tag:blogger.com,1999:blog-8966760223606874637.post3506536264364900868..comments2024-03-26T02:17:48.434+05:30Comments on சுஜாதா தேசிகன் பக்கம்: பார்த்தேன் எடுத்தேன் - 2Desikanhttp://www.blogger.com/profile/03237144548606109528noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8966760223606874637.post-86091744646063489332017-02-26T12:15:02.913+05:302017-02-26T12:15:02.913+05:30"தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும்" - ..."தேர்வில் நல்ல மார்க் வாங்க வேண்டும்" - புதிது புதிதாக ஆசாரத்தைக் கண்டுபிடிப்பதில் நம்மவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. சமீபத்தில் ஐயப்பன் தேவசம் போர்டுகூட, புதிய ஆசாரங்களையெல்லாம் கொண்டுவரக்கூடாது என்று ஒரு நோட்டீஸ் கொடுத்திருந்தது. சபரிமலை தரிசனம் முடித்தபின்பு, திருப்பதி செல்லுபவர்கள் அங்குள்ள புஷ்கரணியில் மாலைகளையெல்லாம் போட்டுவிடுகின்றனர். இதனால் புஷ்கரணியில் நீர்வரும் பகுதியெல்லாம் மூடிக்கொள்கிறது. திருப்பதியில் வரிசைக்கு நிற்கும் இடங்களில் எல்லாம் பெயரை செதுக்குகிறார்கள், இல்லையென்றால், விசிட்டிங்க் கார்டுகளைச் சொருகிவைக்கின்றனர். அதேபோல், காசையும் அங்கங்கிருக்கும் இடைவெளிகளில் சொருகுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கிணற்றிலும் (தண்ணீர் இல்லை), காசை வீசி எறிகின்றனர்.<br /><br />இத்தகைய, தலங்களையோ அல்லது அதன் வரலாறையோ மதிக்காத போக்குடைய மக்கள் இன் நானிலத்தே உதிப்பார்கள் என்று எண்ணியதால்தான், தென் இந்தியக் கோவில்களில், கர்ப்பக் கிரஹத்தில் பக்தர்களை நுழையவிடுவதில்லை. விட்டால், பழனி முருகனின் மூலவரைச் சுரண்டியதுபோல் நடந்திருக்கும்.<br /><br />பேலூர் சிற்பத்தில் தன் பெயரைப் பதித்தவர்கள், இந்த மாதிரி இடங்களுக்கு வருவதற்கு அருகதையற்றவர்கள். வேறு என்ன சொல்வது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com