Skip to main content

Posts

Showing posts from October, 2004

விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா பதில்கள் !

    வாசகர்கள் கேட்ட விஞ்ஞான சிறுகதை கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது. கேள்வி கேட்ட அனைவருக்கும், பதில் அளித்த திரு.சுஜாதாவிற்கும் என் மனமார்ந்த நன்றி. கேள்வி-பதில்களை தொகுக்க உதவிய என் நண்பர் பாலாஜிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. கேள்வி : 1. விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன ? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா ? நீங்கள் எழுதிய 'முடிவு' என்ற சிறுகதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்தியது எந்த அடிப்படையில் என்பதை கொஞ்சம் சிம்பிளாக விளக்குங்களேன் ? "epistolary literary technique"' (different style of writing) ' சார்ந்திருப்பதால் முடிவு ஒரு sci-fi கதை என்கிறீர்களா? பதில்: விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக எனது தொகுதியின் முன்னுரையில் எழுதியுள்ளேன். அதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள். இல்லை net-ல் தேடிப்பாருங்கள். நிறைய விளக்கம் கிடைக்கும். ' முடிவு' என்கிற கதை முழுவதும் நானே எழுதியது. அதன் வடிவமைப்பில் முன்று பேர் எழுதிய கடிதங்கள் என்பதை நம்ப வைக்க செய்த தந்திரங்கள் ஒரு விஞ்ஞானக் கதைக்குரியது. இந்தக் கத

Sujatha Answers SciFi Questions.

விஞ்ஞானக் சிறுகதை கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சுஜாதா நேற்று என் வலைப்பதிவில் திரு.சுஜாதாவின் 'முடிவு' என்ற விஞ்ஞானச் சிறுகதை ஒன்றை வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு, பலர் இது எப்படி விஞ்ஞானச் சிறுகதையாகும் என்று கேட்டு எனக்கு ஈ-மெயில் அனுப்பியுள்ளார்கள். சற்று முன் சுஜாதா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதை பற்றிக் கூறினேன். வாசகர்கள் எழுப்பும் விஞ்ஞானச் சிறுகதை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் தர சம்மதித்துள்ளார். ஆகவே உங்கள் கேள்விகளை சுருக்கமாக என்னுடைய 'Comments' பகுதியில் உள்ளிட்டால், திரு.சுஜாதாவிடமிருந்து பதில் கிடைக்கும். பதில்கள் அடுத்த வாரம் என் வலைப்பதிவில் இடம் பெறும். கேள்விகளை ஈ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி desikann@gmail.com - தேசிகன்

விஞ்ஞான சிறுகதை – முடிவு

  திண்ணையும் மரத்தடியும் சேர்ந்து நடத்தும் விஞ்ஞானச் சிறுகதை போட்டி பற்றி அறிந்திருப்பீர்கள். அறிந்து கொள்ள இங்கே  பார்க்கவும் . போன வாரம் சுஜாதாவிடம் இதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். என் பங்கிற்கு அவருடைய ' முடிவு' என்கிற சிறுகதையை இங்கு தந்திருக்கிறேன். சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதை தொகுப்பில்   விடுப்பட்ட கதை இது! முடிவு     எம்.நடராஜன்,                                             2-7-1982 187, பஜார் தெரு, மோகனூர் 637015 சேலம் ஜில்லா அன்புள்ள குங்குமம் ஆசிரியர் அவர்களூக்கு, உடன் இணைக்கப்பட்டிருக்கும் 'முடிவு' என்கிற விஞ்ஞானச் சிறுகதையை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். படித்து அது குங்குமம் இதழில் பிரசுரத்துக்கு எற்றது எனில் அதை வெளியிட வேண்டுகிறேன். தகுதி இல்லையெனில் திருப்பி அனுப்புவதற்கு போதிய தபால் தலைகளை இணைத்திருக்கிறேன். இங்ஙனம் எம்.நடராஜன் மாடலன் (புனைப்பெயர்)   குங்குமம் வார இதழ்                                         8-7-1982 93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34   அன்புள்ள திரு.நடராஜன் அவர்களுக்கு, உங்கள் ஜூலை 7 தேதியிட்ட கடிதமும் 'முடிவு' என்கி

பெண்களூர்-0 2

பெங்களூர் பற்றி எழுதியதும் எனக்கு பலர் ஈ-மெயில் அனுப்பியிருந்தார்கள். சிலர் போன் செய்து புளியோதரை சாப்பிட எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்றார்கள். கூப்பிட்டவர்கள் இதுவரை அவர்கள் வீட்டு முகவரியைத் தரவில்லை. என் நீண்ட நாள் நண்பர் கிச்சா என்ற கிருஷ்ணன், அவர் வீட்டு விலாசம் குடுத்து "ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்" என்று ஈ-மெயில் அனுப்பியிருந்தார். அட்ரஸை பார்த்தால் நிஜமாகவே அடுத்த வீட்டுக்காரர். எங்கள் வீட்டு மதில் சுவற்றில் ஒரு எட்டு ஏறி குதித்தால் போதும்! பலர் "என்ன சார் டிராஃபிக் ஜாம் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே" என்று வருத்தப்பட்டு எழுதியிருந்தார்கள். அவர்கள் இட்ட சாபம் என்று நினைக்கிறேன், போனவாரம் எனக்கு ராத்திரி 9:30 மணிக்கு சென்னை ரயில். ஆட்டோ வில் ஏறும் போது மணி 8:00. நான் ஸ்டேஷன் வந்து சேர்ந்த போது மணி 9:20. நடந்து சென்றிருந்தால் 9:00 மணிக்கே போய் சேர்ந்திருக்கலாம்! அல்சூர், கோரமங்களா போன்ற இடங்களில் நல்ல தமிழ் நாட்டு உணவு கிடைக்கிறது என்று எனக்கு தெரிவித்தவர்களுக்கு என் நன்றிகள். நாம் நலம் விசாரிக்கும் போது "என்ன சார் செளக்கியமா?" என்று கேட்போம்

பெண்களூர் *

நான் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் இருந்த எனக்கு பெங்களூர் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. 1. பூஜை போட்ட கையோடு சுவற்றில் fluorescent கலரில் சினிமா விளம்பரங்களை பார்க்க முடிவதில்லை. 2. இட்லி தோசைக்கு வெல்லம் கலந்த சாம்பார் தருகிறார்கள்(எம்.ஜி.ரோடில் உள்ள பிருந்தாவன் ஹோட்டல் தவிர). 3. சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் லாப்டாப் வைத்திருக்கிறார்கள். 4. ஆட்டோக்கள் மீட்டர்க்கு மேல் பெரும்பாலும் காசு கேட்பதில்லை. 5. பைரேட்டட் புத்தகங்கள் எங்கும் கிடைக்கிறது. The Da Vinci Code, Mein Kampf by Adolf Hitler, My Life - Clinton தற்போது விற்பனையில். 6. பெங்களூருக்கு போனால் கன்னடம் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தான் பேசுகிறார்கள். தமிழில் பேசினால் புரிந்து கொண்டு பதில் சொல்கிறார்கள் - கொஞ்சம் வேடிக்கையாக.(உதாரணம்- "நாங்களுக்கு எரடு ரூபாய் கொடுத்தாரு" என்றால் "எங்களுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார்") 7. பெங்களூர் பஸ் போக்குவரத்து மோசம் என்று கூறுவது சரியில்லை. மிகவும் மோசம் என்ற