Skip to main content

Posts

Showing posts from April, 2005

கிரிமினல்கள் ஜாக்கிரதை

கல்கியில் 1994-95 என்று நினைக்கிறேன், "கிரிமினல்கள் ஜாக்கிரதை" என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. நான் கல்கியில் விரும்பி படித்த தொடர்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு கிரைம் கதை போல் வாரவாரம் சஸ்பென்ஸ் வைத்து எழுதப்பட்டது. இதில் வந்த நபர்கள் நமக்கு மிகவும் பரிட்சயமானவர்கள் அதனால் சுவாரசியம் மேலும் கூடுகிறது. குற்றவாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்க காவல்துறை பெரிதும் நம்புவது, தடய அறிவியல் துறை என்னும் Forensic science பிரிவைத்தான். சிறியதொரு தலைமுடி, ஒரு சொட்டு ரத்தம், ரேகை, உடைந்த பல் என்று கிடைக்கும் அற்பமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டும் இந்திய தடய அறிவியல் நிபுணர்களுள் டாக்டர் .பி. சந்திரசேகரன் மிக முக்கியமானவர். கல்கி வார இதழில் தொடராக வெளியான அவரது இந்த அனுபவக் குறிப்புகள் தற்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. இதில் தான் காஞ்புரத்தில் முதல் முதலில் சந்தித்த வடகம் பானையில் கானாமல் போன பணம் முதல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட மொட்டை முருகன் வரை எழுதியிருக்கிறார். புத்தக

தசாவதாரம் – தி மிஸ்ஸிங் லிங்க்

 உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது.... அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களும் தோன்றுவதற்கு ‘இயற்கைத் தேர்வு’தான் ((Natural selection) காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது! அது- கடலில் இருக்கும் பாசி, மீன்கள், ஆமைகள், நத்தைகள், காடுகளில் இருக்கும் குரங்கு போன்ற உயிரினங்கள், பறவைகள் என எல்லாமே ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு மூதாதையர்கள் என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சி வ

திருமெய்யம்

"இன்னிக்கு கடைசி நாள் எதாவது நல்லாதா எழுது" என்றது வேதாளம் "போன மாசம் திருமெய்யம் போனேன் அதை பற்றி எழுதவா ?" என்றான் விக்கிரமாதித்தன். "எதையாவது புரியும்படியாக எழுது" "சரி பார்க்கிறேன்" என்ற விக்கிரமாதித்தன் திருமெய்யம் பற்றி எழுத ஆரம்பித்தான். * - * “மையார் கடலும் மணிவரையும் மா முகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும் கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.” (பெரிய திருமொழி, 2016, 11-7-5)என்று திருமங்கையாழ்வார் பாடிய திருமெய்யத்திற்கு திருச்சியிலிருந்து பேருந்தில் சென்றிருந்தேன். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த நூற்றெட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக விளங்குகிறது. திருச்சி - புதுகோட்டை - காரைக்குடி சாலையில் புதுகோட்டையிலிருந்து தெற்கே 20கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. திருமெய்யம் ஒரு கிராமும் கிடையாது, நகரமும் கிடையாது. இது ஒரு சிற்றூராட்சி. திருமெய்யம் என்ற பெயர் திருமெயம் என்று மருவி வழங்கப்படுகின்றது ( டாக்டர் ர.பி.சேதுபிள்ளை, புதுகோட்டை கல்வெட்டுக்கள் எண் 340, காலம் 1256). கோயிலில் உள்ள பெருமாள் பெயர் த

அட நாம இப்படித்தான்

"நீ கேள்வி கேட்பதும், அதற்கு நான் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதும் இன்னும் எத்தனை நாளைக்கு" என்றான் விக்கிரமாதிதன். "இன்னும் இரண்டு நாளக்கு, அது வரை கொஞ்சம் 'அட்ஜஸ்ட்' பண்ணிக்கோ" என்றது வேதாளம் "அட்ஜஸ்டா ?" "அது என்ன கெட்ட வார்த்தையா ? நான் சொல்லக் கூடாதா?" "கெட்ட வார்த்தை இல்லை, எப்போதும் கேட்கும் வார்த்தை" என்ற விக்கிரமாதித்தன் தொடர்ந்து எழுத ஆரம்பித்தான். * - * அட நாம இப்படித்தான் இந்தியர்கள் என்று நம்மை அடையாளம் காட்டுவது எது ? நம்முடைய பாரம்பரியமா ? சமயமா ? என்றால் கிடையாது. நம்முடைய தினப்படி நடவடிக்ககைகள் தான் நம்மை இந்தியர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. சிலவற்றை பார்க்கலாம். நம்முடைய பல நடவடிக்கைகள் conserve and recycle முறையினாலானது. சிக்கனமாக இருப்பதை பெருமையாக நினைத்துக்கொள்கிறோம். நம்முடைய உபதேசங்கள், பாடல்கள் பலவற்றில் நம்முடைய ஆசைகளை விட்டுவிட உபதேசிக்கின்றன(உத: பஜகோவிந்தம்-2 பாடல்). நாம் மகிழ்ச்சியையும் செலவையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறோம். இதற்கு பல உதாரணங்கள் கூறலாம். பழைய துணி, பாத்திரங்களை விற்று புது பாத்தி

Blog, Email, Phone, SMS

"இன்னிக்கு என்ன எழுதப்போற" என்றது வேதாளம் "இன்னிக்கு திரு.ராமசாமி பற்றி எழுதப்போறேன்" என்றான் விக்கிரமாதித்தன். "என்ன ? திரும்பவும் ராமசாமியா ? ஜாக்கிரதை" என்று எச்சரித்தது வேதாளம் "அட இது வேற ராமசாமிப்பா" என்ற விக்கிரமாதித்தன் மேற்கொண்டு எழுத ஆரம்பித்தான். * - * Blog, Email, Phone, SMS. நாளை திரு.ராமசாமி வீட்டுக்குப் போகிறேன். அவர் டையரியில் என் வலைப்பதிவை பற்றிய கருத்துக்களை எழுதியுள்ளாராம். Blog: நான் வலைப்பதிவு ஆரம்பித்து சுமார் பத்து மாதம் ஆகிறது. ' பெண்'களூர் பற்றி எழுதியவுடன் நிறைய பெண்கள் என் பக்கத்திற்கு வந்து பாராட்டிவிட்டு போனார்கள். அப்படி வந்தவர்களில் லதாவும் ஒருவர். பெங்களூர் வாசி. அவர் அப்பா பெயர் ராமசாமி. சொந்த ஊர் திருச்சி. என் வலைப்பதிவை படித்துவிட்டு அவர் எனக்கு அனுப்பிய ஈ-மெயில்... Email: Dear Mr.Desikan, Namaskaram. My Name is Ramaswamy. I understand from my daughter Latha that you write articles in the Internet. I got the chance of reading your articles. God has gifted you with a very good writing skill. And I

என் பேர் ஆண்டாள்-0 2

என் பேர் ஆண்டாள் - 2   "நேற்று GPS பற்றி எழுதினது நன்றாக இருந்தது, டையம் கிடைக்கும் போது அதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று இருக்கிறேன்" என்றது வேதாளம் "நான் தமிழில்தானே எழுதியிருந்தேன்" என்றான் விக்கிரமாதித்தன். "அதில் உள்ள் ஆங்கில வார்த்தைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை.." "என்ன நக்கலா ? சரி இன்று என் பெண் எழுதப்போறா" என்ற விக்கிரமாத்தித்தன் தன் மகளை எழுதச் சொன்னான். * - * என் பேர் ஆண்டாள் - 2   எனக்கு பர்த்டே முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு. அப்பா சைக்கிள் வாங்கித்தர்றேன்னு சொன்னா ஆனா, இன்னும் வாங்கித்தரல. எனக்கு பிடிச்ச ரைம் "Rain Rain go away". அப்பா சொல்ரா மெட்ராசில மழையே இல்லை இதை எதுக்கு பாடரன்னு.   எனக்கு பிடிச்ச toy ஆப்பாவோட லாப்டாப் தான். அப்பா அதை தரமாட்டேங்கிறா. ஒரு நாள் அப்பா துங்கரப்ப நைஸா எடுக்கப்போறேன். இப்போ எனக்கு லீவ் அதனால கார்த்தால பல்தேச்சிட்டு Mulan படம் பாப்பேன், அப்பறம் Nemo, அப்பறம் Tom & Jerry, அப்பறம் ராத்திரி Pogoல Mr.Bean, அப்பறம் தூங்கிடுவேன்.       இப்போ "அ ஆ இ ஈ" எல்லாம் நல்லா வரையறேன். அப்

GPS – Global Positioning System

"போன பதிவுல எந்த காட்டுக்கு போனப்பா எனக்கும் கொஞ்சம் சொல்லேன்" என்றது வேதாளம். "எனக்கு தெரியாதுப்பா என்கிட்ட என்ன GPS சாதனமா இருக்கு" என்றான் விக்கிரமாதித்தன். "அது என்னப்பா GPS, அதை பற்றி சொல்லேன்" "சரி எனக்கு தெரிந்த வரை உனக்கு எளிமையா சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்" என்று விக்கிரமாதித்தன் GPS பற்றி எழுத ஆரம்பித்தான். *- * - * GPS - Global Positioning System. இதை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சில வருடங்களுக்கு முன் நான் பாரிஸ் சென்ற போது எனக்கு இந்த தொழில்நுட்பம் அறிமுகமானது. எப்படி என்று சொல்வதற்கு முன் GPS எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கலாம். நம் முன்னோர்கள் இடங்களை குறிக்க பெரிய நினைவு சின்னங்கள், வரைபடங்கள், நட்சத்திரங்களின் அமைப்பு போன்றவற்றை அடையாளமாக உபயோகித்தார்கள். இன்று 4000 ரூபாய்க்கு ஒரு GPS சாதனம் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று சுலபமாக சொல்லும். [%image(20050818-gps_27satellite.jpg|300|199|GPS Satellite)%]   (Photo courtesy U.S. Department of Defense) (Artist's concept of the GPS sat