Skip to main content

Posts

Showing posts from November, 2006

பொடிடப்பா – புஷ்பா ராகவன்

இவர் எழுத ஆரம்பித்த போது இவருக்கு வயது 56. தற்போது இவருக்கு வயது 58! இவர் கதைகள் பாக்கியா, குமுதம், சிநேகிதி, ராணி nilacharal.com போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவர் எழுதிய நாவல் பெண்மணி மாத இதழில் வந்துள்ளது. இவரது சிறுகதைகளை இவரே வானொலியில் வாசித்துக்காட்டியுள்ளார்.  'குழந்தை தொழிலாளர்கள்' பற்றி இவர் எழுதிய கதைக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது. கர்னாடக சங்கீதம் பிடித்த இவருக்கு எழுத எல்லா ஊக்கமும் தந்தவர் இவர் கணவர் ராகவன். இவ்வளவு எழுதும் திருமதி புஷ்பா ராகவ்ன் படித்தது 8ஆம் பகுப்பு மட்டுமே. இந்த பதிவில் தன் 'nostalgia' நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...     ( தொடர்ந்து என் வலைப்பதிவில் எழுதுவார் என்று எண்ணுகிறேன்) பொடிடப்பா - புஷ்பா ராகவன் நான் எப்போதாவது  தனிமையில் அமர்ந்திருக்கும் போது  என் இள வயது நினைவுகளில்; மூழ்கிவிடுவேன். இனிமையும்,குறும்பும் நிறைந்த பருவம் அது. எனக்கு எட்டு வயது. எனக்கு கீழ் ஏழு ,ஆறு ,ஐந்து ,வயது நிரம்பிய தங்கை தம்பிகள், பள்ளியில் முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை வந்துவிட்டால் எங்களுக்கெல்லாம் ஒரேகுஷிதான்.

சித்திர ராமானுஜர்

சில மாதங்கள் முன் 'சித்திர நாலாயிரம்'   பற்றி எழுதியிருந்தேன். இரண்டு நாட்கள் முன் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் எனக்கு தன் கைபட ஒரு கடிதம் எழுதியுள்ளார் ( ஈ-மெயில் பார்க்கும் நமக்கு இது போன்ற கடிதங்கள் ஒரு வித மன நிறைவை தருகிறது. அதில் உள்ள ஒரு 'பர்சனல் டச்' ஈ-மெயிலில் கிடையாது) அதில் வரும் நவம்பர் 23 முதல் 26 வரை கீழச்சித்திரை வீதியில் திரும்பவும் ஒரு சித்திர கண்காட்சி நடைபெறுகிறது என்றும் அதில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார். இந்த முறை 1. ஸ்ரீ ராமானுஜ தரிசனம் 120 - உடையவர் ராமானுஜர் வாழ்ந்த வருடங்களை நினைவூட்டும் வண்ணம் அவரது கதையை 120 சித்திரங்களாக வைக்க போகிறார்கள். (இதையே புத்தகமாகவும் வெளியிட தீர்மானித்துள்ளார்கள் ) 2. 108 திவ்வியதேச தரிசனம் - ஆழ்வார்கள் அமுதமொழியில் 108 திருப்பதிப் பெருமாள்களின் தரிசனம். 3. ஸ்ரீமத் பகவத் கீதையை ஒரே படத்தில் 700 ஸ்லோகங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளது 4. பெரியாழ்வார் திருமொழி - சித்திரவடிவில் 5. சித்திர அமலனாதிபிரான் என்று அசத்த உள்ளார். என்னால் இச்சமயம் போக முடியாது என்று நினைக்கிறேன். இந்த தேதிகளில் நீங்கள் திருச்சி/ஸ்ரீரங்கம

பெண்களூர்-0 8

* சென்ற வாரக் கடைசியில் பெங்களூர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் (பேலஸ் கிரவுண்ட்ஸில்). நான் போன சமயம் கூட்டமே இல்லை. எல்லாக் கடைகளிலும் நிம்மதியாகப் புத்தகங்களைப் பார்க்க முடிந்தது. கூட்டம் இல்லாததால் புத்தகங்கள் ஒழுங்காக அடிக்கியபடியே இருந்தது. கிழக்கு பதிப்பகத்தில் நிறைய புதிய புத்தகங்களைப் பார்க்க முடிந்தது. ( வாங்கிய புத்தகம் மனிதர்களும் மர்மங்களும் - மதன் ). அனுமதி டிக்கெட் 20/= என்பதால் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றார் நியூபுக்லேண்ட் ஸ்ரீநிவாசன். [%image(20061121-helmet.jpg|141|200|Helmet)%] * பெங்களூரில் இப்போது தலைக்கு அவசியம் தலைக்கவசம் ( அதாங்க ஹெல்மெட் ). முன்பு தி.நகரில் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்திப் போடப்பட்ட வாசகம் “To protect your software, wear this hardware!”. பெங்களூர் ரோடுகளுக்குக் குறுக்கே டிவைடர்கள் போடத் தொடங்கியுள்ளார்கள். காலையில் போன சாலை மாலை வேறு மாதிரி இருந்தால் இது தான் காரணம். கொஞ்சம் ஜாக்கிரதையாகப் போக வேண்டும்; இல்லை என்றால் டிவைடரால் கார் டிவைட் ஆகும் அபாயம் இருக்கிறது. ஹெல்மெட்டின் அவசியத்தை பற்றி எனக்கு ஈ-மெயிலில் வந்த இந்தப் ப

கார்காலம்

[%image(20061108-getz.jpg|200|111|getz)%] சென்னையில் தற்போது கார்காலம்.  பெங்களூரிலும் கார்காலம் தான். போன வருட கணக்குப் படி பெங்களூரில் ஒரு மாதத்திற்கு 5000 கார்கள் விற்பனையாகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு 60,000 கார்கள். தற்போது பெங்களூரில்  1.9 மில்லியன் கார்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. (பெங்களூரின் மக்கள் தொகை 6.5 மில்லியன். ). [ கார் வாங்குபவர்கள் பற்றிய புள்ளிவிபரம்  -  முதன்முறையாக கார் வாங்குபவர்கள் - 33%,  தங்களிடம் இருக்கும் காரை விற்றுவிட்டு புது கார் வாங்குபவர்கள் - 33%,  இரண்டாவதாக இன்னொரு கார் வாங்குபவர்கள் - 33%. ] ஒவ்வொரு முறையும் சென்னைக்கு செல்லும் போது, வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு ரயில்வே ஸ்டேஷன் போவதற்கு 2 மணி நேரம் ஆகிறது. மழை வேறு வந்துவிட்டால் பெருமாளை நினைப்பதை தவிற வேறு வழியில்லை. அலுவலகம்/மீட்டிங்கிற்கு லேட்டாக வருகிறவர்கள் கால் ஒடிந்திருந்தாலும்  'டிராஃபிக் ஜாம்'  என்று தான் காரணம் சொல்லுகிறார்கள். எல்லா வாகனங்களும் இரண்டாவது கீருக்கு அடுத்து செல்லுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் கார் வாங்குவதை யாரும் நிறுத்துவதாக இல்லை. கார் வைத்திருப்பவர்கள் அதை விற

திண்ணனூர், திருஎவ்வுள்

நீ என்பது ஒரு எழுத்து நான் என்பது இரண்டு எழுத்து காதல் என்பது மூன்று எழுத்து உன் பின்னால் சுற்றுவது என் தலை எழுத்து! இப்படிக்கு பிரபு S/0 ராஜமாணிக்கம்  [%image(20061102-thirnidavur_gopuram.jpg|200|150|thirunidavur)%] ஒவ்வொரு முறையும் பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் போதும், திருவள்ளூர், திருநின்றவூர் ஸ்டேஷன்களை கடந்து செல்லும். இந்த இரண்டு திவ்வியதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். திரும்பவும் பெங்களூர் போகும் போது, தான் திரும்ப நினைவுக்கு வரும். இந்த தீபாவளி விடுமுறையில் இந்த இரண்டு திவ்விய தேசங்களுக்கும் போக முடிந்தது. காலை 6:30 மணிக்கு சென்னை அரக்கோணம் ரயிலில் ஒரு நியூஸ் பேப்பருடன் ஏறினேன். பேப்பர் படித்து முடித்த போது திருநின்றவூர் வந்தது. "திருநின்றவூர் கோயில் எந்த பக்கம்?" என்று அங்கு இருந்தவரிடம் கேட்டேன். "திண்ணனூர் போகனுங்களா ? இப்படியே ஒரு ஆட்டோ பிடித்து போங்க" என்றார். போனேன். திருநின்றவூர் என்பது காலப்போக்கில் திண்ணனூர் என்று திரிந்திருக்கிறது. கோயிலுக்கு முன் ஒரு பெரிய மரம், மண்டபம், கோயிலை சுற்றி சில திண்ணை வீடுகள் என்று மிக அழகிய இட