Skip to main content

Posts

Showing posts from August, 2006

சக்கரை இனிக்கிற சக்கரை

நாளை எனக்கு முப்பத்தாறு வயது முடிந்து முப்பத்தியேழு வயது ஆரம்பிக்கிறது. ஸ்கூல் படிக்கும் போது பிறந்த நாளிற்கு அம்மா பாயசம் அல்லது சக்கரை பொங்கல் செய்வாள். அதை நான் சாப்பிட மாட்டேன். யாராவது ஃபைவ்ஸ்டார் தருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். பாட்டியை சேவித்து ஆசிர்வாதம் வாங்கியபின் "தேசிகா இந்தா ஏதாவது மிட்டாய் வாங்கிக்கோ" என்று பணம் தருவார். அதில் ஒரு ஃபைஸ்டார் வாங்கிக்கொள்வேன். கல்யாணம் முடிந்த பின் முதல் வருடம் மட்டும் மாமியார் வீட்டில் பாயசம் செய்தார்கள். இந்த பிறந்த தினதில் யாராவது எனக்கு மிட்டாய் கொடுத்தாலும் சாப்பிடமுடியாது. ஏன் என்று தெரிந்துக்கொள்ள மேலே படிக்கவும். போன மாசம் என் மனைவியின் கண் பரிசோதனைக்கு உடன் சென்றிருந்தேன். கண்ணை பரிசோதனை செய்துகொண்ட என் மனைவி "நீங்களும் உங்க கண்களை செக் செஞ்சிக்கோங்கோ.." "எனக்கு எல்லாம் நல்லா தான் தெரிகிறது" "அதை டாக்டர் சொல்லட்டுமே" டாக்டர் கண்களில் டார்ச் லைட் அடித்து கண்களை கூச வைத்து, நான் இரண்டு சொட்டு கண்ணீர் விட்ட பின், சில எழுத்துக்களை காண்பித்தார். "முதல் வரிசையை படியுங்கள்"

ஆடித் தள்ளுபடியில் வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆடி மாசத்தில் தோசை வார்க்க ஆரம்பித்தான். அப்போது எக்ஸ்சாஸ்ட் ஃபேன் வழியாக வேதாளம் வந்தது. "என்ன விக்ரமா, வைஃப் வீட்ல இல்லையா, நீ தோசை வார்க்கற ?" "ரொம்ப நாளா உன்னைத்தான் ஆளக் காணோமேன்னு பாத்தேன், வந்துட்டியா ?" விக்கிரமாதித்தன் அலுத்துக்கொண்டான். "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே. சரி சரி எனக்கும் ஒரு ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் போடு, சாப்டுட்டுப் போறேன்."   "தோடாஆஆ.. இதுல ஒன்னும் குறைச்சலில்லை!" பேசிக்கொண்டே தோசைக்கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்தான் விக்கிரமாதித்தன். தோசைக்கல்லில் பட்ட தண்ணீர் "ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தத்தோடு அதில் குதித்தது. வேதாளம், "தண்ணி ஏன் குதிக்றது தெரியுமா ?" கேட்டது. "கல் சூடா இருக்கில்ல, அதனால!" "இது சரியான பதில் இல்லையே!" "ஆரம்பிச்சுட்டயா உன் வேலையை? சரி, சொல்லித் தொலை!" வேதாளம் தொடர்ந்தது. "நீ தோசைக்கல்லுல தெளிக்கற தண்ணி இந்த அறையோட தட்ப வெப்ப நிலையில இருக்கும். ( 30 டிகிரி