Skip to main content

Posts

Showing posts from October, 2005

சென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.

லால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது. பெங்களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம். மைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள். சென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரியாகிவிடும் என்று சொல்கிறார்கள் . சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. ரயில்வே தகவல் அறிய : 139 மேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972 தென்னக ரயில்வே தகவல் தளம் : http://www.indianrail.gov.in/temp.htm புயல் பற்றிய செயற்கைகோள் படங்கள் : http://www.imd.gov.in/section/satmet/img/sa.htm [ Update 1 27/05/05] [%image(20051027-chennai_rain.jpg|360|197|Chennai Rain)%]  சென்னை மழை படம் உதவி தமிழ் முரசு [ Update 2 27/10/05] மேலும் சென்னை படங்கள் : தினமணியில். [ Update 3 - 28/10/05 11:30am ] சென்னை மழை நிலவரம் : அருள் ,   நாராயணன் , பத்ரி சன் டிவி நிலவரம்: உயிர்மை   [ Update 4 - 28/10/05 11:50am ] சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துக

ஜோ ஜோ - தீபாவளி

[%image(20051026-jothika_7.jpg|200|149|Jothika_7)%] நேற்று காலையிலிருந்து பெங்களூரில் 'ஜோ ஜோ'ன்னு நல்ல மழை. சென்னைக்கு போகும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளது என்று NDTV வில் சொன்னார்கள். தீபாவளிக்கு சென்னைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போவதே கஷ்டமாகயிருக்கிறது. பார்க்கலாம்.     தீபாவளி என்று சொன்னால் நினைவிற்கு வருவது, பட்டாசு, புது துணி மற்றும் திபாவளி ரிலீஸ் படங்கள். ஆனால் இன்று ? [%image(20051026-jothika_1.jpg|172|216|Jothika_1)%] தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு. போன வாரம் சென்னைக்கு போன போது தி.நகரில் எப்போதும் போல் இந்த வருடமும் மக்கள் கூட்டம். ஒரு மாறுதலுக்கு இந்த முறை போலிஸ் போக்குவரத்தை அருமையாக கட்டுப்படுத்தியிருந்தார்கள். பனகல் பார்க் அருகில் இரண்டு புதிய கடைகள் வந்திருக்கிறது - சரவணா ஸ்டோர்ஸ் 'பிரமாண்டமாய்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ். இந்த கடைகளில் நிஜமான 'தள்ளு'படியை காணமுடிந்தது.

உடைந்த கையை ஒட்டின கதை

உடைந்த கையை ஒட்டின கதை (1943) எஸ்.வி. ராமகிருஷ்ணன் [%image(20051019-svr_hand_small.gif|142|200|SVR Hand Image)%] என் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள். சிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள

கண்கலங்க வைக்கும் கடிதங்கள்

நேற்றைய அசோகமித்திரன் கட்டுரையை தொடர்ந்து இன்று ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது. சமிபத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. (எத்தனையாவது பிறந்த நாள் என்று கேட்க நினைப்பவர்கள் 'எத்தனையாவது' என்பதற்கு சரியான இங்கலிஷ் வார்த்தையை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம் ரொம்பப் பேரிடம் கேட்டு வருகிறேன். மகாமகா இங்கிலீஷ் பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்) பிறந்த நாள் என்றால், வாழ்த்து வராமலா இருக்கும் ?. வந்தன தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் எழுதியிருந்தார்கள், இருந்தாலும்.. "என் அன்புள்ள அப்பாவுக்கு உங்களுடைய இந்தப் பிறந்த நாளன்று நீங்கள் என்னை எப்படியெல்லாம் வளர்த்து மனிதனாக்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சின்ன பையனாயிருந்தபோது காலில் ஏதோ புண் ஏற்பட்டிருந்தது. தூங்கும் போது என்னை அறியாமல் அதை சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தேன். அதற்காகவே முரட்டுக் கதர்த்துணையில் க்ளவுஸ் மாதிரி உறை தைத்துப் போட்டு அது கழன்றுவிழுந்து விடாமலிருக்க முடிச்சுப் போட்டு வைத்தீர்கள். தினம் ராத்திரி உங்களுடைய கடைசி வேலை அது. அந்த நாளில்

இரண்டு கட்டுரைகள்

சமிபத்தில் இரண்டு கட்டுரைகளை இரண்டு முறை படித்தேன். ஒன்று அசோகமித்திரன், மற்றொன்று ர.கி.ரங்கராஜன். யோசித்து பார்த்தால் இரண்டிலும் உள்ள நகைச்சுவைதான் காரணம் என்பது புலப்படும். முதலில் அசோகமித்திரன். இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில்? அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது. ஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்ட

சென்ற வாரம் சென்ற இடம்!

கல்யாணத்திற்கு முன் வாராவாரம் பைக் எடுத்துக்கொண்டு ஒரு திவ்விய தேசம் சென்று வந்துக்கொண்டிருந்தேன். வந்த பிறகு அந்த கோயிலை பற்றி ஒரு சிறு குறிப்பை ஒரு நோட்டு புத்தகத்தில் "சென்ற வாரம் சென்ற இடம்" என்ற தலைப்பில் எழுதியும் வைப்பேன். அவ்வாறு எழுதியதில் இரண்டை இங்கு தந்துள்ளேன். திருநீர் மலை ! இந்த ஞாயிற்றுகிழமை சினிமாவிற்கு சென்று ஷெரன் ஸ்டோனை(sharon stone) பார்ப்பதற்கு பதில். திருநீர் மலைக்குச் சென்று திருமங்கை ஆழ்வார் வர்ணித்த "அன்றயர்குலக்கொடியோடு அமாமலர்மங்கையொடுஅன்பளவி அவுணர் எந்தானும்இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது இரும்பொழில்சூழ் நன்றயபுனல்நறையூர்திருவாலிகுடந்தை தடம்திகழ்கோவல்நகர் நின்றான்இருந்தன்கிடந்தான்நடந்தாற்குஇடம் மாமலையாவதுநீர்மலையே." [%image(20051007-THIRUNEER-MALAI--A.jpg|192|144|ThiruneerMalai)%] இந்த நான்கு கோலங்களை கொண்ட நீலவண்ணனை பார்ப்பது என்று முடிவு செய்தேன்!. திருநீர் மலை சென்னை தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் "ponds" தொழிற்சாலை நறுமணம் கமவழ அமைந்த அமைதியான இடம். இந்த மலையை நீர்சூழ்ந்திருந

சொடக்கு

[%image(20051003-stretching.jpg|144|99|stretching)%] தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனை அடிக்கும் முன் கழுத்தை 180 டிகிரி சுழட்டி, பின் இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து மடக்கி ' Warm-up' செய்யும் போது பின்னனியில் DTS எப்பெக்டில் 'படக் படக்' என்று சொடுக்கும் சத்தம் வரும். இந்த சொடுக்கும் சத்தம் சிலருக்கு கை, கால் மடக்கினால் வரும். சிலருக்கு மாடிப்படி ஏறி இறங்கினால்; சலூனில் முடி திருத்துபவர் கழுத்தை திருப்பி காதை இழுத்து மசாஜ் செய்யும் போது; என் பாட்டிக்கு கொட்டாவி விட்டால் வரும்.   இரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதால் வருகிறது என்று நேற்று காலை டிபன் சாப்பிடும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று கூகிளில் தேடிப் படித்ததில் புரிந்து கொண்டேன். சரி சத்தம் எப்படி வருகிறது என்று தெரிந்துக்கொள்ள நம்முடைய எலும்புகள், மூட்டு, கணுக்களின் அமைப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். [%image(20051003-knuckles.jpg|222|216|Knuckles)%] படத்தில் ( படம் உபயம் howstuffworks ) மஞ்சள் கலரில் பார்ப்பது தசைநார்/நரம்பு( ligament). நீல கலரில் பார்ப்பது 'சைனோவியுல் திரவம்