Skip to main content

பெண்களூர் *


நான் சென்னையிலிருந்து பெங்களூர் வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் இருந்த எனக்கு பெங்களூர் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.


1. பூஜை போட்ட கையோடு சுவற்றில் fluorescent கலரில் சினிமா விளம்பரங்களை பார்க்க
முடிவதில்லை.


2. இட்லி தோசைக்கு வெல்லம் கலந்த சாம்பார் தருகிறார்கள்(எம்.ஜி.ரோடில் உள்ள பிருந்தாவன்
ஹோட்டல் தவிர).


3. சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் லாப்டாப் வைத்திருக்கிறார்கள்.


4. ஆட்டோக்கள் மீட்டர்க்கு மேல் பெரும்பாலும் காசு கேட்பதில்லை.


5. பைரேட்டட் புத்தகங்கள் எங்கும் கிடைக்கிறது. The Da Vinci Code, Mein Kampf by Adolf
Hitler, My Life - Clinton தற்போது விற்பனையில்.


6. பெங்களூருக்கு போனால் கன்னடம் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
இங்குள்ளவர்கள் பெரும்பாலோர் தமிழ்த்தான் பேசுகிறார்கள். தமிழில் பேசினால் புரிந்து கொண்டு
பதில் சொல்கிறார்கள் - கொஞ்சம் வேடிக்கையாக.(உதாரணம்- "நாங்களுக்கு எரடு ரூபாய் கொடுத்தாரு" என்றால் "எங்களுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தார்")


7. பெங்களூர் பஸ் போக்குவரத்து மோசம் என்று கூறுவது சரியில்லை. மிகவும் மோசம் என்று
கூறுவதுதான் சரி.


8. பெங்களூரில் மழை எப்போது பெய்யும் என்று சொல்லமுடிவதில்லை.


9. நீங்கள் பெங்களூர் வாசி என்றால் கட்டாயம் ஒரு jacket அணிந்திருக்க வேண்டும்.


10. பெங்களூரில் எல்லாமே இரட்டை இரட்டையாகத்தான் இருக்கிறது. சிட்டி ஸ்டேஷன்-கண்டோன்மெண்ட் ஸ்டேஷன். லால் பாக் - கப்பன் பார்க். சிட்டி மார்கெட்- கண்டோன்மெண்ட் மார்க்கெட்.


பெங்களூர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது என்பதற்கு பல காரணங்கள் கூறுகிறார்கள். எம்.ஜி.ரோட்டுக்கு ஒருமுறை போய் வந்தால் இதை பெங்களூர் என்பதைவிட பெண்களூர் என்று
கூறுவது சரியாக இருக்கும் !


* பெண்களூர் பெயர் உதவி 'சாவி'



Old Comments from my previous blog.


உங்களுடைய இந்தப் பதிவை படித்துக்கொண்டிருக்கும்போதே, தேசிகன் மறைந்து சுஜாதா எட்டிப்பார்க்கிறார். குறிப்பாக இதில்:


பெங்களூர் பஸ் போக்குவரத்து மோசம் என்று கூறுவது சரியில்லை. மிகவும் மோசம் என்று கூறுவதுதான் சரி.


வாழ்த்துக்கள்.


By அன்பு, at Thu Oct 07, 10:08:14 AM IST  


அந்த டிராஃபிக் ஜாம்களைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. அவை தான் பெங்களூரில் மிக மிக மோசம். :-((


By மீனாக்ஸ், at Thu Oct 07, 10:36:11 AM IST  


>2. இட்லி தோசைக்கு வெல்லம் கலந்த சாம்பார்
>தருகிறார்கள்(எம்.ஜி.ரோடில் உள்ள பிருந்தாவன்
>ஹோட்டல் தவிர).


அல்சூர், கோரமங்களா பக்கம் சில ஹோட்டல்களில் நல்ல சாம்பார் கிடைக்கும் (இது போன்ற டிப்ஸ் கிடைக்க பெண்களூரில் ஒன்றிரண்டு பேச்சிலர்களைத் தெரிந்துகொள்வது அவசியம்) :-).


உங்கள் லிஸ்டில் பெண்களூரின் தனித்தன்மைகள் சில மிஸ்ஸிங் (டிராஃபிக் ஜாம், குழியோர ரோடுகள், வேகத்தடைகள், தெரு நாய்கள் ....) :-(


By Kannan, at Thu Oct 07, 12:06:20 PM IST  


நான் "பெண் galore" என்று சொல்வது வழக்கம்!


By S.K, at Thu Oct 07, 12:41:17 PM IST  


//பெங்களூரில் எல்லாமே இரட்டை இரட்டையாகத்தான் இருக்கிறது//


அப்டியா? அப்போ ஒருக்கா பெண்களூரு போயி வரணும் ;-)


By KVR, at Thu Oct 07, 03:17:44 PM IST  


மற்ற நேரங்களில் ஃப்ரீயாக இருக்கும் கடவுள்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் முண்டியடிக்கும் கோவில் கூட்டம்; ரெக்ஸ், லிடோ, ப்ளாஸா ஆங்கிலப் படங்களுக்கு காத்திருப்போர்; ஆறு மணிக்கு மக்களை விரட்டும் கப்பன் பாக் போலீஸ்; என்று இன்னொரு லிஸ்ட் போடுங்க சார்....


By Boston Bala, at Fri Oct 08, 02:55:48 AM IST  


தேசிகன்,


வாசம் எங்கே ? ஆபீஸ் எங்கே ?


மறந்தும் போய் சுக்.சாகர், சாந்தி சாகர் போன்ற உணவகங்களில் சாப்பாடு சாப்பிட செல்லாதீர்கள்.. அவை டிபன் சாப்ப்பிடவும், காபி (அருமையாக இருக்கும் எல்லா கையேந்தி பவன்களிலும்) அருந்தவும் மட்டுமே. எம்.டி.ஆர் சாப்பாடு எல்லாம் இப்போ மவுஸ் இழந்துவிட்டது. க்வாலிடி ஆப் சர்வீஸும் சரியில்லை.


மல்லேஸ்வரத்தில் இருந்தால் - சம்பிகே தியேட்டர் எதிர்புறம் உள்ள மாமா மெஸ்ஸில் சாப்பாடு ட்ரை பண்ணவும். நமது தமிழக சாப்பாடு போல் கிடைக்கும்.


குடையோ ஜெர்கினோ இல்லாமல் எங்கும் வெளியே கிளம்பவேண்டாம். தினமும் மாலையில் மழை பெய்யும்.. அதிகாலை எட்டு மணி வரை குளிரும்..


பெருமாள் கோயில்களுக்குச் செல்லவேண்டுமென்றால் தனி மடல் எழுதவும். மிக அருமையான கோயில்கள் உள்ளன. மல்லேஸ்வரம், பனஷங்கரி, ஜே.பி. நகர் (இங்கு ரங்கநாதரும் உண்டு).


குமார். வி


By Anonymous, at Wed Oct 13, 01:37:25 PM IST  

Comments