Skip to main content

ஸ்ரீரங்கம் - 6

எறக்குறைய ஒரு வருடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் தொடரை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்...

- தேசிகன்


- * - * - *


 


[%image(20050818-sri_venugopal.jpg|432|330|Srirangam Venugopal)%]

இந்த பதிவில் கிபி 1178-1310 முதல் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாக தந்துள்ளேன். இந்த காலத்தில் சோழ அரசர்கள் வீழ்ச்சியும், பாண்டிய அரசர்கள் மலர்ச்சியும் பெற்ற காலம் என்று கூறலாம். சோழ மற்றும் பாண்டிய அரசர்களின் சண்டையினால் மைசூரை ஆண்ட ஒய்சள அரசர்கள், சேர அரசர்கள், இலங்கை அரசர்கள் மற்றும் கீழ்த்திசைக் கங்கர்களும் ஊடுருவ நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பாண்டிய அரசர்களுக்கு எதிராக ஒய்சள அரசர்கள் சோழர்களுக்கு உதவி செய்தனர். காலபோக்கில் ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் உள்ள கண்ணனூர், விக்கிரமபுரி ஆகிய இடங்களை தங்களுக்கு கீழ் கொண்டு வந்து, தங்களின் உப தலை நகரமாக ஆக்கிகொண்டார்கள். பின்னர் முஸ்லிம் மன்னர்கள் மாலிக்காபூர்(1310-11), துக்ளக்(1323) போன்றவர்கள் கோயிலை சூரையாடினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் வைணவ தலைமைச் செயலகமாக திகழ்ந்தது. ராமானுஜருக்கு அடுத்து வந்தவர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை சார்ந்தவர்கள் ஆவர். இந்த காலகட்டதில் தான் தென்கலை-வடகலை பிரிவு உண்டாயிற்று. ( இதை பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன் )


 


சாளுக்கிய சோழகுல மரபில் தோன்றிய மூன்றாம் குலோத்துங்கனின் (கிபி 1178-1218 ) இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வேட்டு ஒன்று, ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் அவனது ஆட்சியின் கீழ் வந்தது என்று கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டு திருவானைக் கோயிலில் உள்ள ஜம்புகேசுவரர் என்ற சைவக்கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அந்த காலத்தில் இருந்த நிலப் பூசல்களைக் தீர்க்க முயன்றான் என்று கூறுகிறது.

இக்காலம் பல இன்னல்களுக்குட்பட்டிருந்தது. சோழர்குல மன்னர்களின் ஆட்சியானது ஒரிசாவரையில் பரவி ஆதிக்கம் பெற்றுருந்த போதிலும், ஒரிசா மக்களும், கிழ்த்திசைக் கங்கார்களும், பாண்டியர்களும் இலங்கை அரசனின் துணையுடன் அடிக்கடி சோழரை எதிர்த்து சண்டையிட்டனர். கிபி 1223-1225 வரை ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. அவர்களால் அக்காலத்தில் இக்கோயிலில் நிர்வாகம் சிதைந்து பாழ்பட்டது.


சாளுக்கிய சோழ அரசர்களுக்கு, மைசூர் ஓய்சள அரசர்கள் பெரிதும் துணை புரிந்தபோதிலும், முதலாம் மாறவர்ம சுந்திர பாண்டிய மன்னன் (கிபி, 1216-1238) கருநாடகத்தைக் கைப்பற்றினான். அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், அவனுடைய படைகள் ஸ்ரீரங்கத்தை கங்கர்களிடமிருந்து விடுதலைப்பெறச்செய்தது. ஆனால் ஒய்சள மன்னர்களும், இக்கொயிலில் ஈடுபட்டு ஆர்வம் காட்டினர், அவர்கள் பல கல்வெட்டுக்களை இக்கோயிலில் விட்டுச் சென்றுள்ளார்கள். ஒய்சள அரசனாகிய சோமேசுவரன்(கிபி 1234-1262) தனது 16-ஆம் ஆட்சியாண்டில்(கிபி 1240) இக்கோயிலுக்கு ஒரு நந்தவனத்தையும், மூன்றாம் பிராரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தினான் என்பது, கல்வெட்டுக்களால் புலனாகிறது.


கோயிலிலுள்ள சந்நிதிகளுள் மிகவும் அழகு வாய்ததொன்றிய வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி, இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும்.(பார்க்க படம்). சிறிது ஏறத்தாழ இந்தக் காலத்திலேயே பாண்டியர்களின் ஆடம்பர மிக்க பக்தியின் மூலம் இக்கோயிலில் பல நன்மைகள்ப் பெற்றது. மதுரையை ஆண்டுவந்த முதலாம் சடவர்ம சுந்திரபாண்டியன்(கிபி 1251-1268), இக்கோயிலில் பல கட்டிடங்களை எழுப்பியும் பலவகை அலங்காரங்களைச் செய்தும் ஏராளமான நன்கொடைகளை வழங்கியும் பெரும் புகழ் பெற்றான். திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நதி, மகாவிஷ்ணு சந்நதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவ்வரசன் கட்டினான். கடக்(Cuttack, Orissa) அரசரை எதிர்த்து போரில் வென்று அவரது கருவூலத்தினின்று கைப்பற்றிய பொருள்களைக்கொண்டு சடவர்மன் சந்திரப்பாண்டியன் திருவரங்கநாதர்க்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம் முத்துவிதானம், பலவகை பொற் பாத்திரங்கள், குவளைகள் ஆகியவற்றை வழங்கினான். காவிரி நதியில் தொப்போற்சவம் நடத்துவிப்பதற்கு தங்கத்தினாலேயே படகு அமைத்தான். அதில் தனது பட்டத்து யானையை படகில் ஏற்றி அதன் முதுகில் தான் ஏறி அமர்ந்து கொண்டான். மற்றொரு படகில் நாணயங்களையும் கொட்டி நிரப்பினான். தன்னுடைய படகினது நீர்மட்டத்துக்கு மற்றொரு படகும் வருகின்ற வரையில் நிரப்பினான் அதை பின்னர் கோயிலுக்கு தானமாக வழங்கினான் என்று கோயிலொழுகுல் குறிப்புள்ளது.


இதனை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாறவர்மகுல சேகர பாண்டியனின்(கிபி 1268-1308) ஆட்சிக் காலத்தில் போர்ச்சுகீசிய யாத்திரிகன் மார்க்கோபோலோ இங்கு வந்ததாக கூறிப்புள்ளது. முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பு பற்றி அடுத்த பதிவில்.



Old comments from my previous Blog


nice post desikan. a few things stand corrected:


1. Malik Kaffur was not a king. He was the prime general of Allah-ud-din Khilji


2. Hoysalas did not rule from Mysore. Their capitals were Halebidu and then Belur (from 1311 to 1327).


By Hemanth, at Thu Jun 09, 12:36:24 PM IST  


Hemanth,

Thanks for your comments. I will verify it.

- desikan


By Desikan, at Thu Jun 09, 12:41:55 PM IST  


ஹேமந்தின் இரண்டு குறிப்புகளும் சரியென்று நினைக்கிறேன்.

மாலிக்காபூரைப் பொருத்தவரை, படைத்தலைவன் பேரரசனைப்போல் சிற்றரசரகளிடம் அதிகாரம் செலுத்தினான் என ஞாபகம்.


மார்க்கோ போலோ குறிப்புகளில் திருவரங்கம் பற்றி ஏதேனும் உண்டோ எனத்தெரியவில்லை.


By ஜீவா(Jeeva) (#7113738), at Fri Jun 10, 09:15:27 AM IST  


I remeber reading a novel by balakumaran "Kaathal arangam". Neenga padichirukingala? how close is that to the history of the temple?


By Muthukumar Puranam, at Wed Jul 06, 06:38:17 PM IST  


¦Ã¡õÀ À¢ÃÁ¡¾õ


Å¡úòиû


By Anonymous, at Fri Jul 08, 05:43:32 PM IST  


தேசிகன் ஸார் எனக்கு இப்ப அவசரமா `அடையவளைஞ்சான் தெரு`வோட பெயர்க் காரணம் தெரியணும். ஹெல்ப் ப்ளீஸ்.


நன்றி/


அன்புடன்

சுந்தர்


By சுந்தர், at Sat Aug 06, 09:49:26 PM IST  

Comments