Skip to main content

Posts

Showing posts from December, 2013

சோளிங்கர்!

ரகுராமுக்கு மத்தியானம் கனவு வந்து எழுந்த போது நம்ரத்தா, ஹவ் இஸ் திஸ் சுடிதார்? ஐ ஜஸ் காட் இட் வைல் யூவேர் ஸ்லீபிங்" என்றாள். ரகுராமும் அவர் குடும்பமும் இந்தியா வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடுராத்திரி... அதாவது திங்கள் காலை ஃபிளைட். கடைசி நிமிஷ அம்பிகா அப்பளமும், தி.நகர் சுடிதாரும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். சுடிதார் கேள்விக்கு ‘ஒரே கனவு’ என்ற பதில் நம்ரத்தாவுக்கு எரிச்சலைத் தந்தது. கனவுல யாரு... நான் இருந்திருக்க மாட்டேனே..." அம்மா" வாட் ஷி வான்ஸ் நவ்?" குழந்தைகளை அழைச்சிண்டு சோளிங்கர் போட்டுவான்னு சொல்லியிருந்தா... ஷி ரிமைண்டட் மி." இந்த சுடிதார் சாயம் போகுமா?"