Skip to main content

Posts

Showing posts from August, 2010

சூரியனை பார்த்தால் தும்மல் வரும்

இரண்டு வார விடுப்புக்கு வெளியூர் செல்லுமுன் சமையல் அறையை ஒழித்துக் கட்டும் போது ஒரே ஒரு சின்ன சர்க்கரைவள்ளிக் கிழங்கு கிடைத்தது. தூக்கிப் போடலாம் என்று எடுத்த போது அதன் மேற்புறம் இளம் சிகப்பில் சின்ன சின்ன முளைகளைப் பார்க்க முடிந்தது. தூக்கி போட மனம் வராமல் பால்கனியில் இருக்கும் ஒரு மண் தொட்டியில் அதை ஊன்றி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றிவிட்டுக் கிளம்பினேன். இரண்டு வாரம் கழித்து திரும்ப வந்தபோது, பால்கனியில் இன்ப அதிர்ச்சி; சர்க்கரை வள்ளிக் கிழங்குச் செடி கொடிபோலப் படர்ந்திருந்தது. காங்கிரஸ் கட்சிச் சின்னம் போல அதன் இலைகள்.

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சிவசமுத்திரம் பெங்களூரிலிருந்து 130 கீமீ தூரத்தில் மாண்டையா மாவட்டதில் இருக்கிறது. கூகிளில் தேடியபோது இரண்டு வழிகள் இருப்பது தெரிந்தது. ஒன்று கனகபுரா மார்கமாகச் செல்லும் வழி. இன்னொன்று மைசூர் நெடுஞ்சாலையில் செல்லும் வழி. சோமநாத்பூர் சென்ற போது கனகபுரா மார்க்கம் ஒரு மார்க்கமாக இருந்ததால், மைசூர் வழியையே தேர்ந்தெடுத்து, வழக்கம்போல காமத் லோகருச்சி ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சென்றடைந்த போது மதியம் மணி பன்னிரண்டு. சிவசமுத்திரம் பற்றி நிறைய தகவல்கள் கூகிளில் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அருவியைப் பார்க்கப் போனபோது கையில் தின்பண்டங்கள் இல்லாத டம்மியாக இருந்தது அங்கிருந்த குரங்குகளுக்கு ஏமாற்றம். அருவியில் தண்ணீர் கம்மியாக வந்துகொண்டிருந்தது எங்களுக்கு ஏமாற்றம். திரும்பிப் போகும்போது மாடு ஒன்று மூச்சா போய்க்கொண்டு இருந்தது. "சிவசமுத்திரத்தைவிட மாடு மூச்சா அதிகமா இருக்கு," என்று குடும்பத்தினர் கமெண்ட்.

கை நிறைய காண்டம்

சம்பளம், டெக்னாலஜி, வெளிநாடு - இது தான் புதிய வேலைவாய்ப்பு தேடி வருபவர்கள் சொல்லும் காரணம். ஆனால் கொரியா, சீனா கம்பெனியிலிருந்து வருபவர்கள் சொல்லும் காரணம் - சம்பளம் கம்மியாக இருந்தாலும் பரவாயில்லை, நான் வேளா வேளைக்கு வீட்டுக்கு போகணும் என்பதுதான். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் புதிய கம்பெனி ஒன்றில், சேர்ந்த சில நாள்களில் பிராஜக்ட் விஷயமாக கொரியா செல்ல வேண்டும் என்றார்கள். என்ன வேலை என்று கேட்டதற்கு “பிராஜக்ட் மேனேஜ்மெண்ட்” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ‘ஹிட்டன் அஜண்டா’ (Hidden Agenda) புரியாமல், நம்மை மதித்து பெரும் பொறுப்பைத் தருகிறார்களே என்று உள்ளுக்குள் புல்லரித்து, நாமும்தான் கொரியா சுற்றிப் பார்த்ததில்லையே என்று அல்ப ஆசையை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்று கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து, ‘சரி’ என்று கிளம்பினேன். கொரியா சேர்ந்தவுடன் சில அதிர்ச்சிகள் அந்தக் குளிரில் காத்துக்கொண்டு இருந்தன. இறங்கிதும் எனக்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலை அடைந்து ”ஒரு மாதத்துக்கு ரூம் வேண்டும்” என்றேன். “என்ன ஒரு மாசத்துக்கா?” என்று முதல் போணியாக ஆம்பள