Skip to main content

Posts

Showing posts from December, 2005

மூக்குப்பொடி

கல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும். செந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான். அன்று வெள்ளி

மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை

 அப்பாடா ஒரு வழியாக இன்று முடித்துவிட்டேன்!. IIM இந்தோர் (Indore) தங்கள் ஆண்டு விழா (IRIS 2005) கொண்டாட்டமாக ஒரு puzzle விளையாட்டு போட்டியை இந்த ஆண்டு வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் முயன்று ( சில சமயம் நண்பர்களிடம் கேட்டு ) இன்று காலைதான் முடிக்க முடிந்தது. ( மொத்தம் 29 நிலை(level) ).  [%image(20051219-KluelessFinal.jpg|507|250|Final Page of KlueLess)%] முடித்த பின் மூளையை வாட்டர் வாஷ் சர்விஸ் செய்த உணர்வு :-) . நீங்களும் முயன்று பாருங்களேன். விளையாட்டுக்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் (   http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/   ) தயவு செய்து விடை தெரிந்தவர்கள் விடைகளை இங்கு பின்னூட்டமிடாதீர்கள். மற்றவர்களும் முயன்று பார்த்து அனுபவிக்கட்டுமே!. (Clue, மறைமுக குறிப்பு கொடுப்பதற்கு தடையில்லை) கேம் ரூல்ஸ் - http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/game.asp

இந்த மார்கழி

இன்று மார்கழி ஆரம்பம். போன வருடம் தினமும் அந்தந்த திருப்பாவை பாடலுக்கு, படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கம், கோலம் என்று பதிவுகள் போட்டேன். இந்த வருடம் வேறு மாதிரி செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ முடியவில்லை. போன வருடம் செய்ததை பார்பதற்கு வலது பக்கத்தில் 'இன்றைய திருப்பாவை'  படத்தை கிளிக் செய்யவும்  

E=ஹிஹி2

சுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம். "எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப?"  என்றது வேதாளம். "உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான். வேதாளம் விடுவதாக இல்லை "இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்" "உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா?" "சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்" என்றது. விக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது. "இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது" "பயமா? என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு ? " என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில். "இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந்துட

மதுரை திவ்வியதேசங்கள் மூன்று

நவதிருப்பதிக்கு அடுத்த நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்விய தேசங்களுக்கு செல்வதாக திட்டம். முன்னாள் இரவு சாப்பிட்ட மதுரை பரோட்டாவின் உதவியால் காலை சீக்கிரம் எழ முடிந்தது. மதுரையிலிருந்து 21 கீமீ தூரத்தில் இருக்கும் அழகர் கோயிலுக்கு புறப்பட்டோம். [%image(20051206-small_azhgar_kovil_front_vi.jpg|250|172|அழகர் கோயில் முகப்பு தோற்றம்)%] இக்கோயிலுக்கு மற்றொரு அருமையான பெயர் இருக்கிறது - திருமாலிருஞ்சோலை . கிழக்கு மேற்காக 10 மையில் தூரம் 1000 அடி உயரமும் உள்ள இந்த மலை சுனைகளும், அரிய மூலிகைகளைகளும் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூட வந்தவர் சொன்னார். பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாடல்களில் பாடப் பெற்ற இடம். பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பு இருக்கிறது. மகாவிஷ்ணுவிற்கு இராம, கிருஷ்ண அவர்தாரங்களுக்கு அழகர் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமாளுக்கு கூடலழகர், கள்ளழகர் என்று திருநாமங்கள் உண்டு. ஆண்டா