Skip to main content

Posts

Showing posts from June, 2006

தஞ்சை பெரியகோயில்

முன்பு சோழர் பற்றி ஒரு பதிவு எழுதியது ஞாபகம் இருக்கலாம். ( படிக்காதவர்கள் இங்கு பார்க்கவும் ) நேற்று குரு சுப்பிரமணியம் அவர்களின் வலைப்பதிவில் இந்திய கோயில்களை பற்றிய ஒரு விவரணப்படம் படம் ஒன்று கிடைத்தது என்று எழுதியிருந்தார். நானும் முன்பு எப்போதோ டிவியில் இதை பார்த்திருக்கிறேன். ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில்களள பார்க்க பார்க்க ஒர் வித சந்தோஷம் கிடைக்கிறது. மூன்று வருடத்திற்கு முன் Birds eye viewவில் நான் வரைந்த ஸ்ரீரங்கம் படமும் ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கமும் ஒத்துப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. [%popup(20060621-srirangam_birds_eye_view.jpg|500|351|படம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்)%] 52 நிமிடம் ஓடும் இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை - பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன் தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'. பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமி

நன்றி தேன்கூடு !

 இன்றைய தேன்கூடு 'வாசகர் பரிந்துரையில்' என் வலைப்பதிவு பற்றி வந்துள்ளது. தேன்கூடு குழுவிற்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்" என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் 'மொட்டைக் கடுதாசி' மொட்டைக் கடுதாசி - எஸ்.வி.ராமகிருஷ்ணன் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பத

கும்பகோணம்

[%image(20060609-kootani_vans.jpg|175|131|kootani)%] தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிரசார வாகனங்கள் இங்கும் அங்கும் சென்றுகொண்டிருந்த நேரத்தில்  குடும்பத்துடன் கும்பகோணம் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம். வீராணம் குழாய், மதுராந்தகம் ஏரி, பண்ருட்டி பலாப்பழம், ரோடில் காயந்துகொண்டிருக்கும் கருப்பு உளுந்து, சுவரில் மாம்பழச் சின்னம் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே போனால் 7 மணி நேரம் ஆகிறது.     [%image(20060609-uppiliappan_gopuram.jpg|175|131|uppiliappan)%] கும்பகோணம் வந்தடைந்து மதியம் சாப்பிட்டபின் முதல் கோயிலாக திருவிண்ணகர் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் சென்றோம். திருமங்கையாழ்வார் , பேயாழ்வார் , நம்மாழ்வார் பாடிய இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. பெருமாள் ஒப்பிலியப்பன் - ஒப்பற்றவன் என்று பொருள். இக்கோயில் தளிகையில்(பிரசாதத்தில்) உப்பு சேர்ப்பதில்லை அதனால் பெருமாள் 'உப்பிலியப்பன்' என்றும் அழைக்கப்படுகின்றார். (கோயிலிக்குள் உப்பையோ உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் சென்றால் நரகத்துக்குச் செல்வார்கள்