Skip to main content

Posts

Showing posts from March, 2013

அப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தன்னுடைய படைப்பு சிறுபத்திரிகையில் தொடங்கி, வெகுஜன பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கதான் செய்கிறது. பிறகு அந்த ஆசை தனி புத்தகமாகவும் பிறகு சினிமா என்று அது தொடர்கிறது. "என்னுடைய கதை விகடனில் வந்திருக்கு படித்தீர்களா ?" என்று நண்பர்கள் குதூகலத்துடன் தொலைபேசியில் சொல்லும்போது அவர்களுடைய சந்தோஷத்தை உணரமுடிகிறது. இணையம், ஈ-மெயில், டிவிட்டர் என்று பல வந்தாலும் புத்தகத்தில் நம் எழுத்தைப் பார்க்கும் ஆனந்தமே அலாதி தான். போன மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண். "சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?" "ஆமாம்" "உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?" "இல்லை.. திருச்சி" "ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது" "கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?" "ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்ல

மலையாள திவ்யதேசப் பயணம் - 2

மலைநாட்டு திவ்ய தேசங்கள் பஞ்ச வாத்தியம் அடுத்தடுத்து பல திவ்யதேசங்களைப் பார்க்கும்முன் கேரளா திவ்யதேசங்களைப் பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்துவிடலாம். கேரளா கோயில்கள் எல்லாம் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை. பெரும்பாலும் சதுர வடிவம். அதே போல் மூலவர் நின்ற திருக்கோலம். கைகளில் சங்கம், சக்ரம், கதை, பத்மம் (குருவாயூர் மாதிரி தோற்றம்). பல கோயில்களைத் தரிசித்த பிறகு நமக்கு நிச்சயம் குழப்பம் வரும்.

மலையாள திவ்யதேசப் பயணம் - 1

குலசேகர ஆழ்வார் வைபவம் போய் வந்த பாதை ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களுடன் மலையாள திவ்யதேசங்கள் சென்று வந்தது ஒரு மாறுபட்ட அனுபவம். பொதுவாக 108 திவ்யதேசம் செல்லும் அன்பர்கள் ஒரு கோயிலை முடித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு ஓட்டமாக ஓடுவார்கள். ஒரு நாளில் இவ்வளவு பார்த்தேன் என்று ஏதோ பரிட்சை சிலபஸ் முடிப்பது போல முடிப்பார்கள். சிலர் சின்ன புத்தகத்தில் தங்களுடைய லிஸ்டை 'டிக்' செய்து இன்னும் எனக்கு 22 பாக்கி என்பார்கள். இந்த மாதிரி அவசரத்தில் சேவிப்பதால் இரண்டு நாள் முன் செய்தித்தாளில் என்ன வந்தது என்பது போல நினைவில் இருப்பதில்லை. அப்படி இல்லாமல், திவ்யதேசங்களைப் பார்த்துவிட்டு, அந்தந்தக் கோயிலிலேயே கிட்டதட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்து, அந்தக் கோயிலைப் பற்றிய சிறப்பு, ஸ்தல புராணம், ஆழ்வார் பாடிய பாசுரங்களின் உட்கருத்து என்று வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன். ஸ்ரீவைஷ்ணவ திய்வதேசங்கள் 108. இவை ஆழ்வார்களால் பாடபெற்ற திருத்தலங்கள். சோழநாட்டு திவ்யதேசங்கள் 40; பாண்டிய நாட்டில் 18; தொண்டை நாட்டில் 22; நடுநாடு - 2, சேர நாடு அல்லது மலையாள திவ்ய