்கள் காலை என்றால் "திண்டி ஆயித்தா" என்றும், மத்தியானம் என்றால் "ஊட்டா ஆயித்தா".


எம்.ஜி.ரோடில் உள்ள 'ஃபுட் வோர்ல்ட்" வாசலில் "நான் வளர்கிறேன் மம்மி" என்று காம்பிளான் விளம்பரத்தில் வரும் குழந்தை போல் ஒரு சின்ன பெண்(ஆறு அல்லது ஏழு வயசு தான் இருக்கும்) தினமும் சாயந்திரம் ஒரு ரோஜா பூங்கொத்தை வைத்துக்கொண்டு எல்லோரிடமும் ஐந்து ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளுங்கள் என்ற ஓயாமல் கெஞ்சி கொண்டு இருப்பாள். பார்ப்பதற்கு பாவமாக இருக்கும்.


குமார் என்பவர் மல்லேஸ்வரம், பனஷங்கரி, ஜே.பி. நகர் போன்ற இடங்களில் பெருமாள் கோயில்கள் இருப்பதாகக் கூறினார். எங்கள் வீட்டுப் பக்கத்தில் உள்ள ஒரு அம்மன் கோயிலில் காலையில் 'மன்மத ராசா', சாயங்காலம் "சிரிச்சு சிரிச்சு வந்தா, சீனா தானா டோ ய்" போன்ற பாடல்கள் பக்தி பரவசமூட்டுகின்றன.


பெங்களூரில் நாம் அதிகமாக காண்பது சோம்பேறித்தனம் தான்.'Busyபேலாபாத்தை' தவிர!


வீட்டில் டீவி இல்லை, எப்படி தனியாக பொழுது போகிறது என்று சிலர் கேட்கிறார்கள். வேற என்ன? புத்தகங்கள்தான். அப்புறம் சொல்ல மறந்துவிட்டேனே, சோப் தேய்த்து குளிக்கும் போது நிறைய நுரை வருகிறது!



Old Comments from my previous blog.


"பெங்களூரில் நாம் அதிகமாக காண்பது சோம்பேரித்தனம் தான்.'Busyபேலாபாத்தை' தவிர!" -- arumai, desikan!


"ஆனால் இங்குள்ளவர்கள் காலை என்றால் "திண்டி ஆயித்தா" என்றும், மத்தியானம் என்றால் "ஊட்டா ஆயித்தா"." -- ithuvum SUPER! சாப்பிடுவது தான் அவர்களுக்குப் பிரதானம்!!! மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்!!!


என்றென்றும் அன்புடன்
பாலா


By Anonymous, at Thu Oct 14, 06:15:06 PM IST  


Desikan
How can u not mention about those beautiful trees covered with flourascent coloured flowers without a single leaf….


I guess u still haven’t got to know about the innumerable “circles” abound at every intersection all over bangalore : )


That multipurpose cost effective Two Wheeler - The Hero Cycles are a rare see in Bangalore


Laidback lifestyle of localities sounds better than “Somberithanam”… : )… thamizhle translate pannikka vendiyadhu unga poruppu….


Dhavani is a Fancy Dress Costume for Bangalore Girls....


..... Latha.. : )


By Anonymous, at Thu Oct 14, 07:45:52 PM IST  


Hey, Soap Theicha neriya norai varudhu is a good teaser.... cudnt help but giggle at that statement... being a thorough bangalorean, its feels good to read about bangalore thro a non-bangalorean's view point.... ur tamil is superb... keep writing.... :).... Latha...


By Anonymous, at Thu Oct 14, 07:46:11 PM IST  


பெங்களூர் என்பது கர்நாடகா என்ற "சுதந்திர நாட்டின் தலைநகரம்" என்பது மிக முக்கியமான செய்தி. :-(


By மீனாக்ஸ், at Fri Oct 15, 09:56:07 AM IST  


//இங்குள்ளவர்கள் காலை என்றால் "திண்டி ஆயித்தா" என்றும், மத்தியானம் என்றால் "ஊட்டா ஆயித்தா".//
இதை நானும் கவனித்திருக்கிறேன். கன்னடர்கள் மட்டுமில்லாமல், தமிழர்கள் கூட "என்ன ஸார் சாப்பாடு ஆச்சா?" என்றுதான் கேட்டு பார்த்திருக்கிறேன்.


By ROSAVASANTH, at Tue Jan 18, 10:58:28 AM IST  


 

Comments