Skip to main content

Posts

Showing posts from January, 2011

வில்வ மரமும், விஷ்ணு பக்தனும்

தமிழ் ஸ்டுடியோ, கூடு இதழில் எழுதுவதற்கு நீங்க பெரிசா ஒன்றும் செய்ய வேண்டாம், சும்மா உங்க வீட்டை சுற்றி ஒரு ரவுண்ட் போய் செடி கொடிகளை படம் எடுத்தால் போதும் என்று சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கமெண்ட் அடித்தார். அதனால் இந்த வாரம் ஒரு மாறுதலுக்கு வீட்டை சுற்றாமல் கும்பகோணத்தை சுற்றி வந்தேன். அங்கே வில்வ மரம் ஒன்றை பார்த்தேன். வில்வ மரம் இருந்த இடம் சக்கரபாணி திருக்கோயிலில். பொதுவாக வில்வமரம் சிவன் கோயிலில் தான் இருக்கும். சின்ன வயதில் எங்கள் பாட்டி வீட்டு பக்கம் இருக்கும் சிவன் கோயிலில் பெரிய வில்வ மரத்தை பார்த்திருக்கிறேன். பிறகு சென்னையில் திருமதி ராதா விஸ்வநாதன் ( எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியின் மகள்) வீட்டில் என் மனைவி பாட்டு கற்றுக்கொள்ளும் போது திரு விஸ்வநாதனுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை பேசிக்கொண்டு இருந்த போது அவர் வீட்டில் இருந்த வில்வமரத்திலிருந்து ஒரு பழுத்த வில்வப் பழம் கீழே விழுந்தது. உடனே அவர் அதை எடுத்து என்னிடம் கொடுத்து ஜூஸ் செய்து சாப்பிடு நன்றாக இருக்கும் என்றார். சரி என்று அதை வாங்கிக்கொண்டேன். எப்படி ஜூஸ் செய்வது, நல்லா இருக்குமா ? எவ்வளவு சக்கரை போடணும

வீட்டுக்கு பின் பிருந்தாவனம்

இந்த வாரம் கூடு இதழில் எழுதியது. எங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுடன் குளம் ஒன்று இருக்கிறது. குளத்துப் பக்கம் ஒரு முறை போன போது குறுக்கே ஒரு பாம்பு ஓடியது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் கால் வத்து வைத்துப் படுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பெங்களூர் அரசுக்கு என்ன தோன்றியதோ அந்தக் குளத்தைச் சுத்தம் செய்து, அதைச் சுற்றி நடைபாதை அமைத்து வேலி எல்லாம் போட்டு அமர்களப்படுத்திவிட்டார்கள். குளத்தில் வாத்துக் கூட்டம், வேடந்தாங்கல் மாதிரி பறவைக் கூட்டமுடன் மக்கள் கூட்டமும் சேர்ந்தது. பக்கத்தில் இருக்கும் கம்பு தோட்டத்தில் காலை எழறை மணிக்கு கிட்டத்தட்ட 100 கிளிகளை ஒன்றாகப் பார்க்கலாம். ஒரு முறை கருடன் ஒன்று ஒரு கிளியை 'லபக்' என்று தூக்கிகொண்டு போனது.